பகுத்தறிவிற்கு சவால்(8)
ஏழு,எட்டு வருஷங்களுக்கு முன் சென்னையில் நான்பணி
புரிந்து கொண்டிருந்த நாட்களில் ஒரு ஞாயிறன்று மாலை
வீட்டில் அமர்ந்து நான் பி.பி.ஸி. தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றைப் பார்த்தேன். ஒரு விபத்தில் மூளை பழுதாகிப்
போன நிலையில் உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாத
நிலையில் ‘’டெர்மினல் பேஷண்ட்ஸ்’’ சிகிச்சை பெறும்
ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றின
குறும்படம் அது. ஆறுமாதங்கள் முன்வரை மிக கெட்டிக்காரி
யாக ,ஒரு நிருவனத்தை திறமையுடன் நடத்திவந்த அந்த
35 வயது பெண்மணி,. விபத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன்
அவராக ஒரு’’அட்வான்ஸ் டைரக்டிவ்’’ என்ற ஒரு சட்ட
ரீதியான வேண்டுகோளைத் தயார் செய்து வைத்திருந்தார்.
எந்தக் காரணத்திலாவது தனக்கு மூளைச்சேதம்ஏற்பட்டதென்றால், தனக்கு
சிகிச்சை அளிக்கப்படாமல் கௌரவமாகச் சாக விடவேண்டும்
என்று.. விபரீதமாக விபத்தில் அவரது மூளை சேதப்பட்டு,
சதைப் பிண்டமாக வாழ நேர்ந்தபோது ,மருத்துவர்கள் அவரது
வேண்டுகோளை ஏற்க மறுத்தார்கள். அது மருத்துவ தர்மத்துக்கு
விரோதம் என்றார்கள். அவருடைய சினேகிதிகள் அவள் விருப்பபஃபடி கௌரவமாக சாக விட வேண்டும் என்று
வாதிட்டார்கள். அவளை நான் எப்படி சாக விடுவேன் என்று
கணவர் அழுதார்.
இந்த நிகழ்ச்சி என்னை விநோதமாகப் பாதித்தது.
அப்போது என் தாய் மும்பையில் ஆரோக்கியமாக இருந்தார்.
ஏதோ ஓர் உந்துதலில் சிக்கியவள்போல் என் தாயை அப்படிப்
பட்ட மூளை செயலிழந்த ஒரு நோயாளியாகச் சித்தரித்து
ஒரு சிறுகதை ‘’இது ஒரு ஆணை’’ என்று தலைப்பிட்டு
‘’இந்தியா டுடே’’ வுக்கு எழுதினேன். எழுதியபோது எனக்கு
அல்ஜைமர் என்ற வியாதியைப் பற்றித் தெரியாது. அதனால்
பாதிக்கப் பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும் தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து என் தாய் என்னுடன்
வசிக்க சென்னைக்கு வந்தார். அம்மா சற்று உடல் நலிந்து
காணப் பட்டார். நான் அலுவலகத்துக்குச் செல்லும்போது
அவர் வீட்டில் தனியாக இருப்பாரே என்று வீட்டோடு ஒரு
பணிப்பெண்ணை அவரைப் பார்த்துக் கொள்வதற்காகவே
அமர்த்தினேன். படிப்படியாக என் தாயின் உடல்நிலையில்
மாற்றம் ஏற்பட்டது. டாக்டர் அல்ஜைமர் வியாதி என்றார்.
எனக்கு அதிர்ச்சி அளித்த்து அதுமட்டுமல்ல.