Pages

Friday, October 28, 2011

பகுத்தறிவிற்கு சவால்(2)

என் மகன் ரவியைவிட இரண்டு மூன்று வயதே மூத்தவனாக

இருப்பான் என்று பட்டது.

அவன் சற்று நேரம் எனது எழுத்தில் அவனுக்கு இருந்த

ஈடுபாட்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போனான். எந்த

ஊரில் இருந்தாலும் நீங்கள் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும்

படிக்கத் தவர மாட்டேன் என்றான். முகஸ்துதிக்குப் பழக்கமில்லாத எனக்குச் சற்று கூச்சமாககஃ கூட இருந்த்து.

அவன் நிறைய வாசிப்பு அநுபவம் கொண்டவனாக இருந்தான்.

மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப்பற்றி விலாவாரியாக அலசினான்.

‘’உங்கள் எழுத்தில் சத்தியம் இருக்கிறது’’ என்றான் திடீரென்று அழுத்தமாக. நான் சிரித்தேன். விடலைச் சிறுவன்

போல அவன் பேசுவதாகத் தோன்றிற்று. யௌவன பருவத்தில்

எனது ஆதர்ச எழுத்தாளர்கள் மீது நான் கொண்டிருந்த காதல்

நினைவுக்கு வந்த்து.

‘’உங்களை வீணாகப் புகழ்வதாக நீங்கள் நினைக்க்கஃ

கூடாது.’’ என்றான் மகாதேவன். ‘’உங்கள் எழுத்தில் ஒரு தீர்கப்

பார்வை இருக்கிறது. பாமரனுக்குப் புலப்படாத்து உங்களுக்குப்

புலப்படும்னு நா நினைக்கிறேன் அதனாலதான் உங்களை அவசி

யமா பார்த்து என் கதையைச் சொல்லணும்னு வந்தேன்.’’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கதை என்றதும்

தேநீர் சிற்றுண்டி கொடுத்து உபசரித்தேன்.

‘’என் கதை வித்திரமானது. நிறைய கேள்விகளும்

முடிச்சுகளும் கொண்டது. ஏன் அப்படியெல்லாம் நடந்ததுன்னு

எனக்குப் புரியல்லே. உங்களுக்குப் புலப்படும்னு நா நிச்சயமா

நம்பறேன்’’ என்றான் அந்த இளஞன் தீவிரத்துடன்***********

2 comments:

  1. கதை எழுதுபவருக்கே கதை சொல்ல ஒருவர் வந்தாரா சுவாரசியம்தான்.

    ReplyDelete
  2. தன் வாசகரை எவ்வளவு மதிக்கிறார்.
    வருகைக்கு நன்றி அம்மா

    ReplyDelete