பகுத்தறிவிற்கு சவால்(4)
அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களால் மீண்டு வர
முடியவில்லை. அம்மாவின் தற்கொலைக்கு, மூத்த
பிள்ளை இறந்ததுக்கத்தைப், பெற்றவளால் தாங்க
முடியவில்லை. என்ற கிராமத்தாரின் விளக்கத்தை
அவர்களால் ஏற்கமுடியவில்லை. தங்களைக் கவனிக்க
வேண்டிய பொறுப்பு இருக்கும்போது அம்மா எப்படி,ஏன்
சாகத் துணிந்தாள் என்கிற அவர்களது கேள்விக்கு பதில்
சொல்ல யாருக்கும் தெரியவில்லை. இது உடல் ரீதி
யாகவும் அவர்களைப் பாதித்த்து. அவனுடைய தங்கைக்கு
25 வயதாகியும் பூப்பெய்தவில்லை. பல மருத்துவர்களைப்
பார்த்தாகிவிட்டது. கோளாறு ஏதுமில்லை என்கிறார்கள்.
அவனுக்குத் திருமணம் செய்துகொள்வதற்குப் பயமாக
இருக்கிறது. தன்னால் தாம்பத்திய வாழ்வு வாழமுடியுமா
என்கிற கவலை வாட்டுகிறது.
கதையை முடித்துவிட்டு மகாதேவன் என்னைக்
கேட்டான். ‘’என்னுடைய அம்மா ஏன் தூக்குப் போட்டுண்
டான்னு நீங்க சொல்லமுடியுமா?’’
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.அவனது கதையும்
அதை அவன் சொன்ன விதமும் என்னை மிக ஆழமாகப்
பாதித்தlது. ஆனால் அவனுடைய கேள்வி அபத்தமாகப்
பட்டது.
‘’நான் எப்படிச் சொல்லமுடியும்’’என்றேன்.
‘’ உன்னையே. இப்பத்தான் ஒரு மணி நேரமா பழக்கம்.
எனக்குத் தெரியாத ,நான் பார்த்துப் பழகாத உன் அம்மா
இருபது வருஷத்துக்கு முன் தற்கொலை செய்துண்டது
ஏன்னு எப்படிச் சொல்லுவேன்?’’
‘’உங்க புத்திக்குப் புலப்படும்னு நா நம்பறேன்
மேடம்’’ என்றான் அவன்.
அவன் ஒரு கிறுக்கன் என்று எனக்கு ஆயாசம்
ஏற்பட்டது.
எழுத்தாளர்மேல் என்ன ஒரு நம்பிக்கை அவனுக்கு.
ReplyDeleteஉண்மைதான். வருகைக்கு நன்றி அம்மா.
ReplyDelete