இந்தத் தடவை காலேஜூக்கு வரும் போது தேசிகாச்சாரி மார்பைத்
தொட்டுத் தடவிக்கொண்டது,கட்டாயம் பாஸ் செயதுவிடுவாயல்லவா?
என்று கேட்டது, அனபாகப் பேசினது எல்லாம் அவனை விவரிக்க முடியாதபடி
மிக வருத்தி வேதனைப் படுத்தின.
வேதாந்தம் நன்றாக வாசிக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டான்.
அப்படி இவன் உறுதி செயது கொண்டது முதல் தடவைஅல்ல. ஆனால் பாடபுத்தகங்களை எடுத்தால் வேம்பாக்கஃ கசந்தன. நாளைக்கு நாளைக்கு என்று ஒத்திப போட்டு, ஒரு வருஷம் ஏழுமாதங்களைத் தள்ளி விட்டான்.
மணி அடித்த பிறகும் போர்டுடன் போராடிக் கொண்டு நிறகும் கணக்குப் பரொபஸர் அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தார்.ஸ்பெஷல் கிளாசுகள் வைத்துக கொளவதாகச் சொன்ன இங்கிலீஷ் லெகசர்ரஃ, தலைவேதனை அளிப்பதாக அவனுக்குப்பட்டது. யாரானும் இன்ன பக்கங்களை மட்டும் படித்துக்கொள்,மூன்று மணி பரிடசைக்கு அதறகு மேல் தேவை இல்லை என்று இப்போது சொல்லியிருந்நால், அவன் தன் ஆஸ்தியில் பாதியை
அவருக்கு சந்தோஷமாக எழுதிக் கொடுத்திருப்பான்.
ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொண்டு மேலதுண்டு கூட இல்லாமல் , கிழிசல் காக்கிச் சட்டையுடன் பலமைல்கள் நடந்து வந்து கொண்டிருந்த இரண்டு பையனகள் போட்டி போட்டுக் கொண்டு அதுதான் வரும், இது நிச்சயம்
வரும், பார்1’’ என்று பேசிக் கொண்டவை எல்லாம் அவனுக்குப் புரியாத புதிர்களாக இருந்தன.
‘’என்ன வேராந்தம், எந்தமட்டில் இருக்கிறது, உன் பிரிபரேஷன் எல்லாம்?’’
என்று ஒரு புரொபசர் அவனை வழியில் அகஸமாத்தாககஃ கண்டு விசாரித்தார்.
எனக்கு மூன்றாம் கிளாஸ் கிளாஸ் கிடைத்தால்கூடப் போதும் சார்! எங்க அப்பா முதல் கிளாஸ், இரண்டாம் கிளாஸ் என்று கேட்பவர் இல்லை.
என் பெயருக்குப் பின்னால் பி.ஏ. என்று இரண்டு எழுத்துப் போட்டுக் கொள்ள
வேண்டியது, அவ்வளவுதான் அவருக்கு!’’ என்று ஒரு கித்தாப்புடன் சொல்லிக் கொண்டான்.
அவர் சிரித்துக் கொண்டே போனார். இரண்டாம் கிளாசுக்குத் தயார் செயது
கொண்டு போகிறவர்களுக்குத்தானே நிச்சயம் மூன்றாம் கிளாஸாவது
கிடைக்கும்?
வேதாந்தம் வாசிக்கவே இல்லையென்று சொல்ல முடியாது. விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு படித்தான்.கணகள் முன் வார்த்தைகள் வரிவரியாக ஓடின.
அவ்வப்போது புரிந்து கொள்கிறமாதிரியும் தோன்றியது. ஆனால் ஒன்றாவது
நிறகவில்லை. அந்த நேரத்தில் அவன் ஏதேனும் துப்பறியும் நாவல்களைப் படித்திருந்தால்கூட உபயோகமாக இருந்திருக்கும். பொழுதாவது இன்பமாக ஓடியிருக்கும்.
(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)
Friday, December 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)
எல்லா வசதிகளும் செய்துகொடுத்தாலும் ஏந்தான் படிப்பில் கவனம் செலுத்தமுடியாம இருக்காங்களோ?
ReplyDeleteஎது கேட்டாலும் கிடைத்துவிட்டால் , செல்லமும்
ReplyDeleteஅதிகமாக்கஃ கொடுக்கப்பட்டால், படிப்பின் அருமை தெரிவதில்லை.நன்றி அம்மா