Pages

Monday, November 14, 2011

உண்மை(யாகிப் போன) கதை-5

புனரபி ஜன்னம்

புனரபி மரணம்

புனரபி ஜன்னீ

ஜடரே சயனம்

இதிசம்சாரே பஹு துஸ்தாரே

க்ருபையா பாரே பாகிமுராரே

க்ருபையா பாரே என்னும்போது மீண்டும் கண்ணில்

நீர் நிறைந்தது. இதை இனிமேல் பாடக்கூடாது என்று

நினைத்துக் கொண்டேன்.ஆதிசங்கரருக்கு ஜனனம்,

மரணம்,இரண்டைப் பற்றிதான் தெரியும். உயிர் இருந்தும்

நிகழும் மரணங்களைப் பற்றித் தெரியாது.அது ஏற்படுத்தும்

குழப்பங்களைப் பற்றி தெரியாது. குழப்பங்கள் ஏற்படுத்தும்

பீதிகளைப் பற்றித் தெரியாது.

புடவைக்குத் தகுந்த ரவிக்கை அணிவது அம்மா

வுக்கு முக்கியமாக இருந்த்து. பார்ப்பதற்கு அம்சமாக

இருப்பது கௌரவப் பிரச்சனையாக இருந்த்து.வீட்டில் ஒரு

சாமான் இல்லை என்று சொல்வது அகௌரவம் என்று

நினைத்தவள் , மண்டையே காலியாகி வள்ளியின் தயவில்

உயிர் வாழ்வது எப்படி இருக்கும் என்று இரண்டுவருஷம்

முன்பு வரை நாட்டு அரசியலைப் புட்டுப் புட்டு வைத்த

அம்மா நினைத்திருக்க மாட்டாள். நினைத்திருந்தால் என்ன

செய்திருப்பாள் என்று இப்போது யோசனை செய்வது முட்

டாள்தனம் என்று நான் நினைத்துக் கொண்டேன். இவையெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்

என்று சோர்வேற்பட்டது. நான் மீண்டும் அம்மாவிடம்

சென்ற போது வள்ளி சாப்பாடு கொடுக்கும் ஆயத்ததஃதில்

இருந்தாள்.

‘’ஆயா சாப்பிட மாட்டேங்குது’’ என்றாள்.

‘’சாப்பாட்டிலே உப்பு போட்டிருக்கமாட்டே’’

‘’ இல்லம்மா. போட்டிருக்கிறேன் சாப்பிட்டுப்

பாருங்க’’

நான் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுப் பார்த்தேன். சரியாகத்தான்

இருந்த்து.அதாவது உப்பிருந்த்து. ருசியில்லாத பத்தியச்

சாப்பாடு. நான் கொடுத்துப் பார்த்தேன். அம்மா துப்பினாள்.

சரி,இனிக்கு ஏதோ பிடிக்கல்லே போலிருக்கு.,விடு’’

என்றேன். அம்மா என்னைப் பார்த்த பார்வை என்னை

என்னவோ செய்தது. மருந்தையும் துப்பினாள்.

‘’ என்ன வள்ளி இது’’ என்றேன் குழப்பத்துடன்..

‘’ சில நாளைக்கு அப்படித்தான் துப்புது நாளைக்கு

சரியாகும். கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிட்டுப் படுங்க’’

என்றாள் வள்ளி.

மறுநாள் சரியாகவில்லை. அம்மா தொடர்ந்து

சாப்பாட்டையும் மறுத்தாள். மாலையில் நான் அம்மாவின்

எதிரில் நிற்கும்போது அம்மா என் பார்வையைத் தவிர்த்தாள்

வள்ளி அருகில் இல்லாதபோது அம்மாவின் கைகளைப் பிடித்து

நான் சுய இரக்கத்தில் கரைந்தேன்.

என்னை மன்னிச்சுக்கோ அம்மா. என்னைப் புரிஞ்சுக்கோ.

ஸாரிம்மா ஸாரி;’’

அம்மா திரும்பவே இல்லை.

.’’ டாக்டரைக்.கூப்பிடல்லியாம்மா? என்றாள் வள்ளி.

இதுக்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாதுங்கராங்க

டாக்டர்.’’ என்று புளுகினேன். அதற்கு பிராயச்சித்தமாக அம்மாவின் கைகளைப் பிடித்தபடி ‘’ஸாரி’’ என்றேன்.

அம்மாவை சக்கர நாற்காலியில் உட்கார்த்த முடியாத அளவுக்கு

சோர்ந்து போனாள். நான் அலுவலகத்திற்கு லீவு போட்டேன்.

இரவும் பகலும் கண்அயராமல் அம்மாவின் அருகிலேயே

இருந்தேன். ஒரு ஸ்பூன் நீரையும் விழுங்க மறுத்தாள் அம்மா.

‘’ஆயா ரொம்ப புண்ணியம் பண்ணித்தான் உங்களைப்

பெத்திருக்கணும்.’’ என்றாள் வள்ளி.

அம்மாவின் மூச்சு மெல்ல அடங்குவதை சலனமில்லாமல் பார்த்தேன். அம்மா சாக வேண்டிய நேரம்

வந்தது. அதனாலேயே இறந்தாள் என்று நான் வேதாந்தம்

பேசினேன். அன்று நான் பேசியதை அம்மா நிச்சயம் கிரகித்துக்

கொண்டிருக்க மாட்டாள் என்று திரும்பத்திரும்ப,தினமும் தூக்கம்

வராத இரவு நேரத்தில் சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு உபாதைக்காக

டாக்டரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. கையில் ஒரு ஆவணத்தை எப்பவும் வைத்திருக்கிறேன். டாக்டரின் பார்வைக்கு, இது ஒரு ஆணை. ‘’தீரமுடியாத வியாதி எனக்கு

வந்துவிட்டால்,மூளை செயலிழந்துவிட்டால் எனக்கு எந்த சிகிச்

சையும் டாக்டர்கள் அளிக்க்கஃ கூடாது’’. டாக்டர்கள் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள். மீண்டும் மருத்துவ தர்மத்தைப் பற்றி கேசுகிறார்கள். ‘’இது என் ஆணை’’ என்ற கத்தலுக்கு

‘’சரிசரி’’ என்று அவசரமாக சமாதானப் படுத்துகிறார்கள்.

இன்றும் அப்படிக் கத்தினேன், ஒரு இதய அறுவை

சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார்கள். அம்மாவின் நினைவு வருகிறது. அம்மா அப்படித்தான் தியேட்டருக்குள் போனாள்.

வெளியில் வந்த போது காணாமல் போயிருந்தாள்.

டாக்டர், என்னை சாக விடுங்கள். எனக்கு சக்கர நாற்காலி

வேண்டாம்.-வள்ளி வேண்டாம்-மாக்ஸி வேண்டாம் வேண்டாம்

வேண் -------

******************************************************-.

Sunday, November 13, 2011

உண்மை(யாகிப் போன) கதை-4

டி.வி ஓசை நின்றிருந்த்தில் என்னுடைய குரல்

பலக்க ஒலித்த்து. நான் சட்டென்று சுயநினைவுக்கு

வந்தேன். வள்ளி ஓசைப்படாமல் வந்து நின்றிருந்நாள்

என்னுடைய பிரலாபங்களைக் கேட்டிருப்பாளோ என்று

எனக்குத் துணுக்குற்றது.

‘’ஆயாவைப்பற்றி கவலைப்பட்டு அழறீங்களா?’’

என்றாள்.

என்னைப் பத்திக் கவலைப்படுகிறேன் என்று

சொல்ல வெட்கமாக இருந்த்து. மிக கேவலமான

உணர்வுகளில் கரைந்து போனேன் என்று சொல்லக்

கூச்சமாக இருந்த்து.

‘’எப்படி இருந்தவங்க எப்படி ஆயிட்டாங்க!’’

என்று தலையைக் குனிந்து கொண்டு முணுமுணுத்தேன்.

‘’அதுக்கேன்ன செய்யறது?’’என்றாள் வள்ளி

சாதாரணமாக.’’ஒவ்வொத்தருக்கு ஒரு வியாதி வருது.

இவங்களைப் பாத்துக்க நீங்களாவது இருக்கீங்க. பாத்துக்க

நாதியில்லாம எத்தனை ஜனம் இருக்கு!’’

நான் எழுந்தேன். தலை அசாத்யமாக வலித்த்து.

‘’நா குளிச்சிட்டு வரேன். அப்புறம் அம்மாவுக்கு

சாப்பாடு போடலாம்.’’ என்று அம்மாவின் பக்கம் திரும்பாமல்

நடந்தேன். அலமாரி,மேஜை,ஸ்டூல் எல்லா இடங்களிலும்

மருந்துக் குப்பிகள். மாத்திரைப் பட்டைகள். ஒவ்வொரு

செக்கப்பின்போதும் புதிய மருந்துகள். பழசைவிட வீர்யமான

மாத்திரைகள். அமெரிக்காவிலிருந்து,இங்கிலாந்திலிருந்து

வரவழைக்கப்பட்ட மருந்துகள்.

‘’எதுக்கு டாக்டர் இத்தனை மருந்துகள்?’’

‘’மருத்துவ ரீதியா செய்ய முடிஞ்சதையெல்லாம்

செய்து பாத்துடணும்.. அதுதான் மருத்துவ தர்ம்மஃ’’

அவள் வயிற்றில் பிறந்த காரணத்தால் உன்

தர்ம்மஃ கூட என்று சொல்வதுபோல. மானுட தர்மம். இந்த

தர்மங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு என் அம்மாவை கௌரவமாக என்று சொல்லத் தயக்கமாக இருந்த்து.

மருத்துவர்களிடமும் மருந்துகளிடமும் அம்மா படுக்கையில்

கழிக்கும் மலத்திடமும் வகையாக மாட்டிக் கொண்டதுபோல

நான் தடுமாறிப் போனேன். அதனால்தான் சூட்சுண அனிவு செத்துப்போன அம்மாவிடம் தயக்கமில்லாமல், தடுமாறாமல்

‘’நீ போயிடு’’ என்கிறேன். செத்துப் போயிடு.

அம்மாவின் குத்திட்ட பார்வை என்னைத் தொடர

நான் குளியலரைக்குச் சென்றேன். ஷவருக்கடியில் நின்ற

போது காலையில் அலுவலகத்தில் மாட்டியிருந்த கம்பீரக்

கவசம் பொலபொலவென்று உதிர்ந்த்து.ஆண்களும் பெண்களும்

கொறாமைப் படும் எக்சிகியூடிவ் வேலை.மேடம் மேடம் என்று

எட்டி நின்று மரியாதையுடன் கேசவைக்கும் பதவி.

கிராமத்துப் படிப்பறிவில்லாத பெண்கள் மார்பிலும்

வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவதைப்போல அழத் தோன்றிற்று. அப்படித்தான் மனதிலிருக்கும் பாரமெல்லாம்

போக முடியும். சடசடவென்று குளிர்ந்த நீர் தலையிலிருந்து

பாதம்வரை வழிந்து மனத்தின் சூட்டையும் கண்ணின் நீரையும்

தணிக்கையில் தலையை உசுப்பிக்கொண்டு பெரிய குரலில்

பாடினேன்.

‘’நா இறக்கை முறிஞ்ச மாதிரி வந்து நின்னப்ப

நீதானேம்மா தைரியம் கொடுத்தே. உன் அருமை

அந்த மனுஷனுக்குத் தெரியலேன்னா விடுன்னே.

வாழ்க்கையிலே சாதிக்க வேண்டியது எவ்வளவோ

இருக்குன்னே. நாமெல்லாம ஏதாவது சாதனைக்காகப் பொறந்திருக்கோம்னே. நீ கொடுத்த தைரியம்தான்

இப்ப நான் இவ்வளவு வளர்ந்திருக்கேன். நீ இல்லேன்னா,

நான் இல்லே’’ நான் சற்று நிறுத்தினேன். குரல் தழு

தழுத்த்து. உணர்ச்சி மேலிட்டு கன்னத்தில் முத்தம்

கொடுத்தேன்.

புல்தரையில் சொர்ரென்று நீர்விழும் சத்தம்

கேட்டு நான் என் நாற்காலியைப் பின்னுக்கு சரேலென்று

நகர்த்தி எழுந்தேன்.அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலியிரிருந்து

வெளிப்பட்டதை சற்றுநேரம் ஏமாற்றத்துடன் திகைத்துப்

பார்த்தபடி நின்றேன். தோற்றுப்போனவளின் துக்கத்தோடு

அம்மாவின் சக்கரநாற்காலியை வீட்டை நோக்கி நகர்த்தினேன்

டி.வி யிலிருந்து பார்வையைவிலக்கி வள்ளி என்னைப்

பார்த்தாள்

‘’அம்மாவுடைய டிரஸ்ஸை மாத்தணும் வள்ளி’’

‘’ஓ வரேன்’’ என்று மனசில்லாமல் வள்ளி எழுந்தாள்.

உடைமாற்றும்போது நான் இல்லாத சமயத்தில் இவள் அம்மாவைக் கெட்டவார்த்தை சொல்லித் திட்டுவாள் என்று

நினைத்துக் கொண்டேன். பாத்ரூமுக்கு வண்டியைத் தள்ளி

நனைந்த உடுப்பைக் கழற்றுவதற்குள் எனக்கே இடுப்பு விண்டு

போனது. மூத்திரவாடை குடலைக் குமட்டிற்று. நிர்வாண உடம்பை நீர்விட்டுக் கழுவி பவுடர் போட்டு இன்னொரு மாக்ஸி

யை உடுத்தி தலையைச் சீவியதும் அம்மா பொம்மைபோல்

சிரித்தாள். ‘’சீச்சீ,சிரிக்காதீங்க....செய்யறதையும் செஞ்சிட்டு’’

என்று வள்ளி அதட்டினாள். தான் ஏதோ ஹாஸ்யம் சொன்னது போல பிறகு என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் அவமானத்தில்

குன்றிப் போனேன்.

‘’ நம்ம மேலதான் தப்பு. மணி பார்த்து பாத்ரூமுக்கு

அழைச்சிட்டுப் போயிருக்கணும்.’’ என்றாள் வள்ளி.

நான் இல்லாத நேரத்தில் செய்கிறாள். அதற்குத்தான் சம்பளம். வள்ளிக்கு அவமானமில்லை. துக்க

மில்லை.இழப்பில்லை.

‘’மறுபடி தோட்டத்துக்குக் கொண்டு போகவா?

‘’ வேண்டாம். இருட்டப் போகுது. இங்கேயே வராந்தாவிலே உட்கார்ந்துக்கறேன். அம்மாவோட’’’ என்றேன்.

படுக்கையறையை ஒட்டிய வராந்தாவில் நாற்காலியை நகர்த்திவிட்டு வள்ளி மீண்டும் டி.வி.யின் முன்

என் அனுமதியுடன் அமர்ந்து கொண்டாள். நான் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அம்மாவின் அருகில் இருப்பதையே

விரும்பினேன். இல்லாத நேரங்களிலெல்லாம் வாட்டிய குற்ற

உணர்வுக்கு வடிகால் தேவை. டி.வி. சத்தத்தைத் தவிர்க்க நான்

படுக்கையறைக் கதவை சாத்திவிட்டு டேப் ரிக்கார்டரில் கேசட்டைப் போட்டேன். பாட்டு அலைஅலையாக வராந்தாவில்

நுழையும்போது அம்மாவிடம், ‘’சௌம்யா பாடராம்மா’’ என்றேன்.

சின்னப்பொண்ணு, எப்படிப்பாடரா பத்தியோ?’’ அம்மா மறுக்கவில்லை. பாட்டை ரசிக்கும் தோரணையில் கண்ணை

மூடிக் கொண்டாள். எனக்கே கண் அயர வேண்டும்போல்

இருந்தது. நானும் அம்மாவும் அருகருகில் சங்கீதஃத்தை

ரசித்தபடி அமைதியான இந்த மாலை நேரத்தில் அமர்ந்திருக்கும்

காட்சி என்னையே ஏமாற்றிற்று. வள்ளி வியப்பது போல எந்த

விபரீதமும் நடக்காதது மாதிரி- சரசரவென்று இருள் பரவுவது

தெரியாமல் மோனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம்.

தோட்டத்து மரங்களிலிருந்து எழும்பிய பட்சிகளின் ஆரவாரம் என்னை உலுக்கிற்று. சாமிக்கு விளக்கேத்தணும் என்று

என்னையறியாமல் நான் முணுமுணுத்தபோது அம்மா சொல்வது

போல இருந்த்து. கண் மூடிய நிலையில் பிரும்ம் போல உட்கார்ந்திருந்தாள் அம்மா. திடீரென்று ஆயாசமும் நிராசையும்

என்னைக் கவ்வின. ஜனனத்திலிருந்து இன்றுவரை சுமந்த பாரங்

களை இறக்கி வைக்க நேரமில்லாமல் போனது போன்ற ஆயாசம். அம்மா தன் பாரங்களை என்மேல் சுமத்திவிட்டதன்

நிராசை. இது நியாயமில்லே என்று கத்த வேண்டும் போலி

ருந்த்து. அம்மாவைப் பார்க்கப் பார்க்க என்னுள் ஒரு பரிதவிப்பு

கனலைப்போல் நாடிநரம்புகளிலெல்லாம் பரவிற்று. நான் சாகும்

வரை அம்மாவின் ஆக்கிரமிப்பு என்னைத் தொடரப் போகிறது

என்று தோன்றியது. அம்மாவின் இஷ்டம் என்ன, எதிர்பார்ப்பு

என்ன என்று அவள் சொன்னதில்லை. வெளியில் சொல்லாமலே

அவற்றை அவள் சாதித்துக்கொண்டிருப்பதாகப் பட்டது.

அவளுடைய இஷ்டத்திற்கு விரோதமாக நடந்த என் திருமணம் ஒரு வருஷத்தில் முறிந்த்து உண்மையில் அவளுக்கு

லாபம்.’’பெத்த ரெண்டு பிள்ளைகளும் அமெரிக்காவோடு போயிட்

டான்கள். என்னை யார் பாத்துப்பா?’’என்ற அவளது பரிதவிப்புக்கு

விடை கிடைத்த்து. அமெரிக்காவில் இருப்பவன்களுக்கு நிம்மதி.

அன்றிலிருந்து இவளுக்கு நான். எனக்கு இவள். யார் யாருக்குக்

காவல் என்று புரியவில்லை. எனக்குள் இவளும், அவளுக்குள்

நானும் பிணைக்கப்பட்டிருப்பது போல் இருந்த்து.

இனம் புரியாத ஆத்திரத்தில் அவள் தோளை உலுக்க

வேண்டும்போல் இருந்த்து.

‘’உன்னைப் பார்த்துக்க நா இருக்கேன். எனக்கு யார்

இருக்கா?’’

திடீரென்று ஒரு ஆற்றாமை என்னை ஆட்கொண்டது.

எனக்கு யாரும் இல்லாத்தற்கு,எனது வெறுமைக்கு இவளே

காரணம் என்று தோன்றிற்று. வள்ளியின் எதிரே பதுங்கிக் கொள்ளும் ஆங்காரம் தனிமையில் கூச்சமில்லாமல் பீறிட்டது.

‘’எனக்கு யார் இருக்கா?’’

வராந்தாவுக்கு அப்பால் கவ்விய இருட்டைப் பார்த்தபடி

இருந்த அந்தக் கண்ணாடி முகத்தை நான் வெடுக்கென்று திருப்

பினேன்.

அம்மா என்னை அலங்க மலங்கப் பார்த்தாள்.

‘’ எனக்கு யார் இருக்கா?’’என்று அவள் தோளைக்

குலுக்கினேன். பகபகவென்று எனக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்த்து. அவள் தோளில் முகத்தை அழுத்தி,

‘’நீ போயிடு,.சீக்கிரம் போயிடு’’என்றேன்.’’என்னைக்

கேவலப் படுத்தாதே, என்னை அவமானப் படுத்தாதே, போயிடு,

எனக்குத் தாங்கல்லே, போயிடு....’’

அடக்கி வைத்த பிரவாகமாய்,முதுகு குலுங்கி,கண்ணி

லிருந்து நீர் வழிந்த்து.

நான் நிமிர்ந்தபோது குத்திட்ட பார்வையுடன் அம்மா

என்னைப் பார்த்தாள். ‘’நான் என்ன செய்யட்டும்?’’என்றேன்

குற்ற உணர்வுடன்.’’உன்னைப்பத்தி நல்ல நினைவெல்லாம்

எனக்கு மறந்து போச்சு. நீ படுக்கையை நனைக்கிறதுதான்

ஞாபகம் வருது. நீ என்னிக்கோ செத்துப் போயிட்டே..வெறும்

இந்த உடம்பைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. கொடுக்கிற

மருந்தெல்லாம் உடம்பைத்தான் வளர்க்கறது. எத்தனை தடவை

விழுந்திருப்பே? பொசுக்குனு போயிடக்கூடாதா? கிழத்துக்கு

உசிர் கெட்டிங்கறான் தோட்டக்காரன். என்ன புண்ணியம். ஏன்

என்னை வதைக்கிறே?’’

அம்மா என்னையே வெறித்துப் பார்த்தாள்.

‘’நா சொல்றது உனக்குப் புரியறதோ? எனக்கு யார் இருக்கா? என்னைப் பயமுறுத்தாதே.’’

Wednesday, November 9, 2011

உண்மை(யாகிப் போன) கதை-2

நான் எதுவும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்தேன்.

‘’முந்தா நாள் அப்படித்தான். திடீர்னு கட்டிலை விட்டு

இறங்கி நடக்க ஆரம்பிச்சாங்க.நா ஓடிப்போய் பிடிச்சுக்க

றத்துக்குள்ள கீழே விழுந்தாங்க. நா நடுங்கிப் போனேன்.

தோட்டக்காரனும் நானுமா எப்படியோ நாற்காலியிலே

உடகார்த்தி வெச்சோம். இப்படித்தான் எதுவுமே நடக்காத

மாதிரி ஆயா பார்க்குது. ஆயாவுக்கு உசிறு கெட்டின்னு

சொல்றான் தோட்டக்காரன்.’’

இதையெல்லாம் மூன்று நான்குதடவை இந்த

இரண்டு நாட்களில் வள்ளி சொல்லிவிட்டாள்.எண்பதுவயதுக்

கிழவிகள் வானத்தில் இடிஇடித்தால் உதிர்ந்துவிடும் சருகாய்

மாறிவிடுவதுதான் நியாயமானது. இயற்கையானது என்று

அவள் நினைப்பது போல் தோன்றிற்று. அவள் அன்று உண்மை

யிலேயே பயந்திருக்க வேண்டும்.

‘’ உனக்கு ஏதாவது செய்யணும்னா செய்யி,போ வள்ளி

நா அம்மாவைப் பார்த்துக்கறேன்.’’ என்றவுடன் அவள் நன்றிப்

பெருக்குடன் புல்தரையில் இருந்த மாலைமுரசை எடுத்துக்

கொண்டு உள்ளே சென்றாள்.

நான் அம்மாவின் நாற்காலிக்கு அருகில் எனதை

இழுத்துப் போட்டுக் கொண்டேன். அம்மாவின் தொடைமேல்

அசைவில்லாமல் இருந்த நலிந்த கைகளை மெல்ல வருடினேன்

ரோஜாவிலிருந்து பார்வையை விலக்கி அம்மா என்னைப் பார்த்தாள்.

ஆபீஸிலிருந்து வந்ததும் உடுப்பை மாற்றிக் கொள்ளாதது எனக்கு நினைவுக்கு வந்த்து அம்மாவுக்குப் பிடிக்காது. அம்மா ஆசாரமில்லை. ஆனால் தானே போட்டுக்

கொண்ட நியாயங்களுக்குக் கட்டுப் பட்டவள். சுத்தத்தில் வெறி

கொண்ட பற்றுடையவள். இப்போதுகூட வியற்வை நாற்றத்துடன்

யாராவது அருகில் வந்தால் மூக்கைச் சுருக்கிக் கொள்கிறாள்.

வீட்டிற்குள் நுழைந்த்தும், வெளியே செல்லும்போதும் உடுப்பை

மாற்றுவதில் எத்தனை கவனமோ அத்தனை கவனம் மாட்சிங்காக உடுப்பு அணிவதில்.. அம்மா புடவைக்குப் பொருந்தாத ரவிக்கை அணிந்து நான் பார்த்த்தில்லை. மாக்ஸி

அணிவது சுத்தமாகப் பிடிக்காது.ஒரு முறை ஆஸ்பத்திரியில்

ஒரு அறுவைசிகிச்சைக்காக இருந்தபோது ஆஸ்பத்திரி கவுனை

மறுத்து புடவைதான் வேண்டுமென்று ரகளை செய்துவிட்டாள்.

‘’அம்மா, அப்படி என்னைப் பார்க்காதே’’என்றேன்.

‘’இந்தப் புடவையைத் தோய்க்கணும்.நா அதனாலேதான் டிரஸ்ஸை மாத்திக்கல்லே.’’ என்று சிரித்தேன்.

அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை. நான்

அவளுடைய விரல்களை வருடியபடி அன்று ஆபீஸில் நடந்த

விஷயங்களையெல்லாம் சொன்னேன். எல்லாவற்றையும்

தெரிந்துகொள்ள அம்மாவுக்கு ஆசை.. ஆபீஸ் விஷயம் முடிந்ததும் அரசியல் பேசினோம். வர்ர தேர்தல்லே நரசிம்ம

ராவுக்கு ஜெயிக்க சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறியா?’’ என்று

கேட்டேன். அம்மா சிரித்தாள். அம்மா முன்பு தீவிர காங்கிரஸ்

பக்தை. காந்தி அவளுக்கு அவதாரபுருஷர். அவர் இறந்த சேதி

கேட்டதும் மூர்ச்சித்து விழுந்தாளாம். மூன்றுநாள் சாப்பிடவில்லை என்று அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

காந்தி மெட்ராசுக்கு வந்திருந்தபோது அவருக்கு இந்திமொழி

பெயர்பெயர்பாளராக இருந்த்தை ஏதோபுண்ணியம் என்பது போல

வும் தெய்வ கைங்கர்யம் என்பது போலவும் எங்களிடம் பெருமைப் பட்டுக் கொள்வாள். சில வருஷங்கள் முன்புவரை

அவளுக்கு காங்கிரஸை விமர்சிக்க மனசு வந்த்தில்லை.’’தியாகம்

என்கிற விதையிலிருந்து கிளம்பின விருட்சம் அது. பட்டுப் போகாது. துளிர்த்து விடும்.’’என்பாள் தன்னையே சமாதானப் படுத்திக் கொள்வதுபோல

இப்போது சிரிக்கிறாள். அம்மாவுக்கே நம்பிக்கை

போய்விட்டது.

‘’தமிழ்நாட்டு நிலவரம் எப்படி?’’என்றேன்

அம்மா பார்வையை அகற்றி ரோஜாப்பூவின் மேல்

பதித்தாள்.

நான் வாய்விட்டுச் சிரித்தேன். ‘’பலே கில்லாடிம்மா நீ!’’ என்று

கன்னத்தைத் தட்டினேன்.

‘’ வெறுத்துப் போச்சா?’’ என்றேன் செல்லமாக.

நம்பிக்கையை இழக்கக் கூடாது. நீதான் சொல்லுவியே. நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு ஆதாரம்.நம்பிக்கை போச்சுன்னா

எல்லாம் போச்சும்பியே’’

நானா சொன்னேன் என்பதுபோல் அம்மா உட்கார்ந்

திருந்தாள்.’’ஆமாம், நீதான் சொல்லுவே’’என்றேன் நான் ஆவேசத்

துடன். ‘’அதனாலெதான் நா இப்படி இருக்கேன்.நீ கொடுத்த நம்பிக்கைதானே? சொல்லு!’’

நான் பேசுவதை அம்மா கவனிக்கிறாள் என்று

தோன்றிற்று.

.

உண்மை(யாகிப் போன) கதை

தோட்டத்து மரத்தடியில் அம்மா பொம்மை போல்

உடகார்ந்திருந்தாள். சக்கர நாற்காலியில் குஷன்களுக்கு

மத்தியில் புதையுண்டு; தும்பைப் பூவாய் நரைத்த தலை

எண்ணை பூசி வாரியதில் சாயங்கால வெய்யிலில் வெண்

பட்டாய் மினுமினுத்தது. முகத்தில் இன்னும் ரோஜாச் சிவப்பு.

செதுக்கி வைத்த்து போன்ற தீர்க்கமான மூக்கை ஒட்டிய

கன்னங்களில் மேலும் கீழுமாக ஓடிய வரிகள் வெள்ளை

மஸ்லின் துணிமடிப்பு போல மிருதுவாகத் தெரிந்தன. இளம்

நீல நிறத்தில் பூக்கள் போட்ட மாக்ஸி அணிந்து பொம்மை

போல தோட்டத்துப் பூக்களைப் பார்த்தபடி அம்மா.

அம்மாதானா?

நான் அம்மாவை நோக்கி நடந்தேன். சற்று எட்டி

புல்தரையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருந்த

வள்ளி தலைநிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

விருக்கென்று எழுந்து,

‘’நாற்காலி கொண்டு வரேன்’’ என்று உள்ளே ஓடினாள்.

‘’ ஹலோ அம்மா!’’ என்று நான் உற்சாக குரல் எழுப்

பினேன். அம்மாவுக்குக் காதில் விழவில்லை. பூக்களைத் தீவிரமாகப் பார்த்தபடி இருந்தாள். நான் அருகில் சென்று அவளது

வெளுத்த சுருங்கிப்போன கைவிரல்களைப் பற்றி நேருக்குநேர்

நின்றேன். அம்மாவுடைய கண்களில் லேசான சலனம் தெரிந்த்து.

மஸ்லின் மடிப்பு மெல்லமெல்லக் கலைந்து சொப்பு போல இருந்த உதடுகள் விரிந்தன. புன்னகை மலர்ந்தது.

‘’ ஆயா சிரிக்குது!’’ என்றாள் நாற்காலியை ஏந்தியபடி

வந்த வள்ளி.,அட பாப்பா சிரிக்குது என்பது போல.. அம்மா நிஜமாகவே பாப்பாவைப் போல களுக் மளுக் என்று சிரித்தாள்.

சிரிப்பு தாங்காமல் இருமல் வர ஆரம்பித்தது. நான் பதற்றத்துடன்

அம்மாவின் மார்பை அழுத்தித் தேய்த்தேன். ‘’மெள்ள,மெள்ள’’என்றேன். நான் தேய்க்கும் போது அம்மாவுக்கு

மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிற்று. திகைத்துப்போய் நின்ற வள்ளியிடம் , ‘’’தண்ணி கொண்டா சீக்கிரம்’’ என்று விரட்டினேன். அம்மா மீண்டும் இருமினாள். இருமலில் கலவரப்

பட்டுப் போன குழந்தையைப்போல என்னை நோக்கிய கண்களில்

பரிதவிப்பு தெரிந்த்து. நாக்கு துருத்திக் கொண்டு இருமல் வெளிப்

பட்டது.

மெள்ள மெள்ளம்மா. இப்ப சரியாயிடும்’’என்று நான்

ஆசுவாசப் படுத்தினேன். வள்ளி கொண்டு வந்த நீரை மெதுவாகப் பருக வைத்தேன். போதும் என்று அம்மா சொல்லவில்லை. ஆனால் நான்காவது வாய் உள்ளே செல்லாமல் வெளியே வழிந்த்து. ஆயாசப் பட்டுப் போனதுபோல தலையணையில் தலையைச் சாய்த்து அம்மா கண்களை மூடிக் கொண்டாள். மூச்சு

சீராக வந்த்து.

‘’அப்பாடா’’என்றாள் வள்ளி நிம்மதியுடன். ‘’ஒரு நிமிஷம் பயந்து போனேன்.’’ நான் ஒன்றும் பேசாமல் அம்மாவின்

வாயைத் துடைத்தேன். ஸ்பர்சத்தின் உணர்வில் அம்மா கண்ணைத் திறந்தாள்.

‘’அப்படி எதுக்கு சிரிச்சீங்களாம்?’’என்றாள் வள்ளி.

அம்மா பரப்ரும்ம்மாய் அமர்ந்திருந்தாள். மஞ்சள் ரோஜாவில்

அமர்ந்திருந்த வண்ணாத்திப் பூச்சியைத் தீவிரமாகப் பார்த்தாள்.

வள்ளி சிரித்தாள்.

‘’எப்படி எதுவுமே நடக்காத மாதிரி உட்கார்ந்திருக்காங்க பாத்தீங்களாம்மா? ரெண்டு நிமிஷம் முந்தி

கதிகலங்க அடிச்சாங்கன்னா யாராவது நம்புவாங்களா?’’

உண்மை(யாகிப் போன) கதை

பிரபல எழுத்தாளர்,சகோதரி வாசந்தி அவர்கள் தன்

கதைகளில் எழுதிய சில சம்பவங்கள்,பிறகு உண்மை

யாகவே நடந்து விட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அம்

மாதிரி அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு

முன்னோடியான,1996க்கு முன் எழுதப்பட்டு, பின்னர்

உண்மையாகிப்போன’’ ஒரு ஆணை’’ என்ற கதை

அடுத்த பதிவில் கொடுக்கப் படுகின்றது. பிற்காலத்தில்

அவர் வாழ்க்கையில் புயலைப்போல நிகழ்ந்துவிட்ட

சம்பவங்கள் மிகுந்த ஆச்சரியத்தை அளித்து பகுத்தறிவிற்கு

சவால் விடும் வகையில் அமந்துள்ளன,

(நன்றிதமிழ் புத்தகாலயம் வெளியிட்ட,’’காலம்’’ என்ற

தலைப்பிட்ட சிறுகதைத் தொகுதி)

Wednesday, November 2, 2011

பகுத்தறிவிற்கு சவால்(9)

நான் என் கதையில் வர்ணித்திருந்தபடியே என்

தாய் மாறிப்போனார். என்னை அடையாளம்

தெரியவில்லை. பேச்சே நின்று போயிற்று. கதை

யில் வந்த சில சம்பவங்கள் காட்சி மாறாமல்

நடந்தன. பணிப்பெண்கூட கதையில் வரும்

பெண் பேசியது போலப் பேசினாள். உயிர் உள்ள

வர்களைக் கதாபாத்திரமாக வைத்துஇனிக் கதை

எழுதுவதில்லை என்று உறுதி பூண்டேன். என்

தாய் இறந்த பிறகும் என் கதை என்னைத் துன்

புறுத்துகிறது. பீதி அளிக்கிறது. ஏனென்றால்

கதையின் முடிவில் எனக்கும் என் தாயின் நிலை

ஏற்படுவதாக எழுதியிருக்கிறேன்!.

******* ********** ************ **********

பிரபல எழுத்தளர் வாசந்தி அவர்கள் தன் சொந்த

அநுபவங்களைப் பதிவு செய்துள்ளதை இதுவரை

பார்த்தோம். அவருக்கு ஏற்பட்ட மிக முக்கியமான

வாழ்க்கை அநுபவங்கள் ‘’பகுத்தறிவிற்கு சவால்’’

விடும் தருணங்களாக அமைந்துள்ளன.

கதையில் அவர் எழுதும் சம்பவங்கள்,

முடிவுகள் ஆகியவை, கதாபாத்திரங்களாக அவர்

எடுத்துக் கொள்ளும் (உயிர் வாழும்) மனிதர்களுக்கும்

அப்படியே, அச்சு அசலாக நிகழ்வது எவ்வளவு

ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது? ஒன்றல்ல,

பல கதைகளில் இவ்வாறு நிகழ்ந்துவிட்டது. இறுதியாக

தன்னையும் தன் குடும்பத்தாரையும் வைத்து எழுதிய

கதைகளிலும் இவ்வாறே நிகழ்ந்தால் அவர் என்னதான்

செய்ய முடியும்? அந்தக் கதையில் வரும் முடிவு போல்

தனக்கும் நிகழ்ந்துவிடுமோ என்ற பீதி, வாழ்நாள் முழுவதும்

துரத்தும் அளவு வாழ்வில் நிகழ்வுகள் அமைந்து இனி

எப்போதும் உயிரோடு வாழும் மனிதர்களைக் கதாபாத்திரங்

களாக வைத்து எழுதுவது இல்லை என்று அவர் முடிவெடுத்

த்தை ‘’பகுத்தறிவிற்கு சவால்’’ என்றுதானே கூறமுடியும்.

இப்பதிவினைத் தொடர்ந்து படித்த அன்பர்கள்

இதுபற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்

கொள்கிறேன். முக்கியமாக நான் பெரிதும் மதிக்கும் பண்பாளர்,

பதிவர் லட்சுமி அம்மையார் தனது கருத்துக்களை விரிவாக

தனது வலைப்பூவில் எழுதினால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

ஏனெனில் வாழ்க்கை என்ற இயந்திரத்தில் சக்கையாக அடிபட்டு

ஒவ்வொரு சோதனையிலிருந்தும் தன் மனோதிடத்தாலும்,பெரு

முயற்சியாலுமே மீண்டெழுந்து, இன்று அவர் பெருமதிப்போடு

பீடுநடை போடுகிறார். தடைக்கற்களையெல்லாம் வெற்றிப் படிக்

கட்டுகளாக மாற்றிக்கொண்டு நான் கண்ட சிறந்த ‘’சாதனை

யாளர்களில் ‘’ குறிப்பிடத் தகுந்தவராக இருக்கிறார். இங்கு

குறிப்பிட்டுள்ளவை வெறும் அலங்கார வார்த்தைகளல்ல.

அவரது கடந்த இரண்டாண்டு காலப் பதிவுகளையெல்லாம்

‘’தமிழ் விரும்பி’’மற்றும் ‘’குறையொன்றுமில்லை’’ ஆகிய

வலைத்தளங்களில் முற்றாகப் படித்து ,அறிந்து தெளிந்ததால்

ஏற்பட்ட மன உந்துதல்களே இவ்வாறு போற்றுவதற்குரிய

காரணிகள் ஆகும். வாழ்க அவர் பெருமை. இனியும் பலகாலம்

அவரது அநுபவப் பதிவுகளைக் கொடுத்துப் பலரையும் பயனடயச்

செய்ய வேண்டுமென்பதே எனது ஆசை...