Pages

Saturday, January 7, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--12

a





.
‘’ஸாருக்கு எந்த ஊர்?’’ என்று சாரங்கன் அப்போது விசாரித்தான்.

‘’எனக்கு தூத்துக்குடி கிராமம் கும்பகோணம் காலேஜில் படித்தேன்’’.

‘’கும்ப கோணத்தில் ஜாகையோ?’’

‘’இல்லை. ஹாஸ்டலில் இருந்தேன்!’’

இந்த வேலைக்கு வருகிறவன் ஹாஸ்டலில் எப்படி இருந்தான் என்பதை
சம்சயிக்கிற மாதிரி அவனைப் பார்த்து சாரங்கன் விழித்தான். பிறகு தானே ஒரு மாதிரி சமாதானம் செய்து கொண்டது போல் பல முறை தலையை
ஆட்டினான். இங்கே நடப்பதில் சிரத்தையே இல்லாதவனாக வெங்கடாச்சாரி முற்றும் மௌனமாக இருந்தான்.


இதற்குள் குப்புசாமி அன்னத்தை முதலில் இலைகளில் பறிமாறவும்,ஸ்தி ரிகளும் தொடர்ந்து முனைந்தார்கள். வெள்ளரிக்காய்ப் பச்சடியை மைதிலி பரிமாறியபோது, வேதாந்தத்தின் இலையில் இரண்டு கரண்டிகளாக வார்த்தாள்.
‘ஆகா! இங்கே என்னிடம் அநுதாபம் கொள்ளும் ஆத்மா ஒன்றும் இருக்கிறதா?’’ என்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான். மைதிலி அநுதாபத்தின் மீது அவ்வாறு செய்தாளா, அகஸ்மாத்தாக அவ்வாறு செய்தாளா என்பதை அவளுடைய நிஷ்களங்கமான முகத்திலிருந்து அவனால் ஊகிக்க முடியவில்லை.


வைதேகி நெய்ப்பாத்திரத்துடன் பிரசன்னமானாள். சாரங்கன் இலையில் முழுசாக இரண்டு கரண்டி வார்த்துவிட்டு, ‘’கையையும் காட்டுங்கள் சொல்கிறேன்!’’ என்று அதட்டி உத்தரவு போட்டாள். சாரங்கன் கீழ்படிந்தான். கரகரத்த குரலில், ‘’அப்பா1 உங்கள் மாப்பிள்ளைக்கு அசாத்திய உஷ்ணம்.
ஓரொரு நாள் இருமல் பிடித்துக் கொண்டால், ராத்தூக்கம் கிடையாது. எப்பப்
பார்த்தாலும் ஆபீஸ் வேலை, இல்லாவிட்டால் ஸ்நேகிதாளோடு பேச்சு, அலைச்சல்! சொன்னால் கேட்கிறதில்லை.!’’ என்றாள் புகாராக.


சந்தானம் பெருமை கலந்த புன்னகையுடன் மாப்பிள்ளையைப் பார்த்தார்.

‘’நான் என்ன பண்ணுவேன்! ஆபீஸிலே ஏதேனும் சந்தேகம்னா,நம்ம கிட்ட ஓடி
வந்துடறான்., அவ்வளவு பேரும், மூணு அஸிஸ்டெண்ட் செகரிட்டரிகள் ஞாயிற்றுக் கிழமை நம் வீட்டில் பழி கிடக்கிறார்கள். முந்தாநாள் பாருங்கள், சித்தே படுக்கலாம்னு வந்தேன். லெப்டினண்ட் கர்னல் நடேசன் டின்னருக்குக் கூப்பிட்டுட்டார். மாட்டேன்னு சொல்ல முடியவில்லை.!’’


‘’சினேகிதாள்! என்ன பண்றது! பெரிய பதவி என்றால் இதெல்லாம் தவிர்க்க முடியாது—சமாளிக்கறதிலேதான் சாமர்த்தியம் இருக்கிறது! ஒருத்தரையும் பார்க்க முடியாதுன்னு சமையால் கட்டிலே இருந்துவிட்டால் அப்புறம் என்ன1’’
என்றார் பெரியவர்.


மாதுஸ்ரீ கௌசல்யா பொரித்த அப்பளங்களுடன் வெளியே வந்தாள். மாப்பிள்ளையிடம் வரும் போது கை தவறி மூன்று அப்பளங்கள் விழுந்துவிட்டன.! ‘’மாப்பிள்ளை, இத்தனை செல்வாக்கில் கொஞ்சம் உபயோகப் படுத்தி, நம்ம வெங்கடாச்சாரியை ஒரு நல்ல வேலையில் உட்கார்த்தட்டும்!’’ என்றாள்.

‘’மைதிலியின் பெரியப்பாதான் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருக்கிறார். ‘வா’ என்றுகூட எழுதியிருந்தார்.வெங்கடாச்சாரிக்குப் போக இஷ்டம் இல்லை.!’’ என்று பெரியவர் கூறினார்.

‘’பார்க்கிறேன், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!’ என்றான் சாரங்கன்
அமுத்தலாக.

‘’ஏண்டா, பறக்காவெட்டி! அதுக்குள்ளே அப்பளத்தைத் தின்னு தொலைச்சிட்டியா?’’ என்று பொதுவில் கௌசல்யா சொல்லவும், வேதாந்தம்
தன்னைத்தான் சொல்கிறாளோ என்று திடுக்கிட்டுப் போனான். நல்ல வேளையாக வாண்டுப் பயல் சுந்துவைச் சொன்ன வார்த்தை அது.!

‘முதுகில் நாலு வையேன் சுடச்சுட!’’ என்று வைதேகி பல்லைக் கடித்து சிபாரிசு செய்தாள்.

‘வாத்தியார் சாமர்த்தியத்தை அதில்தான் பார்க்கப் போகிறேன்! சுந்துவை மட்டும் வழிக்குக் கொண்டு வந்துவிட்டால் அவர் கெட்டிக்கார்ரஃதான்.!’’ என்று சந்தானம் சொல்லவும் , ‘’ சுந்துவுக்கு ‘ட்யூஷன் வாத்தியார் வேறயா?’’ என்று
அவர் மனைவி கேட்டாள்.

இப்போது பேச்சு வேதாந்த்தஃதின் பக்கம் திரும்பியது.’’என்னென்ன சொல்லித்தர வேண்டியதென்று வாத்தியார் கேட்டுக் கொண்டுவிட்டார் அல்லவா? என்று சாரங்கன் விசாரித்தான். இந்தக் கேள்வி வேதாந்தத்தைப் பார்த்துக் கேட்கப் பட்டது
‘’இன்னும் இல்லை. மத்தியானம் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பதில் கூறினான் வேதாந்தம்.

ஊறுகாய் ஜாடியுடன் வந்த வைதேகி, ‘’ அப்பா! நீங்கள் யாரிடம் ட்யூஷனுக்கு ஆள் அழைத்துவருவதாகச் சொன்னேள்! இங்கே இவரானால் ‘பஸ்ட் கிளாஸ்
பிள்ளையாகப் பொறுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அவனைக்கூட இங்கு வரச் சொல்லி இருக்கிறார். பாருங்கள்! காலம்பற சமையல் காரி வந்து சொன்னப்புறந்தான், நீங்கள் கூட்டிக் கொண்டு வந்த சமாச்சாரமே தெரியும்!’’
என்றாள்.


கரகரவென்ற தொண்டையிலிருந்து வந்த இந்தக் கரகரப்பான விஷயம், வேதாந்தத்தின் நெஞ்சை அரித்தது. இந்த அற்ப வேலையில் கூடப் போட்டியா? அட என் கடவுளே.!


‘’வரட்டும், வரட்டும்! இவன் ஏதோ வந்து கேட்டான். சட்டென்று நான் தீர்மானம் பண்ணிவிட்டேன்!’’ என்றார் சந்தானம்.

‘, ‘’அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குக் கிடைக்கிறது! நான் இவரிடம் உடனேயே சொல்லிவிட்டேன். வாத்தியார் நடந்து கொள்ளுகிற முறையிலேயும் இருக்கிறதே எல்லாம்! இல்லையா?’’


ஒரே நிமிஷத்தில் வேதாந்தத்தின் மனம் புழுவெனத் துடித்தது அனேகமாகத் தன்னை அவமானப் படுத்தும் முறையிலேயே பேசும் இந்தக் குடும்பத்திறகு வந்தோமே என்று வெதும்பினான். அவனிடம் பணம் இல்லை. ஆனால் உள்ளம் இருந்தது. தலையைக் கவிழ்த்துக் கொண்ட வேதாந்தம் அகஸ்மாத்தாக சமையற்கட்டின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். இரக்கம் தோய்ந்த முகத்துடன் மைதிலி அங்கே அவனையே பார்த்த வண்ணம் நின்று
கொண்டிருந்தாள். சற்று ஆறுதல்தான். ஆனால் இந்தத்தெய்வம் அவளுடைய நாத்தனாரை அடக்கும் சக்தி; பெற்றிருக்கவில்லையே! ஒரு பெரு மூச்சு விட்டான் வேதாந்தம்


சாப்பாடு முடிந்து எல்லாரும் எழுந்தார்கள் இப்படியாகத் தினமும் சாப்பாட்டு வேளையில் பேச்சு நடக்கிறதென்றால், இதைவிட நரகம் வேறு இராதே என்று
வேதாந்தம் பயந்தான். ஆனால்,தனது அச்சத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமலே மெல்லக் கூடத்துக்கு வந்தான்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Friday, January 6, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--11

a





.

‘சந்தானம் அய்யங்கார் குடும்பத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொருமாதிரி இருக்கி
றார்களே? இவர்களில் யாரைத்திருப்தி செயதால் சிறிது காலமாவது இங்கே
தங்க முடியும்?. யாரை விரோதித்துக் கொண்டால் உடனே வேலை போகும்?
சந்தானம் அய்யங்கார் எப்படிப பட்டவர். குடும்பத்தை ஆட்டி வைப்பவர்
என்று தோன்றுகிறதே1இதே போல் அவனையும் ஆட்டி வைப்பாரா? இத்தனை
எஜமானர்களைச் சமாளிப்பது எப்படி? லகு என்று நினைத்து வந்த விஷயம்
சிக்கலாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது!


வேதாந்தத்தின் மனதை கவலை வந்து கப்பிக் கொண்டது. தலையை நிமிர்ந்த
போது, வாசற்படியண்டை நின்ற ஓர் ஆசாமியைக் கண்டான்.தோளில் அழுக்குச
சவுக்கம், இடையில் தூக்கிக் கட்டிய வேஷ்டி. எவ்வளவு நேரமாக நிறகிறானோ?


‘’மிஸ்டர்! நீர்தான் இவ்கே ட்யூஷனுக்கு வந்திருக்கிறதோ? என்று அலடசியமாக்கஃ கேட்டான்.

‘’ஆமாம்! நீங்கள் யார்?’’

‘’நான் இந்த வீட்டில் குக்—சமையல் டிபார்ட்மெண்டஃ-கீழே எல்லாருக்கும் இலை போடுகிற டைம் ஆகிவிட்டது.! சாப்பிட வருகிறதானால், சீக்கிரம் வந்து சேரும்! இந்த வீட்டு எஜமானருக்கு எப்போ எதறகுக் கோபம் வரும் என்று
சொல்வதறகில்லை.—‘’ என்றான்


வருமுன் எஊமானரின் கோபத்தைத் தூண்ட விரும்பாதவனாக, அப்படியே கடிதத்தை வைத்துப் பெட்டியை மூடிவிட்டு, ஸ்நானத்திறகு ஓடினான். திரும்பி மேலே வந்தபோது அவன் நெஞ்சம் பற்றி எறியச் செய்யும் காரியம் அங்கே
நடந்து கொண்டிருந்தது.


ராகவன் எனகிற பையன் அவன் கடித்ததை எடுத்து வைத்துக் கொண்டு, இரைந்து அபிநயங்களுடன் வார்த்தை வார்த்தையாகப் படித்துக் காணபிக்க,
சீனி, சம்பகா, ஜானகி பாபு, கண்ணன் ஆகியோர் குபீர் என்று சிரித்து ஆரவாரம்
செய்து கொண்டிருந்தார்கள்.!


சிறிது நேரம் வரையில் அறைக்கு வெளியே நெஞ்சம் துடிக்க, கை கால்கள்
பதற நிறபதை ராகவன் கவனிக்கவே இல்லை. இந்தக் காரியம் செயத்தற்கு
நியாயமாகத் தலா இரண்டு அடியாவது பளீர் பளீர் என்று கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுக்கும் நிலையில் அவன் இருந்தானா? அன்றுதான்
அங்கே வந்திருக்கிறான். சிஷ்யப் பிள்ளைகளுக்குப் பாடம் என்று இன்னும் ஒரு வார்த்தைகூடச் சொல்லித்தரவில்லை.அதறகுள் ‘சிக்ஷையில் இறங்குவதா? தவிர அவன் விதி, அந்த வீட்டிலேயே இருந்தாக வேண்டுமே!
சந்தானம் அய்யங்காரிடம் இதைப் புகாராகச் சொல்லலாமா? பலன் இருக்குமா?


வேதாந்தம் இப்படியெல்லாம் மனதைப் போட்டு உளைத்துக் கொண்டிதுந்த சமயம், ராகவனும் வேதாந்தத்தை மனக்கண்ணால் எடை போட்டுக் கொண்டுதானிருந்தான். இவன் என்ன செயது விடுகிறான் பார்த்துவிடுவது! என்று காத்திருந்தான். பாட்டனாரிடம் ராகவனுக்கு திகில் உண்டு. ஆனால்
பாட்டனார்வரை இந்த ஆசாமி போவானா? அத்தனை தெம்பு இருக்கிறதா?


‘’கொடேண்டா அவர் கடுதாசியை!’’ என்றான் சீனி. அவனுடைய எண்ணம் இந்த நிலை அதிகம் நீடித்தால், அவர்களுடைய கடசி பலவீனம் ஆகி விடும் என்பதே. தவிர, பிசகு ஒன்றும் செய்து.விடவில்லை என்பது மாதிரி ஒரு துணிச்சலாக நடித்தால் ஒரு வேளை தப்பித்துக் கொள்வதும் சாத்தியமாகலாம்
அல்லவா?


‘’என் பெட்டியைத் திறந்து எடுத்து இப்படி என் கடுதாசியை வாசிக்கலாமா?’’ என்று கேட்டான் வேதாந்தம்.

‘சார் நீங்கள் இரண்டு பிசகு செய்கிறீர்கள்!’’ என்றான் ராகவன்.

‘’நானா இப்போது பிசகு செய்துவிட்டேன்?’ என்று ஆச்சரியத்துடன் வினவினான் வேதாந்தம்.

‘’ஆமாம் சார்! முதலாவது உங்கள் பெட்டியை நான் திறக்கவில்லை. பிறத்தியார் பெட்டியை நான் ஏன் திறக்கணும்?? இந்தக் கடுதாசி கீழே கிடந்தது. அப்புறம் இதை ‘என் கடுதாசி’ என்கிறீர்கள். இதுவரை இது உங்கள் கடுதாசி என்று எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு கதை மாதிரி இருந்தது, படித்தேன்.!’’

‘’நான்கூடக் கதை என்றுதான் இதுவரை நினைத்தேன். உங்களைப் பார்த்தபிறகுதான், உங்களுடையதென்று தெரிகிறது!’’ என்று ஒத்துப் பாடினான் சீனி, போக்கிரிப் பையன்!


‘’நான் ஞாபகமாகப் பெட்டிக்குள்தானே வைத்துவிட்டுப் போனேன்!’’

எனக்கு அது சமாச்சாரம் தெரியாது, சார்! நான் இங்கே வந்தபோது அது கீழேதான் கிடந்தது—‘’

‘’ஏன் சார் வீண் வம்பு? உங்களுக்குச் சந்தேகமானால், இனிமேல் இது மாதிரிக் கடிதங்களைப் பூட்டியே வைத்துவிடுங்கள்! அவ்வளவுதானே?’’ என்றான் சீனி, இருவருக்கும் சமாதானமாக.

‘’இன்னொன்றும் சொல்லுவேன்நான்! இது மாதிரி லெட்டர்களை வீட்டில் எழுதாமல்கூட இருக்கலாம்! தாத்தாவுக்குத் தெரிந்தால் ஆபத்து’’ என்றான் ராகவன்.

‘’லெட்டரைக் கொடுத்துவிட்டுச் சாப்பிட வா! அதறகு இப்போ அப்பாவிடம் வசவு வாங்க வேண்டாம்!’’ என்று அழைத்தான் சீனி.

இரண்டு பேரும் கீழே போனார்கள். வேதாந்தம் தன் கடித்ததை எடுத்து மறுபடி
பெட்டிக்குள் வைத்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். இதற்கெல்லாம் அழுவதா சிரிப்பதா என்று அவனுக்குத் தெரியவில்லை. அவனை வாயடி அடிக்கும் இந்தப்பிள்ளைகள் எப்படி அவனிடம் பாடம் கேடகப் போகிறார்கள்? சந்தானம் அய்யங்காரை அவன் எப்படி திருப்தி செய்து வைக்கப் போகிறான்?


சமையல்காரக் குப்புசாமிவந்து, இலை போட்டாயிற்று என்றும், பெரியவர் காத்திருக்கிறார் என்றும் அழைத்தான். வேதாந்தம் சென்றபோது ‘டைனிங்’ ஹாலில் மாப்பிள்ளை சாரங்கன் உட்பட எல்லாரும் சாப்பாட்டிறகுத் தயாராக
உட்கார்ந்திருந்தார்கள். சீனியும் ராகவனும் கூட அடுத்தடுத்து, பரம சாதுக்கள் போல் இருந்தார்கள். பாபு, கண்ணன் இருவரில், கண்ணன் மட்டும் வேதாந்தம் வந்தவுடனே ‘களுக்’ கென்று சிரித்துத் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.


‘ஏண்டா, இந்தப் பயலுக்குப் பள்ளிக் கூடத்தில் இப்படி யாராவது சிரிக்கச் சொல்லித் தருகிறானோடா?! கொஞ்சம் கூட நன்னாவே இல்லையே!நான்
நாலைந்து தடவை கவனித்துவிட்டேன்.!’’ என்றார் சந்தானம். கண்ணன்
தலையை நிமிரவே இல்லை.’’நிமிர் தலையை’’; என்று சாரங்கன் அதட்டவே கண்ணன் ஒருமுறை தலையைத் தூக்கிக் காட்டிவிட்டு,மறுபடியும் கவிழ்த்துக் கொண்டான்.

‘’ இந்தக் கெட்ட பழக்கமெல்லாம் வாத்யார்தான் பார்த்து விரட்டணும்.
என்ன வேதாந்தம்! வாத்யாருக்கே இது ஒரு பரிட்சை! என்றார் சந்தானம்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Thursday, January 5, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-10

a





.



அத்தை அடிக்கடி ‘’பெருமாள் இருக்கிறார், பெருமாள் பார்த்துக் கொள்வார்’’ என்று சொல்லுவாளே!அவர்தான் இங்கே இந்த உருவத்தில் வந்து அவனை
இப்போது காப்பாற்றினாரா? பட்டணத்தில் கோயில் கொண்டிருக்கும் பார்த்த
சாரதியே இவரை அனுப்பி,’’வேதாந்தம் வந்து கொண்டிருக்கிறான், பட்டணத்திறகு அவன் புதிசு , பரம சாது, தாய் தகப்பன் இல்லாத பிள்ளை, நீ கவனித்துக் கொள்’’ என்று உத்தரவு போட்டிருக்கிறாரா?


‘’பார்த்தசாரதி’’ என்றதும் , அத்தையுடனும் செல்லத்துடனும் ஒரு நாள் ராமாயணப் பிரவசனம் கேடகப் போயிருந்தபோது தெரிந்து கொண்ட ஒரு
அறபுதமான’ உபகதை’ மனதில் முன்னே எழுந்தது.


ராமாயணம் சொல்பவர் ஒரு மகான். அனுபவித்துச் சொன்னார். அவர் உள்ளத்தில் இருந்த ஒளியை நாற்புறமும் வீசினார் .சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தேன் மழையாகப் பொழிந்தார் அவ்வப்போது வேதததிலிருந்து வாக்கியங்களையும் திருஷ்டாந்தமாககஃ காட்டினார். பரவசம்
கொள்ளும்படி உபகதைகளை எடுத்துச் சொன்னார்.


அன்று அவர் சொன்ன கதை ஆதிசங்கரர்,மாத்ருகர்மா செய்தது பற்றியது.
சனயாசம் பெற்றுக் கொண்டு செல்லும்போது போது அவர் மாதாவிடம்’’ அம்மா! நான் எங்கே இருந்தாலும் உன் வியோக காலத்திலே என்னை நினைத்துக் கொள். உன் பக்கத்திலே ஓடி வந்து விடுகிறேன்.’’ என்று கூறி
விடை பெற்றுக் கொண்டார். பல வருஷங்களுக்குப் பிற்பாடு, சிஷ்யர்களுக்கு மத்தியில் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சங்கர்ருடைய கணகளில் நீர் சுரந்தது. அருகாமையில் இருந்த சீடர் , இதைக் கவனித்து காரணம் என்னவென்று கேடகவும் , பகவத்பாதர், ‘’என் தாயாரிடம் வருவதாகச் சொல்லியிருந்தேன் . இப்போது என்னை நினைத்துக் கொள்கிறாள்கிறாள்.!’’ என்று கூறிவிட்டு கிருஷ்ணனை மனதில் தியானம் செயது எட்டு ஸ்லோகங்களைச் சொன்னார். உடனே பார்த்தசாரதி, ருக்மணி சமேதராக, சங்கர்ருடைய மாதாவின் பக்கத்திற்குப் போய்விட்டார்.


ஏன் ஆச்சாரியர்கள் தாமே முதலில் போகவில்லையென்றால்,தன் பிள்ளை கிருஹஸ்தனாக, மனைவி மக்களுடன் இருக்கவேணும் என்பது மாதாவின் ஆசை. அவளுடைய மரண சமயத்தில் காஷாயதாரியாகத் தம்மைப் பார்த்தால்
ஆயாசம் பொள்ளுவாளோ என்றே கிருஷ்ணனை வேண்டினாராம்.




‘’அம்மா!’’ என்றார் பார்த்த சாரதி.

‘’ சங்கரா!’’ என்று கண்ணைத்திறந்த தாயாருக்கு, கிருஷ்ணபரமாத்மா தரிசனம்
தந்தார்.. புளகாங்கிதம் அடைந்துவிட்டாள் அவள். ‘’என் குல தெய்வமான நீயா என் பக்கத்திறகு வந்துவிட்டாய்?’’ என்று கேட்டாள்.


‘’ஆம். உன் பிள்ளை உத்தரவு போட்டுவிட்டான். ஓடிவந்துவிட்டேன்.’’ என்றார் பார்த்தசாரதி.

என் பிள்ளையா? சங்கரனா? அவனா, உனக்கா உத்தரவு போட்டான்?’’

‘’ஆமாம்! சங்கரன் என்றால் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?,அம்மா! கைலாசபதியான சங்கரனே அல்லவா அவன்!’’’

இந்தக் கதை ஞாபகம் வந்தது வேதாந்தத்திறகு இரு கணகளிலும் ஜலம் சுரந்து வழிந்தது. பக்த பராதீன்னான பிரபு, அத்தை சொல்லிக்கூடக் கேட்டுவிட்டாரா?
இது அவருடைய ஊரல்லவா என்று நினைத்துக் கொண்டான் வேதாந்தம்.
குருக்ஷேத்திரத்திலே தன் பிரதிக்ஞை போனாலும் போகட்டும், பகதனுடைய பிரதிக்ஞை வீணாக்கஃ கூடாதென்று பீஷ்மாசாரியாருக்காக ரதஃததிலிருந்து குதித்து ஓடி
வந்த மங்களமூர்த்தி ஆயிற்றே? கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது வேதாந்தத்திறகு அவன் முகத்தையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்
எதிரில் இருந்தவர்.


ஏன் சார்1 இட்லியில் மிளகாய்ப்பொடி ரொம்பக் காரமாகிவிட்டதோ?’’ என்று குறும்பாககஃ கேட்டார்.

பதில் சொல்ல முயன்றான் வேதாந்தம். அவனால் முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன், நீங்கள் செயத உபகாரம் என்னால் மறக்க முடியாதது,சார்!
நான்—நான்—‘’ என்றான்.

‘’எனக்கு அந்த நான்சென்ஸெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க அவகாசம் இல்லை. நீர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு என்னுடன் வரப்போகிறீரா? இல்லை, நான்போய்விடட்டுமா?’’ என்று வெடுக்கென்று கேட்டார். அவருக்காக ஓட்டல்
வெளியே கார் நின்றது. ஸ்டேஷனில் அவரை எதிர்பார்த்து அது வந்திருக்கிறது. இப்போது டிரைவர் தன் ஸதானத்தைவிட்டு வண்டியின் பின்னால் ஒதுப்புறமாகப் போய் உடகார்ந்து கொண்டிருந்தான். ‘’உமக்கு எங்கே ஜயா போகணும்?’’ என்று வேதாந்தத்தைக் கேட்டார் அவர்.


‘’நான் ஆராவமுது கார்டன்ஸ் போகிறவன். மிக வந்தனம் நான் வரட்டுமா? என்று பதில் சொன்னான் வேதாந்தம்.

‘’உடகார் ஜயா, பக்கத்திலே! ஆராவமுது கார்டன்ஸிலே யார் வீடு?’’

கும்பகோணம் சந்தானம் அய்யங்கார். உங்களுக்குத் தெரியுமோ அவரை?’’

கார் போய்க் கொண்டிருந்தது.. ‘’எனக்கு இந்த ஊரில் யாரையுமே தெரியாது.

கும்பகோணம் எக்ஸ்டென்ஷனிலே இருக்கிறாரே, அவர்தானே’’?’’

‘’ஆமாம், அவர்தான்’’.

‘’அவர் வந்துவிட்டாரா? அவர் மாதிரி இருந்ததே! ஓஹோ! அவருக்கென்ன, நீர் மாப்பிள்ளையா? மாப்பிள்ளையாக இருந்தால் உம்மையும் கூடவே காரில் அழைத்துக் கொண்டு போயிருப்பாரே? அவர் வீட்டில் உமக்கென்ன காரியம்?’’

வேதாந்தம் சுருக்கமாக தான் ஒப்புக் கொண்டு வந்திருக்கும் வேலையைச் சொன்னான்.தன் ஊரைச் சொன்னானே ஒழிய தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

‘’எத்தனை பசங்களுக்கு டியூஷன்?’’

‘தெரியாது, ஜந்தாறு பேர் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.!’’

ஹஹ்ஹஹஃஹா!’ என்று சிரித்தார் அவர். நினைக்கிறீரா? எத்தனைபேருக்கு டியூஷன் என்று கேட்டுக் கொள்ளாமல் சம்பளம் பேசினீரோ?’’ என்று கேட்டார்.

‘’இப்போது சென்னைக்கி யாராவது அழைத்துவந்தால் போதும் என்ற நிலையில்
இருக்கிறேன்’’

‘’ அப்போ வேறு வேலை கிடைத்தால் உடனே இதை விட்டு விடுவீரோ?’’

‘’அப்படி இல்லை.சந்தானம் அய்யங்காரிடம் சொல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்,’’

‘’அவர் போக்கஃ கூடாது என்றுதான் சொல்லுவார் ஹஹ்ஹா!—ஏழு பசங்க
ளுக்கு முப்பது ரூபாய்க்கு டியூஷன் சொல்லித்தர வேறு ஆள் கிடைப்பானா அவருக்கு!’’

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Wednesday, January 4, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-9

a





.





சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு அருகில் யாரும் இல்லை.இருந்த
இரண்டொருவரும் அவர்கள் காரியமாகவே இருந்தார்கள் எங்கே போய்விட்டது? எப்படிப் போய்விட்டது? யாரைப் போய்க் கேட்க முடியும்?


திணறிக் கொண்டு நிறகும் போதே, இருபது கஜத்திறகு அப்பால் ஒரு மோட்டாரின் கதவு தடார் என்று ஆவேசத்துடன் சாத்தப் படும் சத்தம்
கேட்டது. அதிலிருந்து இறங்கியவரை வேதாந்தத்திறகு நன்றாக ஞாபகம்இருந்தது.
கும்பகோணம் ஸ்டேஷனில் அவனைப் பார்த்துப் பேசியவரே அவர்.
வரும்போதே அவர் தொந்தியும் மார்பும் குலுங்கின. பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அடித்துவிடுபவர் போல் ஆவேசமாக வந்தார்.


பை நிறையப் பணம் இருந்தால் இருதயம் இருக்கத் தேவை இல்லை என்ற கொள்கையைக் கடைபிடிப்பவர்களின் கூட்டத்திறகுத் தலைமை
தாங்குபவர்கள், ஜேப்படிக்கார்ரஃகள். இவர்களிடம் சிக்கி அவஸ்தைக்குள்ளாகிறவர் அநேகமாகச் சூதுவாதறியாத அப்பாவி அயலூர்காரர்கள்,,கையில் இருக்கும் அத்தனை பணத்தையும் கோட்டைவிட்டுவிட்டு,டிராம் சத்ததிறகுக் கூட மார்க்கமின்றி,சுற்றிலும் ஒரு
தெரிந்த முகமேனும் இல்லாமல் திண்டாடும் இவர்களைப் பரிதாபமாககஃ கூட
நின்று பாராமல் ஜேப்படிக்காரன் ஓடி ஒளிந்து கொள்கிறான். ‘’ஜயோ பாவம்!
அத்தனை பணத்தையும் அடித்துக் கொண்டு போகிறோமே! ஊருக்குத் திரும்ப டிக்கட் வாங்கவோ, அல்லது ஒரு வேளை சாப்பிடவோ, சில்லரையை விட்டு வைப்போமே’’ என்ற எண்ணம் இவனுக்கு ஒரு போதும் ஏறபட்டதே இல்லை!



தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்த வேதாந்தத்திறகு,அது
காலி என்றவுடன் உலகெங்குமே காலியாகிவிட்டது போன்றதொரு பிரமிப்பு ஏறபட்டது. எப்படிக் கொண்டு போனான்? நான் எவ்வளவோ ஜாக்கிரதையாக
வைத்துக் கொண்டிருந்தேனே!’’ என்று எண்ணி வியந்தான்.



‘’பட்டணம் போக்கிரி ஊர். ஜாக்கிரதை!’’என்று அத்திம்பேர்
சொன்னதாக அத்தை சொன்னாளே. ‘அது தெரிந்து இப்போது என்ன பிரயோசனம்?’’ என்று மனம் வருந்தினான். இந்த சமயத்தில்தான் காரிலிருந்து
அந்த புதிய, பெரிய மனிதர் இறங்கி, மார்பும் வயிரும் குலுங்க பல்லைக் கடித்துக் கொண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். முட்டாள் பையா1
மகாபுத்திசாலி என்று நினைத்துக் கொண்டு பட்டணம் வந்ததும் வராத்துமாககஃ
கைக் காசைத்தொலைத்துவிட்டு விழிக்கிறாயே! அதைக் காபந்து செய்யத் தெரி
யாதவன் நீ! நீ என்ன சம்பாரித்துப் புறட்டிவிடப் போகிறாய்!’’ என்று கன்னத்தில் நாலு அறை வைக்கவே அவர் வருகிறார் என்று வேதாந்தம் எண்ணினான்.


அவருடைய வேகத்தைக்கண்டு வேதாந்தம் ஏமாந்து
போனான். அவர் அவனை நோக்கி வரவே இல்லை.! அவன் மீது கனமாக உராயந்து கொண்டு அவர் அவனையும் தாண்டி ஸ்டேஷன் படிக்கட்டுகள் மீது
துடியாக ஏறினார். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக, ஒரு தூண் அருகே சடக்கென்று நின்று, அங்கே பரம சாதுவாககஃ காணப்பட்ட ஓர் ஆசாமியின்
கழுத்தை முரட்டுத் தனமாகப் பற்றி இழுத்து, அவனை அப்படியே ஒரு வளை வளைத்தார் அதை அடுத்து, ‘’தொம்’’ ‘’ தொம்’’ என்று அவன் முதுகில் நாலைந்து குத்துகள் விழுந்தன. அதே சமயம் அவருடைய பூட்ஸ் கால்களும்
சுழன்று சுழன்று அவனுடைய பிருஷ்ட பாகவ்களையும் துடைகளையும் செம்மையாகத் தாக்கின. சுமார் பதினைந்து இடங்களிலாவது அடியும் உதையும் கொடுத்த பிறகே அவர் நிறுத்தினார். அவருடைய ஸ்தூல தேகத்திறகு இந்தப் பயிறசி ஏற்றதல்ல என்பதுபோல் மேல் மூச்சு வாங்கியது.
அவர் திணறினார். அடிபட்ட ஆள் முகத்தை நிமிர்த்தினான் அவனுக்கேகூட இது ஓர் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு வகையாகத் தன் கன்னத்தை அவருக்குக் காட்டியிருக்க மாட்டான்.!
பளார் பளார் என்று இரண்டு கன்னங்களிலும் அறைகள் விழுந்துவிட்டன. நிதானிக்கவும் அவகாசம் கொடுக்காமல் அவன் வயிற்றுக்கடியில் கை கொடுத்து அந்தப் புதிய மனிதர் ஒரு பணப் பையை வெளியே இழுத்துவிட்டார்.!.



‘ஏஞ்சாமி அவனைப் போட்டுக் கொல்ரீங்க?’’என்று கேட்டுக் கொண்டே வந்தான் யாரோ ஒருவன். இதற்குள் ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ஏனா? இதறகுத்தான்! தெரிந்து கொள்!( பல்லைக் கடித்து) யாரிடம் இந்த வேலை காட்டுகிறான்.! பட்டணத்திறகு புதிதாக ஒரு ஆள் வந்து இறங்கினால், உடனே ஜேபியை அடிக்க வேண்டியதுதானா? நான்தான் காரில்
உடகார்ந்து, இருமாதிரி நடக்குமென்று எதிர்பார்த்து இங்கேயே கவனித்துக் கொண்டிருக்கிறேனே!’’



வேதாந்தம் திடுக்கிட்டான். அவன் பறிகொடுத்துவிட்டுப்
பரிதவித்துக் கொண்டிதுந்த பணப் பைதான் அவரிடம் இருந்தது. ‘’சார்!—என்னுடையது சார், அது!’’ என்றான்.


‘’உம்முடையதா? உம்ம பையில் இருந்தால்தான் உம்முடையது! நான் இதை வெளியே எடுக்காமல் இருந்தால் இவனுடையதுதான்!’’ ‘இவனுடையதுதான்’ என்னும் போதே, அந்த ஆசாமி மண்டையில்’ டக்’
கென்று ஒரு தட்டுத்தட்டி,
அவனை அடையாளமும் காட்டினார்


உம்ம பணம் பூராவும் இருக்கிறதா பாரும். அதறகுள் ஏதானும் குட்டி வேலை
செயதிருக்கப் போகிறான். என்றார் பெரிய மனிதர் வேதாந்தம் க்ஷணகாலத்தில் சொல்லிவிட்டான்.’’’ இருக்கிறது சார்.! இருக்கிறது’’’
இந்த சந்தர்பத்தில் அடி வாங்கினவன்மீது கைப் பிடியை அவர் தளர்த்தியிருக்க வேண்டும்.. கண் இமைக்கும் நேரத்தில் அவன் கையை உதறிக் கொண்டு, அங்கிருந்து நாவி, ஓட்டமாக ஓடி மறைந்துவிட்டான். ‘’பிடி, பிடி!’’ என்று நாலைந்து பேர் அவனைத் துரத்துவது போல் ஓடினார்கள்.


பெரியவர் சிரித்தார். ‘’ஓடுகிறவர்கள் எல்லாரும் அவனைச் சேர்ந்தவர்கள் துரத்துவது பாசாங்கு! வாரும், இப்போது எங்கே கிளம்பினீர்?’’ என்று கேட்டார் வேதாந்தத்தைப் பார்த்து.. ‘’ ஹோட்டலில் இரண்டு இட்டிலி சாப்பிடலாம் என்று எண்ணித்தான் பையில் கை வைத்தேன்’’
‘’இப்போ அந்த ஆளுக்கு முன்னாடி’ டிபன்’ பண்ணி வைத்தீர் வாரும் இங்கேயே நின்று கொண்டிதுந்தால்? கையை அலம்பிக் கொண்டு நானும் உம்மோடு இரண்டு இட்டிலி சாப்பிடுகிறேன். நீர் வாங்கித் தருகிறீரா?’’


இரண்டு பேரும் எழும்பூர் ஹோட்டலில் ஆகாரம் செயதார்கள். ‘’உங்களுக்கு எப்படி சார் தெரிந்தது? ஆச்சரியமாயிருக்கிறதே!’’ என்று கேட்டான் வேதாந்தம் அவன் கண்ணிலே நன்றி பெருக் கெடுத்து ஓடியது அப்போது அவர் ஒரு தெய்வமாகவே அவன் முன்னால் தென்பட்டார்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

Tuesday, January 3, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-8

a





.



அடுத்தது ஒரு இண்டர் கிளாஸ் பெட்டி.அதற்க்கடுத்தது’ செகண்ட்’’ . போகும்போதே அதன் உள்ளே அசுவாரசியமாக எட்டிப் பார்த்தான்.
அதில் ஜன்னலோரம் படுத்திருந்த ஆஜானுபாகுவான ஒருவர் எழுந்து
உடகார்ந்து,’’ மிஸ்டர்’’! என்று அவனை அழைத்தார்.

‘’என்னையா கூப்பிட்டீர்கள்?’’ ’

‘’உம்மைத்தான்! இது கும்பகோணந்தானே?’’

‘’ஆமாம்—‘’

‘சற்று நில்லும். அந்த புக்ஸ்டாலில் எனக்கு ஒரு பத்திரிகை வாங்கித் தந்து

விட்டுப் போம்!’’

முன்பின் தெரியாத ஒரு மனிதர்இப்படித் தன்னை அதிகாரமாக ஏவுவதைக் கண்டு வேதாந்தத்துக்கு ஆச்சரியமே. ஆனாலும் அந்த மனிதருடைய முகத்திலிருந்த விலாசமும், தொனியிலிருந்த திடமும் அவனைக் கீழ்படியச் செயதன.

என்ன பத்திரிகை சார் உங்களுக்கு வேண்டும்?’’
எது வேணா!’ எனிதிங்’உமக்கு படிக்க என்ன வாங்குவீரோ அதை வாங்கிக்
கொண்டு வாருமேன்!’’
இதேதடா வேடிக்கை! என்று எண்ணி, ‘’இங்கிலீஷா, தமிழா? என்று மறுபடி கேட்டான்.
ஓயாமல் கேள்வி கேடகிறீரே,! நீர் இங்கிலீஷ்தான் படிப்பீரா? போய்ப் பாருங்க சார் அங்கே!’’ என்றார்.

ரயில் கிளம்ப அரைநிமிஷமே இருந்ததாகையால்,வீண் தர்க்கம் செய்ய வேண்டாமென்று ஒரு தமிழ்ப் பத்திரிகையை வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். ‘’சரிதானே, சார்?’’

‘’ரொம்ப சரி! நீர் ரொம்ப புத்திசாலி! உமக்கு ரொம்ப தாங்ஸ்! போயட்டு வாரும்!’’ என்றார் அவர்.

வேதாந்தம் தயங்கினான். ‘’போய்ட்டு வாரும் என்று சொன்னப்புறமும் அங்கே நிற்கப்படாது!’ என்று அந்தப் புதிய மனிதர் கண்டிப்புடன் சொல்லிவிட்டு,
பத்திரிகையை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

தன் வாழ்க்கையில் இந்த மனிதர் எத்தனை தூரம் உபயோகமாக இருக்கப்
போகிறார் எனபதை அறியாமலே வேதாந்தம் அடுத்ததாக இருந்த மூன்றாவது வகுப்புப் பெட்டியில் போய் ஏறிக் கொண்டான். சென்னைக்கு காலை 7-25க்கு
போட் மெயில் வருகிறது. மோட்டார்களும், டாக்ஸிகளும் , கோச்சுகளும், ஜட்காக்களும், ரிக்ஷாக்களும் பிரயாணிகளை வீடு கொண்டு சேர்க்கஃ காத்திருக்கும் நேரம் அது.

ஸ்டேஷனுக்கு வெளியே வரவேண்டிய பிரமேயமேயில்லாமல் பிளாட்பாரத்திலேயே சந்தானம் அய்யங்காருடைய குடும்பத்திறகாக ஒரு கார்
காத்திருந்தது. ஹைகோர்ட்டில் வேலையாக இருக்கும் அவருடைய மாப்பிள்ளை கார் அது..
எனபதை பிற்பாடு வேதாந்தம் தெரிந்து கொண்டான்.. ரயிலிலிருந்து இறங்கியதும் அவர்களைப் பின் பற்றிய வேதாந்தத்துக்கு ஒரு சிறு அதிர்ச்சி முதல் முதல் ஏறபட்டது. இவனைத்தவிர எல்லாரும் காரில் ஏறி உடகார்ந்துகொண்டுவிட்டார்கள்.கதவும் சார்த்தப் பட்டது.புறப்படவும் தொடங்கி
விட்டது.

‘’சார்!’’ என்று கூப்பிட்டான் வேதாந்தம்

‘’நீ ரிக்ஷாவில் வாயேன். காரில் இடம் இல்லை!’’ என்றார் சந்தானம்

‘வீட்டு விலாசம் சொல்லவில்லையே!’’ என்று கேட்டான் அவன்.

‘’விலாசமா! அதை முன்னாடியே கேட்டுக்கிறதற்கு என்ன?’’என்று சந்தானம்
அய்யங்கார் கூறிவிட்டு, பிள்ளையிடம் , ‘’சொல்லேன் அவனுக்கு1’’ என்று கர்ஜித்தார்.

மைதிலியின் கணவன் யார்காதிலும் விழாமல் முணுமுணுத்துக் கொண்டு, ‘’நீ இதறகு முன் மெடராஸ் வந்திருக்கிறாயா?’’ என்று கேட்டான்.

‘’இல்லை’’
நாசமாய்ப் போச்சு! ஹம்! ஏதானும் ஒரு ரிக்ஷாவில்ஏறிக்கொள். ‘எழும்பூர்-ஆராவமுது கார்டன்ஸ்’’னு சொல்லு பெரிய பாலம் ஏறி இறங்குவான்.
வந்து சேர்! ‘’ஆராவமுது கார்டன்ஸ்’’’’ஞாபகம் இருக்குமா?’’

கார் டிரைவர் நல்ல அநுபவஸ்தன். வேதாந்தம் பதில் சொல்லும்வரை நிற்காமல் , காரை ஓட்டிக் கொண்டு போய்விட்டான்.

டிக்கட்டைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் வேதாந்தம். எழும்பூர் ஸ்டேஷன் அவனுக்குத் திகைப்பாக இருந்தது. ‘’உர்ர்—உர்ர்’’ என்று ஓடும்
எலக்ட்ரிக் ரயில்கள் அவன் பிரமிப்பை அதிகரித்தன. வெளியே விரைந்து செல்லும் கார்களும் பஸ்களும் அவன் மதியைக் கலக்கின. அங்கிருப்பவர்கள்
எல்லாரும் அவன் குடுமியையே பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது.


ஸ்டேஷனுக்கு எதிரே தென்பட்ட ஹோட்டலில் காபிசாப்பிட்டு பிறகு போகலாம் என்று எண்ணி ஸ்டேஷன் படிக்கட்டுகளிலிருந்து கீழே இறங்கி
நடந்தான். இறங்கும்போதே சட்டைப் பையில் கையை வைத்தான்.. வயிற்றில்
‘பகீர்’’ என்றது சற்றுமுன் வரை இருந்த மணி பர்ஸைக் காணோம்! இருபது வினாடிகள்முன் அது இருந்தது இப்போது இல்லை. இருநூறு ரூபாய்க்கு மேல் இருந்த பர்ஸ்!.

(அமரர் தேவன்—மி!ஸ்டர் வேதாந்தம்)

Monday, January 2, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-7

a





.



.

போட் மெயில் வருவதறகு சிறிது நேரத்திறகு முன்பே கும்பகோணம்
ஸ்டேஷனில்ஜனக்கூட்டம் சேர்ந்துவிட்டது. பிளாட்பாரத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நடை போட்டுக் கொண்டு சிலர்
பொழுது போக்கினர். மூட்டைகளை வாகனமாக பாவித்து ஆரோகணித்தபேர் பலர். ஸ்டேஷனில் கிடந்த பெரிய பெரிய மரப்பெட்டிகளை சிம்மாசனமாகப்
பாவித்தனர்., ஸ்டேஷனில் செலவாக்கு பெற்ற ஒரு சிலர்.




நேரம் நெருங்க, ஜனங்கள் வந்து கொண்டேயிருந்தனர். ‘’ஏது, இன்று மெயிலில் இடமே கிடைக்காது போல் இருக்கிறதே!’’ என்று வேதாந்தம்
கவலை கொள்ளும் அளவுக்கு ஜனங்கள் கூடிய பிறகுதான் சந்தானம் அய்யங்காரும் அவர் பந்து ஜனங்களும் அங்கே பிரவேசம் செயதார்கள்.



சந்தானம் அய்யங்கார் வெகு விறைப்பாக, ஸ்டேஈனையே விலைக்கு வாங்கி
விட்டவர் போலும், இதுபோன்று அனேகம் ஸடேஷன்களை விலைபேசச் சட்டைப் பையில் தயாராகப் பணம் வைத்திருப்பவர் போலும் காணப் பட்டார்.
அவரைப் பின் தொடர்ந்து அவருடைய கடைசிபிள்ளை சீனிவாசன் என்ற சீனியும் , மூத்த பேரன் ராகவனும் வந்தார்கள்.அப்புறம் இரண்டு பெண்கள், ஒரு வாண்டுப் பயலும்,.



வேதாந்தத்தைக் கும்பகோணத்தில் எதிர்பார்க்காதபடியால் சந்தானம் அய்யங்கார் அந்தப பக்கம் திரும்பவேயில்லை. வேதாந்தம் அவர் திருஷடியில்
படச் செய்த முயறசிகளும் பலன் அளிக்காமல் போயின. இந்தச் சமயம் ஜிகுஜிகுவென்று போட்மெயில் ஸ்டேஷனுக்குள் கம்பீரமாக நுழைந்துவிட்டது.


சந்தானம் அய்யங்காரும் மற்றவர்களும், தங்கள் எதிரே நின்ற இரண்டாம் வகுப்பு வண்டியில் ஏறிக் கொண்டார்கள். இரண்டு நிமிஷத்தில் எல்லா சாமான்களும் ஏற்றப் பட்டுப் பல இடங்களிலும் பங்கீடு செய்யப் பட்டு விட்டன. சந்தானம் அய்யங்கார் உடகார்ந்து சாயந்து கொண்டபின்பு வேதாந்தம்
எதிர்ப் பட்டு, ‘’’’சார்!’’ என்றான்
‘’நீ யார்?’’ என்று கேட்டார் அவர்.

மாயவரத்தில் என்னை வந்து சந்திக்கச் சொல்லி எழுதியிருந்தீர்களே?’’

‘’அப்படியென்றால் இங்கே ஏன் வருகிறாய்?’’ இது மாயவரமா?’’

‘’இல்லை, நான் இங்கேயே ஏறிக் கொள்கிறேன் என்று உங்களிடம் தெரிவிக்கத்தான் வந்தேன்.’’

‘’சரி போய் ஏறிக் பொள்!’ சந்தானம் மிடுக்காகப் பேசிக் கொண்டே வெளியே
எட்டிப் பார்த்தார்.’’இது உன் மூட்டை என்று சொல்!’’

‘’ஆமாம்’’

‘’உள்ளே எடுத்துப் போடேன்! டிக்கட் வாங்கியிருக்கிறாயா?’’



’ வாங்கிவிட்டேன். நான் அடுத்த கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொள்கிறேன்!’’

‘’போ, பின்னே! ஏன் நிறகிறே? வண்டி புறப்பட்டு விடும்—ஹூம்!’’

தன் பெட்டி படுக்கைகளை அவர்களுடைய சாமான்களுடன் சந்தானம் ஏன்

வாங்கி வைத்துக் கொண்டார் எனபது வேதாந்தத்துக்குப் புரியவில்லை.

அவன் வருவது நிச்சயம் எனபதறகாக இருக்குமோ, என்னவோ! அவரிடம்

சொன்னபடி வேகமாக அடுத்த பெட்டியை நோக்கி விரைந்தான். அங்கே

ஏகக் கூட்டம்.

(அமரர் தேவன்—மிஸ்டர்வேதாந்தம்)

Sunday, January 1, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--6

a







வாசலில் அவன் உடகார்ந்திருக்கும்மோதே சுமார் எட்டு வயதிலிருந்து பதினான்கு வயதுக்குடபட்ட பல குழந்தைகள் ஓடிவந்து எட்டிப் பார்ப்பதும்,
கோஷம் போட்டுக் கொண்டு உள்ளே ஓடுவதுமாக இருந்தன. வந்த குழந்தையே
திரும்பத்திரும்ப வந்து பார்த்துவிட்டு ஓடியது.




விதியை நொந்துகொண்டு உடகார்ந்திருந்தான் வேதாந்தம்.. கடைசியில் ஹாலில் ஒரு பெரியவரின் இரைச்சல் சப்தம் கேட்டது. சிறு பசங்கள் நடமாட்
டமும் ஓயந்தது. சுமார் அறுபதுவயது மதிக்கக்கூடிய ஒருவர் வெளியே வந்தார். அவர்தான் சந்தானம் அய்யங்கார் என்று அநுமானம் செயதுகொண்டு, எழுந்து நின்றான் வேதாந்தம்..





அவர் ஒரு நாறகாலியில் சாயந்துகொண்டு, வேதாந்தத்தை பக்கத்தில்
நிற்கும்படி ஜாடைகாட்டினார். பிறகு ஜந்துநிமிஷம் அவனை விழுங்கிவிடுகிறாற்போல் விறைத்துப் பார்த்தார். முதல் கேள்வியாக ,, ‘’உனக்கு இங்கே ட்யூஷனுக்கு ஆள் தேவை என்று யார் சொன்னது?’’ என்று
ஒரு வெடிகுண்டைப் போட்டார்.


‘’என் ஸ்னேகிதன் சீதாராமன் என்று பெயர். அவன் ஸ்ரீவைஷ்ணவன் இல்லை என்று நீங்கள் ---‘’

சரி, அது சரி—கல்யாணத்திறகு ஜாதகப் பொருத்தம் பார்த்தானாம். ஒருத்தன்.
எல்லாம் சரியாயிருந்ததாம்., பத்துப் பொருத்தம் எல்லாம்! கடைசியிலே ஒரு
தப்பு. இரண்டும் ஒரே கோத்திரம்.! ஹஹ்ஹஹஹ!அந்தமாதிரி ஆயிப் போச்சு
முன்னாடி கோத்திரம் பார்த்துக் கொண்டுதானே கொருத்தம் பார்க்கணும்? ஹ!’’
என்று கேட்டார் அவர் குரல் வேதாந்தம் ஏதோ குற்றம் செய்துவிட்டவன் போலவும், அதறகாக அவர் கண்டிப்பது போலவும் பார்ப்பவருக்குத் தோன்றும்படி இருந்தது.


‘’எந்த ஊர் உனக்கு ?’’, உங்கப்பாவின் பேர்?’’ என்ன படித்திருக்கே? இதுக்கு
முந்தி அநுபவம் உண்டா?’’ என்ன சம்பளம் எதிர்பார்க்கிறே?’’ என்று பெரியவர்
சரமாரியான கேள்விகளை அடுக்கினார். வேதாந்தம் மரியாதையுடன் நின்றபடி பதில் சொல்லி வந்தான். ‘தேசிகாச்சாரி’’ என்றபோது, சந்தானம் அய்யங்கார், மண்டையைத் துருவிப் பார்த்தார்.. ஞாபகத்துக்கு வரவில்லை. அ.ப்புறம் பார்த்துக் கொள்கிறேன்’’’ என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டார்.
‘எப்போ முதல் வருவே?’’ என்று அவர் கேட்டதும் ,நீங்கள் அழைத்தவுடன்
வருகிறேன்1’’ என்றான் அவன்.

உன் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் போ! தேவையானால் உனக்கு எழுதுகிறேன்.!’’ என்றார்.

‘’சார், எப்போது எழுதுகிறீர்கள்?’’


‘’ஒரு வாரம் பார்1 அதற்குள் லெட்டர் வரவில்லையென்றால், நான் வேறே ஆளை வைத்துக் கொண்டுவிட்டேன் என்று அர்த்தம். தெரிந்ததா?’’


ஒரு நமஸ்தே போட்டுவிட்டு வேதாந்தம் வெளியே வந்தான். கிழவர் முகபாவத்தையும் அவர் தலையை ஆட்டியதையும் பார்த்தால் அவனுக்கு
நம்பிக்கை ஏறபடவே இல்லை. சிறு பசங்கள் எல்லாம் கிஷ்கிந்தா வாசிகளாக
அவன் மனக் கண்ணில் உருவெடுத்தார்கள். ‘’தேவையானால் எழுதுகிறேன் எனபதறகு ‘’தேவையில்லை, போய்விட்டு வா! என்று அர்தமாக இருக்குமோ?’’ என்று ஆராயச்சி செயதான்.ஒன்றும் புலப்படவில்லை.


இதறகு ஒருவாரம் சென்று கீழ்கண்ட கடிதம் ஒன்று

வேதாந்தத்திற்கு வந்தது.


‘’மி!ஸ்டர் வேதாந்தம்,

உமக்கு எங்கள் குடும்பத்துடன் சென்னையில் வந்து தங்கி , ஏழு குழந்தை
களுக்கு ட்யூஷன் சொல்லிவைக்கஃச் சம்மதமானால், நாளை இரவு உம் சாமான்களுடன் மாயவரம் ஸ்டேஷனில் போட் மெயிலில் சந்திக்கவும்..
நாங்கள் அந்த வண்டியில் புறப்பட்டுச் செல்கிறோம்.. சென்னையில் உமது ஜாகை, சாப்பாட்டுவசதிகள் எங்களுடன் செய்து தரப்படும். மாதச் சம்பளம்
ரூபாய் முப்பது எதிர்பார்க்கலாம். எனபதை அறியவும்.

நாளை ரயிலில் சந்திக்க இயலாத படசத்தில், வேறு ஒருவரை நாங்கள்
ஏற்பாடு செயது கொள்ளுவோம்.. அப்புறம் என்னை சந்திக்க
முயற்சி செய்யத் தேவை இல்லை.

என். எஸ். சந்தானம் அய்யங்கார். ‘’


(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)