Pages

Saturday, December 10, 2011

காவேரி தீரம்---2


வெகு காலமாக ஓர் ஆசை; சின்னப் பையனாக இருந்த போதே முளைத்த ஆசை யாரும் இல்லாத ஒரு காடு; பரந்த காடு; புலி, கரடி இல்லாத காடு. அங்கே, நாணலும் புல்லும் வேய்ந்த குடிசை. அதன் வாசலில் ஓர் ஆறு ஆற்றின் இரு பக்கமும் ஆலும் அரசும் நாவலும் வாகையும் நெடியனவாக நிற்கின்றன. ஆற்று நீர் மந்தமாக நகர்கிறது. சூரியன் மரங்களின் இடுக்கு வழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக் கொண்டிருக்கிறான். ஆற்று நீரில் கணுக்காலளவில் நின்று இரண்டு கைகளையும் சேர்த்து, நீரை அள்ளி அர்க்கியமாக விழவிடுகிறேன். ஐயோ! ஐயோ! என்ன சாந்தி! என்ன சாந்தி என்னுள்ளே நிரம்பி வழிகிறது! பெரிய இன்பம் வேண்டும் என்று ஆசைப்படும் போதெல்லாம இந்தக் காட்சி தான் என்முன் நிற்கிற வழக்கம். ஆனந்தத்தின் எல்லையாக இது என் உள்ளே பொருள் கொண்டு நிற்கும். என்றோ ஒரு நாள் நான் இப்படி நிற்கப்போகிறேன். சாசுவதமாக நிற்கப் போகிறேன் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. பள்ளிக்கூடம் இராது, வீடு இராது, வேலை இராது, அப்போது.

இப்போது அந்த ஆனந்தமே கைக்கு எட்டிவிட்டாற்போல் இருந்தது. அந்தக் காலத்திலிருந்து நிலைத்துவிட்ட கனவுதான் நனவாகிவிட்டதா? அதே காட்சியின் நடுவே நின்று கொண்டிருக்கிறேன். காவிரி அரை மைல் அகலத்துக்குப் பரந்து நகர்கிறது. முக்கால் ஆற்றின் வெள்ளம். நான் இந்த ஓரத்தில், மணலாக இருந்த பகுதியில் நிற்கிறேன். இக்கரையிலும் அக்கரையிலும் வாழைத் தோப்புகள். அப்பால் வானையளக்கும் சவுக்கைக் காடு. குடிசைக்குப் பதில் ஒரு சின்னக் கோயில். இக்கரையில் எனக்குப் பின்னால் நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே மௌனம். நீர் தனக்குத்தானே மோதி ஓடுகிற சலசலப்பைத் தவிர, ஓர் ஓசை இல்லை. அக்கரை அரை மைல் தூரம். அங்கே தோப்பில் பாடும் பறவை ஒலிகூடக் காதில் விழாமல் அந்த மோனத்தில் அடங்கி விடுகிறது.

நான் தன்னந் தனியாக நிற்கிறேன். குளிக்கக்கூட மனம் இல்லை. சட்டையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்து மணல்மீது உட்கார்ந்தேன். இரண்டு மூன்று நாளாகவே மழை பெய்து காற்று குளிர்ந்து விட்டிருந்தது. இன்று இரவுகூடப் பெய்யப் போகிறோம் என்று சொல்வதுபோல் வான் நீலத்தில் பொதி பொதியாக அங்கும் இங்கும் திரண்டு நின்ற மேகங்களுக்குள் சூரியன் மறைந்தான். வெயில் மேலே பட்டதும் படாததுமாக விழுகிறது. சூடு இல்லாத வெயில். காலேஜிலிருந்து வெளியே வந்தபிறகு இப்படி உட்காரும் அநுபவமே அற்றுப்போய்விட்டது. அதனால்தான் குளிக்ககூட மனம் இல்லாமல் ஓடும் நீரில் ஆவியைக் கொடுத்து உட்கார்ந்து கிடக்கிறேன். ஒரு நிறைந்த சூனியம். நடு நடுவே தனிமையின் நினைவும் வருகிறது.

மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ஊர்க்காரர்கள் விடிய விடிய வந்து குளித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படியா நிர்ஜனமாக இருக்கும்? பட்டணத்தில் வெறும் கடலைத்தான் பார்க்கலாம். நீரின் சீற்றத்தைத்தான் பார்க்கலாம். இங்கே பரந்த நீர், பசுமை, சோலை, நிசப்தம் எல்லாவற்றிலும் தோய்ந்து கிடக்கமுடிகிறது.

தி. ஜானகி ராமன்

காவேரி தீரம்

ஓடும் நீரைக் குத்திட்டாற்போலப் பார்த்துக் கொண்டேயிருந்தால்

மனது எங்கோ போய் விடுகிறது. ஒன்பது மாத காலம், அல்லில்லை, பகலில்லை, வெயிலில்லை, மழையில்லைஅப்படி கர்ம சிரத்தையாக இந்தக் காவேரி ஓடிக் கொண்டிருக்கிறது. யாருக்காக ஓடுகிறது?- இதுவரை

அம்மாவுக்காக ஓடிற்று. இப்போது மறுபடியும் உலகத்திற்காக ஓடத்

தொடங்கி விட்டது.

தொமேர், தொமேர் என்று வாண்டுப் பயல்கள் கரையில் நின்ற நாவல்

மரத்தில் ஏறி ஏறி ஆற்றில் குதி போட்டுக்கொண்டிருந்தார்கள். குஞ்சு திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.குதியினால் தெரித்த நீரில் ஓரிரண்டு நிவலைகள் திண்ணையின் முகட்டில் வந்து விழுகின்றன.

காவேரி அவ்வளவு கையெட்டு.. வாசற்படியைவிட்டு இறங்கி சற்று காலை வீசி வைத்தால் முதல்படி மீதுதான் வைக்க வேண்டும். அக்கரையிலிதுந்து பார்த்தால் ஒவ்வொரு வீடும் காலை நீரில் தொங்கவிட்டு கனவு காண்பது போல் இருக்கும். இப்படி ஒரு தெருவே கட்ட வேண்டுமென்று யாருக்குத்தான் தோன்றிற்றோ! ! குடிக்க, குளிக்க, சௌசம் செய்யஎல்லாவற்றிற்கும் இந்தக் காவேரிதான் தெருவிலிருக்கிற ஆச்சாரப் பாட்டிகள் பேரன் மேலே பட்டு விட்டான், சாக்கடை நீர் காலில் தெளித்துவிட்டது என்று நினைத்து நினைத்து

வாசலுக்கு வந்து ஒரு எட்டு வைத்து முழுகிவிட்டுப் போகிறார்கள். அம்மாவும்

அப்படித்தான் செய்து கொண்டிருந்தாள். நினைத்து நினைத்து வந்து முழுகுவாள். சிலு சிலுப்புக்கு அந்த எண்பத்தைந்து வயது அஞ்சினதில்லை.

கை,கால் மூட்டுவலி,முதுகுவலிஇதெல்லாம் அவளுக்கு என்னவென்றே

தெரியாது. அவள் அஸ்தியைக் கரைக்கிறவரையில் பல் முப்பத்திரண்டும் தேசல் மாசலில்லாமல் தாக்குப் பிடித்துவிட்டன. இப்போதும் அம்மா படியில்

உட்கார்ந்து அலுத்துக் கொள்வதுகூடக் கேட்கிறார்ப்போல் இருக்கிறது.நான்

முழுகிட்டுப் போயிடறேனே, அப்புறமா குதிக்கிறதோ, காலை ஒடிச்சுக்கறதோ , எதையாவது செய்யுங்களேண்டா’’, மற்ற கிழங்களைப் போல கரியாய்ப்’’ போகவும் , ‘’கட்டையிலே ‘’ போகவும் அவளுக்கு ஆசி கூறத் தெரியாது.

சரி,பாட்டி,சுருக்ககஃ குளிச்சுட்டுப் போங்கோளேன். ஜலதோஷம் வந்து தொலைக்கப் போறது.’’ என்றுஒரு வாண்டு சொல்லி ‘’எலே, இருங்கடா, பாட்டி

கரையேறட்டும் ‘’ என்று மற்றதுகளை அடக்கி வைத்திருக்கும். அம்மாவுக்கே காவேரி ஓடினாற்போலிருந்தது. கால் நகம், கை நகம் ஒன்றையும் விடாமல்

இவள் தேய்த்து சுத்தி பண்ணிக் காவேரியில் கரைத்துக் கொண்டேயிருப்பாள்

எழுபத்திரண்டு வருஷம் இப்படிக் கரைத்திருப்பாள். பதினாறு வயதில் இந்த வீட்டில் புகுந்தாளம். கடைசியிலே போன ஆனிக்கு அவளே கரைந்து போன பொழுது அவளுக்கு வயது எண்பத்தாறு.சின்ன வயதில்லை. ஆனால் அம்மா

அம்மாதானே.? ஆயிரம் பெண்டாட்டி வந்தாலும் ஆகிவிடுமா? ஒரு தலைவலி வந்து இவள் நெற்றியில் கை தொட்டுத் தடவினால்,அம்மா தொடுகிற மாதிரி ஆகி விடுமா?

இத்தனை குதி, இத்தனை வாண்டுகள்,இத்தனை இரைச்சலுக்கும் நடுவில்

படிக்கட்டு சூன்யமாகத்தான் இருந்தது குஞ்சுவுக்கு. சற்று கழித்து அவர் மனது கூட சூன்யமாகிவிட்டது. ‘’அம்மா, அம்மா’’ என்று முணு முணுக்கையில்

மனது சோம்பி, கண் செருகிக் குத்திட்டுக் கிடந்தது.

(அப்பாபிள்ளை----தி.ஜானகிராமன்.சிறுகதை)

Friday, December 9, 2011

தி. ஜானகி ராமன்

அன்பு வைத்த பிள்ளை

இரவு பத்து மணிக்கு ரேழியில் படுத்திருந்த கிழம் ஜலம் ஜலம்

என்று அரற்றிற்று. ஊருக்கு அப்போது இரண்டாம் ஜாம.ம். ஊமைக்

கோட்டானின ஊங்காரம் ஓய்ந்து , இருளின் சுவட்டிலேயே கிராமத்

துக்குள் வந்த தூக்கமும் வந்துவிடும்.. அந்திவேளையியில் சோற்றைக் கொட்டிக் கொள்ளக் கூடாது என்ற பழைய பழைய கட்டுப்பாட்டைக்

கொலைசெய்துவிடாமல் காத்திருந்து,நாலு நட்சதிரத்தைக் கண்டதும்

மத்தியான மிச்சத்தைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவார்கள். அடுத்த வீட்டு ஊஞ்சல்பலகை மட்டும் மந்த ஆட்டம் ஆடி யாரையோ தூங்கப் பண்ணிக் கொண்டிருந்த்து. இந்த அகாலத்தில்தான் கிழம் நீருக்கு அலறிற்று. மாட்டுப்பெண் சுட்டதும் சுடாததுமாகக் கால் சேர் வெந்நீர் கொண்டு வந்து

வைத்துவிட்டுப் போனாள். குடித்துவிட்டுஅம்மாடி,அம்மாடி என்று கிழம்

ஆச்வாசக் குரல் கொடுத்த்து.

தப்பு தப்பென்று மெத்தையை தட்டி உதறிவிட்டு அகமுடையான் காமிரா

உள் ஜன்னல் அடிக்கதவைச் சாத்தினான். மாட்டுப்பெண் வெந்நீர்பாத்திரத்தை

ஷெல்பில் வைத்து அடுக்களைச் சங்கிலியைப் போட்டுவிட்டு அங்கே வந்துவிட்டாள்.

ஒரு நாழி ஆயிற்று.

கொஞ்சம் ஜலம் கொண்டு வரயா?’’ பதிலில்லை.

பாகு, பாகு, கொஞ்சம் வெந்நீர் கொண்டு வாயேன்,’’

பதிலாக அடுத்த வீட்டுக் கடிகாரம் டாக் டாக் டாக் என்று ஆற்று மணலை

எண்ணுவதுபோலக் காலத்தை வினாடி வினாடியாக அளந்து கொட்டிற்று.

பாகு, பாகு!’’

நாலாவது வீட்டில் நெருப்புக் குச்சி கிழித்தால் கிழத்திற்றுக் கேட்கும். ஆனால்

அதைவிடக் கம்மிய குரலில் காமிரா உள் சம்பாஷணை நடந்த்தால், அதன்

செவிக்கு எட்டவில்லை.

விடுங்கோன்னா அம்மா தூத்தம் கேட்கரா’’

தூங்கறாப்பலே இருந்துடேன்.’’

இப்ப ஏன்னு கேட்டுட்டேனே’’

தாகம் கிடந்து அடிச்சுக்கரது அப்புறம் கொண்டு கொடேனாம்.’’

பாகு, பாகு---தூங்கறியாம்மா?’’

நீங்க விடுங்கோ-இதென்ன பச்சக் குழந்தை மாதிரி- ரொம்ப அழகாயிருக்கு-அவ்வளவு என்ன!’’

சரி, கொடுத்துட்டு உடனே வந்துடறியா?’’

ம்’’

உடனே வந்துடணும்’’

உடனே வந்துடரேன், விடுங்கோ’’ என்று வாக்குறுதியளித்துவிட்டு, தலைப்பைப் பிடுங்கி குலைவை சரிப் படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

கூடத்து ஆணியிலிருந்து பெட்ரூம் விளக்கை எடுத்து, அடுக்களையில் மெழுகின அடுப்பின் மீதிருந்த கெட்டிலிலிருந்து வெந்நீர் எடுத்து இடை கழிக்கு

வந்தாள். கிழிசல் புடவையுடன் கிழம் கிடந்த அலங்கோலம் சகிக்கவில்லை.

பிள்ளை வைத்திருந்த அன்பு ஒவ்வொரு கிழிசலிலும் எட்டிப் பார்த்து.—

இந்தாங்கோ-வெந்நீர் ஆறியிருக்கே.’’

ஆறியிருந்தா என்னடீம்மா?—வாயை நனைச்சுக்கத்தானே—ம்---அப்பாடா, அம்மாடி,அப்பா—ஹூம் போறும்’’

போறுமா, இன்னும் கொஞ்சம் கொண்டு வரட்டுமா?

போ றும், நீ போய் படுத்துக்கோம்மா

காலை அமுக்கி விட்டஃடுமா?’’

வாண்டாண்டிம்மா—ம்—நீ போய் படுத்துக்கோ’’

மாட்டுப்பெண் திரும்பி, ஆணியில் விளக்கை மாட்டிச் சிறிதாக்கிவிட்டு,வாக்குறுதியைக் காப்பாற்ற உள்ளுக்குள் வந்தாள்.

கட்டிலைவிட்டு எழுந்து காத்திருந்தவன் திடீதென்று அவளை அணைப்பில்

கொண்டு வேண்டாத திகைப்பில் அவளை ஆழ்த்தினான்.

இடைகழியில் மீண்டும் இருட்டு. மழை பெய்கிறமாதிரி தோன்றிய இருளைத்துளைத்து த் துளைத்துப் பார்த்த்து கிழம். அதற்கு வருத்தந்தான்.

கடைசி காலத்தில் இஷ்டப்படி இருக்க முடியவில்லையே என்று.’’ உடம்பில் தெம்புள்ள போதே செத்துப் போய்விட வேண்டும், கழுகு மாதிரி முடிவில்லாமல் உயிரை வைத்துக் கொண்டு ஊன் தளர்ந்து, புத்தி குழம்பி,

தொட்டதெள்கெல்லாம் இரண்டாம் கையை எதிர்பார்ர்த்துக் கொண்டிருப்பது

பரம துக்கம் என்று கிழம் அநுபவ பூர்வமாக சித்தாந்தம் செய்து கொண்டது.

அது அவ்வாறு துக்கப் பட்டதற்குப் பாத்தியம் உண்டு. குடும்த்திற்கு இருக்கிற இரண்டரைவேலி சொத்தும் அது கொண்டு வந்த்துதான். கட்டின புருஷனுக்கு சூச்சக்கரக் குழி நிலம் கூடக் கிடையாது. கிழம் அப்பாவுக்கு ஒரே

பெண். பையனிடம் அலாதியான பிரீதியினால், பூமி பூஜ்ஜியமாக இருந்தாலும்

பெண்ணைக் கொடுத்து இரண்டரைவேலியையும் அவனுக்கு எழுதிவைத்துப் பெண்ணுக்கு என்று தனியாக ஒரு ஆயிரம் ரூபாயை ஒதுக்கி வைத்துவிட்டுப்

போனார் அவர். கிழத்துக்கு இப்போது அறுத்தைந்து வயது. நாற்பத்தைந்து வயதிலேயே கொழுக் கொம்பை இழந்துவிட்டது. இப்போது பிள்ளையிடமும்

,மாட்டுப் பெண்ணிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

கிழத்தின் நிறைவேறாத பாழ்த்துப்போன ஆசைகளெல்லாம் ஒன்று திரண்டு

புலம்பத் தொடங்கின.

சொத்தெல்லாம் என் பேரில் இருந்தால் இப்படி அலட்சியம் பண்ணுமா

கீழ்க் கிளை? அம்மா, அம்மான்னு காலைப் பிடிச்சிண்டு கிடக்கும்!.பணம்தான் என் பேரில் போட்டு வைத்திருக்கப் படாதா?

கையெழுத்துப் போடத் தெரியாட்டா, கீறல் வச்சு வாங்கிக்கறேன் அவன் பேரில்

இருக்ககஃ கொண்டுதானே சம்பாதிச்ச பணம்னு நெனச்சுனூட்டான் . ரெண்டு

புடவையும் ராம பாணம் போட்டாப்போல ஆயிடுத்து ஒரு புடவை எடுத்துத் தாடான்னு எத்தனை மாசமாய்ச் சொல்றேன்.? காதிலே போட்டுண்டானா---

வீட்டிலே சுடலாட்டமா பளிச் பளிச் சின்னு ஒண்ணு நிக்கறது. எதித்த வீட்டு முகரக் கட்டைக்குக் கொண்டுபோய் வண்டி வண்டியா நெல்லைக் கொட்டறான். ஒத்தருக்கும் தெரியாதுன்னு நெனச்சிக்கிண்டு, ஊரிலே சேதி படை படைச்சுக் கிடக்கு--- பாவம் பண்ணினா ஒரு பிராணிக்குத் தெரியாதுன்னு நெனச்சிண்டு பண்றதே உலகம்!.

ஏழு பிள்ளை பிறந்து ஆறு மாசத்திலேயும் மூணுமாசத்திலேயும் குழியிலே

புதைச்சிட்டுது. குறை வேறு நாலு ஆயிட்டுது. அந்தப் பாவிக்கு அப்படித்தான்

நடக்கும். அவன் தொட்டது துலங்காது இருக்கற இடமே விடியாது. வீடு , வீடாவா இருக்கு? சுடுகாடாட்டமா, வெறிச்சோடிக் கிடக்கு மனுஷா வாழற

இடமாவே இல்லை’’

கிழம் தாகத்திலும், பசியிலும் பழங்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த்து. அதற்கு

என்னமோ குழந்தைகளுக்குக் குறைச்சல் இல்லை பெரிய பிள்ளைக்குப் பிறகு

மூன்று பெண்கள்,அப்புறம் இரண்டு பிள்ளைகள் அப்புறம் இரண்டு பெண்கள்.

எல்லாவற்றிற்கும் கல்யாணமாகிவிட்டது குழந்தை குட்டிகளும் பிறந்து விட்டன.

அம்மாடா, கல்யாணந்தான் பண்ணிக் கொடுத்தாச்சு, கூடப் பிறந்த்துகளை ஒருநாளைக்காவது அழைச்சிண்டு வந்து வச்சிக்கணும்னு ஆசையிருக்காதா? ஒரு பிரசவம், வளைகாப்புன்னு பிறந்தவீட்டில் ஒன்று

நடந்திருக்கணுமேஅதுகளுக்கு.பெரிசு இரண்டும் இங்கே பிள்ளை பெத்தது

மகாராஜா மாதிரி அவர் இருந்தார். நடந்த்து. அப்புறம் ஒரு பெண்ணாவது

தலைகாட்டணுமே. புருஷன் வீட்டில் அடிவச்சதுதான். இருக்கோ செத்து

தோன்னுகூடத் தெரியலை. போன வருஷம் சின்னது கடிதாசு போட்டது.

‘’உடம்பு சரியில்லை,அங்கே வந்து ஒரு மாசம் மருந்து சாப்பிட்டுட்டுப்

போறேன்’’னு பதில் போட்டானா பாவி, பாவி! எப்படி இருக்க முடிஞ்சது

வீடு வெரிச்சோடிக் கிடக்காமல் என்ன செய்ய முடியும்?’’

கிழம் மௌனமாக்கஃ கண்ணீர் உகுத்தது

அடுத்த இரண்டு பிள்ளைகளும் நல்லதுகள்தான். அம்மா என்று ஒரு பாசத்தை

உணரும் சக்தி உண்டு.அதுகளுக்கு!. கிழத்திற்கு அவர்களிடம் போய் இருக்க வேண்டுமென்று ஆசை.

இரண்டாவது பிள்ளைக்கு கும்பகோணத்தில் இரண்டுவருஷங்களாகப் பாங்கியில் வேலை. அவனுக்குப் பெண்டாட்டி வழியில்லை.அவனைவிட உயரத்தில் ஒரு சாணும் அகலத்தில் இரண்டு சுற்றுமாகச் செழித்திருந்த அவள்

அவனைக் கட்டை விரலில் மடக்கி வைத்திருந்தாள். பிண்ணாக்கு மூட்டை மாதிரி உடம்பும்-ஆனைக் காலும், பட்டிக்காட்டுப் பேச்சுமாக்கஃ காட்சி கொடுத்த கிழத்தைக் கண்டால் அவளுக்குச் சிரிப்பும், ஆத்திரமும் வருகிறதாம்.

ஆகவே அவன் விசுவாசம் செயல் வரையில் வரவில்லை.

மூன்றாவது பிள்ளைக்கும் பெண்டாட்டி வழியில்லை. சாந்திக் கல்யாணத்தன்று

இரவில் கட்டிலில் ஓர் ஓரமாக மூஞ்சியைத்தூக்கிக் கொண்டு உட்கார்ந்து

‘’நீ ஒரு ஆம்பிளையா இருந்தால் என்னைத் தொடாதே, தொட்டால் கூச்சல்

போடுவேன் என்று கணவனை பயமுறுத்திற்றாம். அதைப் போகிற வழியில் விட்டுத் திருப்ப முயன்றார்கள். பையன் கிராப் வைத்துக் கொண்டான்.பவுடர் போட்டுக் கொண்டான். மைனர் வேஷம் போட்டான். தமிழ் நாவல் வாங்கிக்

கோடுத்தான். அவள் மசியவில்லை.ஆறு மாதம் கழித்து ‘’எங்காத்திலே வந்து

இருந்துவிடுங்கள் ‘’ என்று அவனை அழைத்துக் கொண்டு சிதம்பரம் போய்

விட்டது. மாமனாரின் காபி ஹோட்டலில் அவன் ‘’காஷியர்’’ வேலை பார்க்கிறான் இப்போது.

பிள்ளைகளின் துரதிஷ்டத்துக்காகவும் கிழம் கண்ணைத்துடைதுதுக் கொண்டது. அது புக்ககத்திற்கு வந்தபோது மாமனார் மாமியாருக்கு, தெய்வத்துக்கு செய்வது போல்தான் செய்து போட்டது. மாமியார் கொஞ்சப்

பாடு படுத்தவில்லை. கொஞ்சப் பட்டினி போடவில்லை. இரண்டரை வேலியைக் கொண்டுவந்தவள் என்று பயப்படவில்லை.

கிழத்தின் பெரிய மாட்டுப்பெண்வெந்நீர் கொடுத்துவிட்டுப் போனவள்

செய்துபோடத்தயாராய் இருக்கிறாள். அவள் சாது. அவன்தான் விட மாட்டான்.

அவனுக்கு எப்பொழுது பார்த்த்தாலும் காலதேசப் பிரக்ஞையே இல்லாமல்மங்கள விலாசத்தில் இருக்க வேண்டும். மனைவிக்கு மனித சரீரம் இல்லை

என்று அவன் நினைத்துவிட்டான்போல இருக்கிறது. கல்லுக் கல்லாக ஏழு

குழந்தைகளைப் பறிகொடுத்து நாலு குறையும் கண்டுவிட்டாள் அவள்.அவனுக்கு மனம் கோணாமல் நடந்து வதுகிறாள். தெய்வப்பி றவியோ என்னவோ?

பீற்றல் பாயில் படுத்து மனசை அலையவிட்டுக் கொண்டிருந்த கிழத்திற்கு வாய் விட்டு அழலாம் போல இருந்த்து. ஆனால் தெம்பு இல்லை. பத்து நாளாக அதற்குக் கடும் ஜுரம் அன்ன ஆகாரம் இல்லை. வெந்நீர்தான்

மருந்து, சாப்பாடு எல்லாம் பிள்ளை ரிஷி மாதிரி பற்ற்றஃறுத் திரிகிறான்.

ஒரு வைத்தியனை அழைத்துப் பார்க்கத் துப்பில்லை.

‘’ பாகு, பாகு!’’

கிழம் ஈனஸ்வரத்தில் அழைத்த்து. மீண்டும் நா வரட்சி.. கண் மேலே கொண்டு செருகிற்று.

பாகு,பாகு, ஏ பாகு, கொஞ்சம் ஜலம் கொண்டு வாயேன்.’’

கடிகாரம் காலத்தை அளந்து கொட்டிற்று.

‘’பாகு,பாகு’’

விச் விச்சென்று எங்கோ ஒரு சுவர்க் கோழி.

‘’பாகு, பாகு’’

காமிரா உள்ளில் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு, அயர்ந்து போய் கனவில்லாத் துயிலில் ஆழ்ந்து கிடந்தாள் பாகு. அவளுக்கு முன்னாலேயே அவன் தூங்கிவிட்டான்.!.

வெளுக்கிற வேளைக்குச் சாணி தெளிக்க வந்த வேலைக்காரி’’எழுந்து அப்பாலே குந்தும்மா, மெளுகணும்’’

என்று ஒரு சத்தம் போட்டாள். கிழம் அசையவில்லை

‘’

யம்மா, எளுந்திரும்மான்னா,’’

அருகில் போய்ப் பார்த்த போது அவளுக்கு சந்தேகம் தட்டிற்று.. கிழத்தின் முகம் சரியில்லை. கண் கறுப்பைக் காணோம். மூக்கில் கை வைத்துப் பார்த்

தாள்.கால், கைஎல்லாம் ஜில்லிட்டிருந்தது

காமிரா உள்ளண்டை ஓடி, அம்மா,அம்மா ‘’ என்று பறந்தாள் வடுவாயி.

பதில் வராததும் உரக்ககஃ கூப்பிட்டாள்.

‘’ஏண்டி?’’

ஏண்டியா? வாங்கம்மா, சட்டுனு நல்லா படுத்திருக்கீங்க.’’

திகிலடைந்து, மேலிருந்து கையை எடுத்து வைத்துவிட்டு பாகு ஓடி வந்தாள்.

‘’

அம்மாவைப் பாருங்கோ’’

மஞ்சத்தில் அரைத் தூக்கத்தில் படுத்திருந்தவனுக்கு ஆத்திரமாக வந்த்து.

சனி’’ என்று வைய வாயெடுத்த போது ‘’ஜயோ,ஜயோ அம்மா வடிவு, ஜயாவை எழுப்புடீ! அம்மா,அம்மா, போயிட்டேளே!’’ என்று அவச் சத்தம் வீறிட்டு எழுந்து அவன் உடலை வெருட்டி, உடலை உலுக்கி நிமிர்த்தியது.

சோம்பியிருந்த உள்ளம், கலவரத்தால் துடித்தது. நெஞ்சு அடித்துக் கொள்ள, போர்வையைப் காலால் உதறிவிட்டுப் பாதி ஓட்டமாக ஓடி வந்தான்.

சவத்தின் மார்பின் மீது சாய்ந்து பாகு புலம்பினாள். இடுப்பில் கைகளை வைத்து அவன் கண நேரம் இமை கொட்டாமல் நின்றான். அதிர்ச்சியில் நின்று போன கடிகாரத்தைப்போல அறிவு ஸ்தம்பித்திருந்த்து. முகத்தைப் பார்த்தான்.

கண்ணைப் பார்த்தான். புரண்டு கிடந்த கையைப் பார்த்தான். வீங்கிப் போயும், சூம்பிப் போயும் வெளுத்திருந்த காலைப் பார்த்தான். பிரமை தெளிந்து அருகில்

வந்தான். உதட்டைக் கடித்து,அழுகையை அமுக்கி ‘’அம்மா’’ என்றான். கோரமாக அந்த ஆண் குரல் தேம்பிற்று. கரகரவென்று கண்ணில் நீர் பெருக்

கெடுத்த்து. அம்மா, அம்மா’’! என்று துடையை அசைத்தான். அம்மா எங்கே?

திடீரென்று நாலைந்து ஸ்திரிகள் வாசலிலிருந்து வந்து மாட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்டு பிலாக்கணத்திற்கு ஆரம்பித்தார்கள். ஜந்து நிமிஷம் ஆயிற்று.

கூட்டம் பெருகிற்று. கடைசியில் இடைகழி கொள்ளவில்லை. பெண்மை முழுவதும் திரண்டமர்ந்து ஓலமிட்டது. ஒருவரோடும் பேசாமல் ஓரிரண்டு குரல்கள் தமக்கென்று தனிச்சுருதி எடுத்துக் கொண்டு சோகத்தைக் கர்ண கடூரமான கேலிக் கூத்தாக அடித்தன. அவனுக்கே இதைச் சகிக்க முடியவில்லை பக்கத்திலிருந்த வயது முதிர்ந்த ஸ்திரி

பத்துப் பொண்ணு பிள்ளை பெத்து

பட்டுப் பாயில் உக்காத்தி வச்சு

பாத்து மகிழ்ந்தாயே,

பீத்தல் பாய்தான் கிடைச்சுதோடீ,

படுத்திண்டு செத்துப் போக

பீத்தல் பாய்தான் கிடைச்சுதோடீ!’’

என்று சொந்தக் கவனம் ஒன்று புனைந்து அவன் மீதிருந்த எரிச்சலைக் கம்பங்கள், கமகங்களுடன் அழுது தீர்த்தாள்.

மாமி,மாமி நான் மோசம் போயிட்டேன் மாமி. இப்படி திடீர்னு போயிடு

வான்னு நெனக்கலியே; நீங்க சொல்லிக் காட்டும்மடி ஆயிட்டுதே!’’ என்று

விக்கினான் நாராயணசாமி. அதுதான் அவன் பெயர்.

‘’நாராயணசாமி, அவ்வளவுதான் கொடுத்து வச்சது. பிணத்துக்காவது நல்ல

கிழிவா வாங்கிப் போர்த்து---எழுந்து வா, நாழியாச்சு. தம்பி, தங்கைகளுக்கெல்லாம் சொல்லியனுப்பணும். சாமான்களைத் தருவிக்கணும்’’

என்று ஊருக்குப் பெரிய கிழவர் கிண்டலை மறந்துவிடாமல் துரிதப் படுத்தினார்.

குடவாசலுக்குப் போய் சின்னப் பிள்ளைக்கு சிதம்பரத்துக்குத் தந்தி கொடுக்க

ஒரு ஆள் ஓடினான் கும்ப கோணத்திற்கு ஒரு ஆள் சைக்கிளில் கிளம்பினான்.

இரண்டாவது பிள்ளைக்குச் சொல்லிவிட்டு சாமான் வாங்கிவர. சாமான் ஜாபிதா தயாரானதும் சைக்கிள் புறப்பட்டு விட்டது

சைக்கிள் தெருக்கோடி திரும்பியதும் என்னமோ நினைத்துக் கொண்டான்

நாராயணசாமி. திடுதிடுவென்று எதிர்வீட்டுக்குள் ஓடி கொல்லையைக் கடந்து

வாய்க்காலையும் தாண்டி சாலை மீது ஏறினான். சைக்கிளும் வந்து.

அண்ணாவு, அய்யா வரப்போ,ஒரு போட்டோ பிடிக்கிறவனையும் அழைச்சுக்கிட்டு வரச் சொல்லு. மறந்து போயிடாமே அழைச்சிக்கிட்டு வரச் சொல்லணும்.’’அவன் சொல்லும்போது தொண்டை அடைத்துக் கொண்டது.

ஏதுக்கு ஜயா?’’

அவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை கொஞ்சம் சமாளித்துக் கொண்டு, நீ சொல்லேன்’’ என்று சுருக்கமாகச் சொன்னான்.

ஒரு மணிக்குப் பிறகு, மண்டை வேடிக்கிற வேயிலில் ஒரு ஸ்பெஷல் பஸ்ஸில் ஒரு கூட்டம் வந்திரங்கிற்று. கும்பகோணத்திலேயே இருந்த

பெரிய பெண், அவள் புருஷன், ஜந்து பேரன் பேத்திகள், மூன்றாவது பெண்

அவள் குடும்பம், பிறகு கிழத்தின் பிள்ளை, மாட்டுப் பெண்—கடைசியாக

ஒரு போட்டோக்காரன் சாமக்கிரியையுடன்—எல்லோரும் இறங்கினார்கள்.

தெருவுக்கு விசேஷப் புதுமையான பஸ்ஸைப் பார்க்க ஒரு சிறுவர்

கூட்டம் கூடிற்று. ஸ்திரிகள் வாசலில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

பீற்றல் பாயில் செத்த கிழம் அல்ல, அதன் கும்பகோணத்துச் சந்த்திகள் கூட்டம் ஒரு கார் கொள்ளும்!’’. என்று அறிந்து ஆச்சரியப் பட்டார்கள்.

ஜந்தாறு பேராகத் தூக்கி கிழத்தை நாற்காலியில் உட்கார வைத்தார்கள்

கிழத்திற்கு ரொம்பவும் பாரி தேகம். ஆனால் நாற்காலியில் வைத்த்தும் தலை

நிற்காமல் துவண்டு விழுந்த்து. அங்கங்கள் விறைத்துவிட்டன.சரிப்படவில்லை

கீழே இறங்கிச் சுவர் மீது சாய்த்துப் பார்த்தார்கள். பயனில்லை. போட்டோக்காரனின் முகம் பேதிக்குச் சாப்பிட்டது போல் இருந்த்து.

‘’சார்,ஒரு போஸூம் சரிப்படவில்லை. நான் போட்டோ எடுக்க முடியாது.’’ என்றான்.

‘’

ஏன்’’

இந்த உடம்புக்கு இனிமே நல்ல போஸ் வராது. இன்னும் இரண்டு மணி

முன்னாலாயினும் ஏதாவது செய்து எடுத்து விடலாம்.. இனிமேல் முடியாது.

எடுத்துப் பாரேன்.’’

அது எப்படி முடியும்? முடிந்த மட்டும் பார்த்தாச்சு. நடக்கவில்லை. நல்லா

எடுக்காவிட்டால் எனக்கு சமாதானப் படாது. பணத்துக்காகப் பார்க்கிறவன் இல்லை.’’

அதுக்காக விட்டு விடுகிறதா? நாங்கள் ஆசையாகத்தானே உம்மை அழைத்து வந்தோம்.’’

எனக்குத் தெரிகிறது. ஆனால் முடியவில்லையே. நாம் கொடுத்து வக்கல்லேன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்.’’

அப்படியே கிடக்கிற வாக்கில் எடுத்துவிட்டால்.?

நான் அப்படி எடுக்க மாட்டேன்.’’

உண்மையில் அந்தக் கிழத்தைஆனைக்காலும்,பூதுடலும்,தேய்ந்த பல்லும்,

விழுந்த பல்லுமாக்கஃ கிடந்த அந்த கிழத்தை, சதைமூட்டையைப் படம் எடுக்க அவனுக்கு அருவறுப்பாக இருந்த்து. காரணம் அவனுக்கே தெரியவில்லை.

பார்த்தவுடனேயே எடுக்க்கஃ கூடாது என்று தோன்றிய எண்ணத்தை நிறைவேற்றுவதில் முனைந்துவிட்டான்.

பிள்ளைக் கிளைகளும் பெண்களும் மாப்பிள்ளைகளும் ஆன மட்டும்

மன்றாடிப் பார்த்தார்கள். அவன் இன்னும் பிகுப் பண்ணிக் கொண்டான்.

என்னை மன்னிச்சுடுங்க சார், தம்பி, சாமானைத் தூக்கு’’ என்று, அழைத்து வந்த சோக்ராவிடம் சொல்லிவிட்டு நடந்தான் போட்டோக்காரன்.

நாராயணசாமிக்கு ஏமாற்றம்அதைவிட ஆத்திரம், பொங்கிற்று.

அவன்தான் சொல்லிவிட்டானே. கொடுத்து வைக்கல்லேன்னு நினச்சுக்க

வேண்டியதுதான்னு.அவ்வளவுதான்.விடு.காரியத்தைப் பாரு. ஊரில் குஞ்சு

குழந்தைகள்ளாம் பட்டினி கிடக்கு’’ என்று ஊருக்குப் பெரிய கிழவர் சொன்னார்.

புண்ணில் பாய்ச்சிய இந்தக் கோலைப் பொறுத்துக் கொண்டு ‘’இதுக்குக் கூடவா மாமா நான் கொடுத்து வைக்கலை?’’ என்று தேம்பினான் அவன்.

(நன்றி; அமரர். தி.ஜானகிராமன் கதைகள்-யாதும் ஊரே----

மீனாட்சி புத்தக நிலையம்)

Monday, November 28, 2011

வயதானோர் அதிகரிக்கும் அபாயம்-3

யாரு?என்ன?பத்மாவா?ஜய்ய்ய்யோ, எப்போ? என்ன மாப்பிள்ளை இது

பெரிய இடியாப் போடரேள்?’’

அடி வயிற்றில் திக்கென்றது. நாகுப்பாட்டி பீதியுடன் பார்வதியை நிமிர்ந்து

பார்த்து அலங்க மங்க விழித்தாள்.

பார்வதி சரேலென்று அறையை விட்டு கூடத்திற்கு விரைந்தாள் ‘

என்னடி ? என்ன சமாச்சாம்?’’

காமு’’’’ வென்று ஓலமிட்டது கேட்டது.

நாகுப்பாட்டிக்கு கையும் காலும் வெலவெலத்துப் போயிற்று.

யாரு இப்ப?

’’’பத்மா இன்னிக்குக் காலமே ஷாக் அடிச்சு செத்துப் போயிட்டாளாம்மா!

ஜய்யயஃயோ! அடிப்பாவி!’’

அது என்ன அலறல்! அது என்ன ஓலம், லோகத்து துக்கமெல்லாம்

பிரளயமாப் பொங்கினாப்பலே!

நாகுப்பாட்டிக்கு துக்கத்திற்கு மேல் பீதியேற்பட்டது. இலையின் முன்

சோற்றைப் பிசையும் குத்துக் கல்லாயத் தான் உடகார்ந்திருப்பது ஏதோ

குற்றம் செய்தாற்போல் உடம்பு நடுங்கிக் கூசிற்று. மூளை மரத்து செயலிழந்து

நின்றது, வரப் போகிற தாக்குதலை எதிர்பார்த்து—

பத்திரகாளி ஸ்வரூபமாய் ஆவேசத்துடன் பார்வதி உள்ளே நுழைந்தாள்.

நாகுப்பாட்டிக்கு நெஞ்சு உறைந்து போயிற்று. சுப்புணி செத்தும், ரமேஷ்

செத்தும் ஞாபகத்துக்கு வந்த்து.

என்னை விட்டுட்றி---- என்னை----‘

பார்வதி கிடுகிடுவென்று அடுப்படிக்குச் சென்று வெண்கலப்பானையை

எடுத்து,

’’இந்தாங்கோ, கொட்டிக்கோங்கோ! என்று கர்ஜித்தபடி தலைகீழாய் நாகுப்

பாட்டியின் இலையில் பானையைக் கவிழ்த்தாள். சூடான அன்னப் பருக்கைகள்

பாட்டியின் புறங்கையில் சுறீர் என்று தெரித்தன. பாட்டி விடுக்கென்று பின்னுக்கு நகர்ந்தாள்.

விக்கித்துப் போய் பயந்த நிலையில் நா உலர்ந்து. அந்த வெண்கலப் பானையையும் ஆவி க்கஃகும் மலை போல இருந்த அன்னக் குவியலையும் மார்த்து விழித்தாள்.

எல்லாரையும் வாரி வாரி அனுப்பத்தானே இப்படி ஆணி அறைஞ்சாப்பலே

உட்கார்ந்திருக்கே.!. இன்னும் எத்தனை நாள் உனக்குக் கொட்டிக்கணும்.? உன்னை அந்த சண்டாளப்பாவி எமன் தூக்கிண்டு போக மாட்டேங்கறானே.

பிஞ்சையும் ,மொட்டையும் பறிச்சிண்டு போறானே1’’

பார்வதியின் வார்த்தைகள் எதுவும் நாகுப்பாட்டியின் செவியில் விழவில்லை.

அந்த ரௌத்திரமும் வெறுப்பும், கொலைவேறியும் மொத்த உருக்கொண்டு

விசுவரூபமாய் பயமுறுத்திற்று.

பேத்தி செத்த துக்கத்தைவிட இவளுக்கு எம்மேல் இருக்கிற வெறுப்புத்தான்

ஜாஸ்தி. அடுத்தாப்பலே அந்த அரிவாமணையை எடுத்து என் மண்டையிலே

போட்டாலும் போட்டுடுவே., போட்டுட்றீ, அப்படியாவது நான் ஒழிஞ்சு போறேன்.

வாசற்கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள் பார்வதி க்ரோத்தஃதுடன்

பாட்டியைப் பார்த்துவிட்டு ,

‘’பத்மா போயிட்டாளாம்! தளதளன்னு இருந்த இருபத்தினாலு வயசுக் குழந்தை’’ என்றாள் அடிக்குரலில்.

‘’மனசு குளிர்ந்த்தோ இல்லையோ? எல்லாத்தையும் கொட்டிக்கோ, ஒரு பருக்கை விடாமே!’’ என்று தொடர்ந்து உறுமிவிட்டு வெளியேறினாள்

திகைப்புடன் நாகுப்பாட்டி இலையைப் பார்த்தாள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள் மூன்று பேர்கள் சாப்பிடலாம். இன்னும் ஆவி பொங்கிக் கொண்டி

ருந்த்து. இலையில் ஓரமெல்லாம் சூட்டில் பழுப்பாகப் போயிருந்தது. அதைப்

பார்க்கப் பார்க்க இனம் புரியாத அதிர் வலைகள் உடல் முழுவதும் பரவி நடுங்கின.

‘’என்னடி பண்ணுவேன் இதை? எச்சக்கலையிலே இத்தனை அன்னத்தைக்

கொட்டியிருக்கிறே.... உங்க மாமனார் இருந்தார்னா இத்தனை தைரியம்

வந்திருக்குமா உனக்கு?

‘’சிவசிவா, அவர் போயிட்டதே நல்லது. இதையெல்லாம் தாங்கிக்க நா ஒருத்தி

இருக்கறது போறாதா?’’

‘’இப்ப இதை என்ன பண்றது?’’ கூடத்திலிருந்து காமுவின் ஒப்பாரி கேட்டது.

வெண்கலப்பானை இன்னும் சுட்டது அதை சிரம்பஃ பட்டு பாட்டி நிமிர்த்தினாள்.

கொஞ்சம் கொஞ்சமாய் சோற்றுப் பருக்கைகளை அதில் போட்டாள். கை

அசந்து போயிற்று.’’ எத்தனை பேருக்கு சாப்பாடு போட்டிருப்பேன்.! ஏண்டி, இப்படி அன்னத்தை வீணாக்குவது அடுக்குமா’’ என்று முணுமணுத்துக் கொண்டாள். ஒரு வழியாக அதை நிரப்பியதும் பாட்டி எழுந்திருந்தாள். கம்பை

பிடித்துக் கொண்டு நடக்கையில் மிகவும் தள்ளாமையாக இருந்த்து.. உடம்பு கனத்து பெரிய பாரத்தை இழுப்பது போல் இருந்த்து. கொல்லைக் குழாயில் கை கழுவி, வாயைக் கொப்பளித்துவிட்டு கூடத்துப் பக்கம் செல்ல பாட்டி தயங்கி நின்றாள். அந்தக் குழந்தை காமுவை சமாதானப் படுத்த வேண்டாமோ

பாட்டி வேறு யோசனையில்லாமல் கூடத்துக்குள் காலடி வைத்தாள். கூடம்

நிரம்பிப் போயிருந்த்து. அதுக்குள் தெருப் பொம்மனாட்டிகள்ளாம் வந்துட்டாளா என்ன?’’

பாட்டியின் பார்வையில் யாரும் படவில்லை. புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு மற்ற பெண்களின் பிடிக்கு அடங்காமல் புலம்பி

அழுதுகொண்டிருந்த காமுவை நோக்கி மெல்ல நடந்து அவளெதிரில் லேசாககஃ குனிந்து மெல்லிய நடுங்கும் குரலில் ‘’அம்மா, காமு, என்னடி

குழந்தே, இது அநியாயம்?’’ என்றாள்.

காமு , முகத்திலிருந்த கையை விலக்கி சுரீரென்று பாட்டியைப் பார்த்தாள்.

துக்கத்தோட க்ரோதமும்னா தெரியறது பார்வையிலே! இவ பார்வதியா, காமுவா??

ரத்த அணுக்கள் எல்லாம் உறைந்து போயிற்று நாகுப்பாட்டிக்கு.

குபீரென்று காமு பாய்ந்து எழுந்தாள். ‘’அம்மா சொல்ரது சரிதான். நம்மளைப்

பாவியாக்குறவ இந்தக் கிழவி! இவ ஒரு சூனியக்காரி.! வீட்டிலே இருக்கிற அத்தனை பேரையும் அனுப்பிச்சுட்டுத்தான் இவ நகரப் போறா இங்கேந்து!’’

காமுவா? காமுவா இப்படிப் பேசறா? நாகுப்பாட்டிக்குக் குலை நடுங்கிற்று.

சுற்றிலும் இருந்தவர்கள் எல்லார் பார்வையும் குற்றம் சாட்டுகிறார் போல்

இருந்த்து.

என்னடி பண்ண்டஃடும்?’’ என்றாள் பலவீனமாக,’’என்னைக் கொண்டு போக

மாட்டேங்கறானே?’’

எப்படிப் போவான்?’’ என்று பார்வதி சீறினாள்.’’ இரும்புன்னா உன் மனசு, ராஜா

மாதிரி இருந்த பிள்ளை போயி, மாப்பிள்ளை போயி , பின்னாலே பொண்ணு,பேரன்,-பேத்தி இப்பக் பொள்ளுப் பேத்தி எல்லோரும் கிளம்பிப்

போறதை ஜெரிச்சிண்டு நீ உட்கார்ந்திருக்கியே, நீ மனுஷிதானா?’’

அவள் சொல்வதையெல்லாம் அங்கீகரிப்பதைப் போல ஒரு மௌனம் அங்கே

பரவியிருந்த்து.

‘’நா என்னடி பண்ண்டஃடும்?’’ என்று பார்வதி பழித்துக் காட்டினாள்.

‘’போ, குளத்திலேயோ குட்டையிலேயோ விழு.’’

‘’என்ன மாமி நீங்க! இது கண்றாவி துக்கம் தான், ஆனா கிழவி என்ன பண்ணுவா, பாவம்?’’

உனக்குத் தெரியாது சரோஜா, என் வயிறு எரியறது! என்று பார்வதி அழுகையுடன் வெடித்தாள். ‘’பொசுக்கு பொசுக்குன்னு ஒவ்வொருத்தரா போறதும், பழி வாங்கற மாதிரி இந்தக் கிழம் உட்கார்ந்திருக்கிறதும்’’.

பக பகவென்று பார்வதியிடமிருந்து அழுகை வெடித்த்து.

‘’பாட்டி, நீங்க உள்ளே போங்கோ!’’ என்றாள் எவளோ ஒருத்தி சமயாசிதமாக.

நாகுப்பாட்டி தலையைக் குனிந்தபடி நகர்ந்தாள். தன் அறை வந்த்தும் மௌனமாக நார்மடி விரிப்பு விரித்திருந்த தன் இடத்தில் அமர்ந்தாள்.

காமுவின் எப்பவும் குளிர்ந்த முகம் விகாரமாகிப்போன விந்தையும் வார்த்தை

களும் நினைவில் நின்று குழப்பின.

நீயும், வேண்டாண்டி, விட்டுட்றீ’’---

நாகுப்பாட்டி மெல்ல எழுந்தாள். பின் பக்கமாக ஓசைப் படாமல் சுவரைப் பிடித்தபடி நடந்து சமயல் அறையை அடந்தாள். இன்னும் அவளுடைய

எச்சில் இலையும், வெண்கலப் பானையும் அப்படியே இருந்தன. பாட்டி

நிதானமாக அமர்ந்து அன்னத்தை வாயில் திணிக்க ஆரம்பித்தாள்.---

கொல்லைப்பக்கம் வந்த சரோஜா அரக்கப் பரக்க கூடத்திற்கு ஓடினாள்.

‘’ஜய்ய்யஃயோ மாமி, அந்தக் கிழவிக்கு மூளை கலங்கித்தான் போச்சு.!

இழவு வீடுன்னு தெரியும். வெங்கலப் பானையோடு எடுத்து இலையிலே

வெச்சுண்டு சோத்தை அள்ளி அள்ளிப் போட்டுக்கறா, சமயற்கட்டிலே

உட்கார்ந்திண்டு---!’’

‘’இது என்ன கண்றாவி?’’

சாதாரண மனுஷி இல்லைடி அவ!

நூறு வயசுக்கிழவி எப்படி வெண்கலப் பானையைத் தூக்கினா?’’

அதான் பாரேன் அதிசயத்தை!’’

பார்வதி விருக்கென்று ஆங்காரத்துடன் எழுந்தாள்.

‘’இன்னிக்கு விடப்போரதில்லே! என் பிராணனை எடுக்கத்தான் இருக்கு கிழம்-

அவளைத் தொடர்ந்து மற்ற கெண்டளும் வேடிக்கை பார்க்கச் சென்றார்கள்

வெண்கலப்பானை உருண்ட நிலையில் கிடந்தது.இன்னம் பாதிக்குமேல் அன்னம் இருந்த்து நாகுப் பாட்டியின் வாயிலும் தொண்டையிலும் திணிக்கப்பட்ட மீதிப்பாதி அவள் மூச்சை அடைத்திருந்த்து.

சுவரில் சாய்ந்திருந்த பாட்டியின் உடலை மெல்லத் தரையில் கிடத்திய சரோஜா

‘’இது மூளைக் கலக்கம்தான் வேற ஒண்ணும் இல்லை’’ என்றாள்

**********000****************

‘’

’’