Pages

Showing posts with label தி.ஜா.. Show all posts
Showing posts with label தி.ஜா.. Show all posts

Friday, December 16, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-4

‘’வரணும்—வரணும்—இப்படி வரணும்’’ என்று ஸ்வாமியைத்திண்ணைக்குக்
கூப்பிட்டார். ஸ்வாமி திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.

‘’நீங்கள்தானா?’’ நான் யாரோன்னு நினைச்சேன்.’’ என்றார் ஸ்வாமி.
‘’எப்ப வந்தது?’’
‘’காலமேதான். பாலகரத்திலே இவர்களோடுதான் தங்கியிருக்கிறேன்’’ என்று
கீழே உட்கார்ந்திருந்த என்னைக் காட்டினார் ஸ்வாமி.

எல்லோரும் என்னைப் பார்த்தார்.கள்.ஸ்வாமியைப் பார்த்தார்கள். கதை
சொல்கிறவர் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். திண்ணைமீது உட்காரா
விட்டாலும் நான் சகலத்தையும் துறந்த சன்யாசியாகத்தான் எனக்கு ஒரு கணம் தோன்றியது.

நின்றிருந்த ஸ்ருதிப் பெட்டி மீண்டும் ரீங்கரிக்கத் தொடங்கிற்று. கதை
தொடர்ந்தது.
ஸ்வாமி ரசித்துக் கேட்டார். நடுநடுவே சுவர் மீது சாய்ந்து கொண்டார். களைப்
பாகத்தான் இருக்க வேண்டும்.
கேகயத்திலிருந்து திரும்பிவந்த பரதன் தந்தை காலமான சந்தர்ப்பங்களைக் கேட்டு, துக்கமும் கோபமும் அடந்து ராஜ்யத்தை வெறுக்கிறான். தாயைத் திட்டுகிறான். கூனியைத் திட்டுகிறான். ராமன் இருக்கும் காட்டுக்கு எல்லாருமாகப் போய்த்திருப்பி அழைத்து வருவதென்று சாலை போட உத்தரவிடுகிறான். மணி பத்தரை. கதையை நிறுத்தினார் அவர். சுருதிப் பெட்டி
யைக் கையமர்த்தி நிறுத்தச் சொன்னார். பிறகு நிசப்ததஃதுக்கிடையே பேசினார்.
‘’தாயாதிகள் என்றால் காய்ச்சல், பொறாமை எல்லாம் கூடவே பிறந்துவிடும்.
அப்படித் தப்பித் தவறி அவர்கள் சுமுகமாயிருந்தாலும் மற்றவர்களுக்குத்
தாங்காது.—கூனியைப் போல ஏதாவது சொல்லிக் கிளப்பிவிட்டு விடுவார்கள்.
ராமாயணத்துக்கோ பாரததஃதுக்கோ போக வேண்டாம்..இதோ நம் கண் முன்னால் பார்க்கிறோம்.’’ என்று சன்யாசியைக் காட்டினார்.

இவர்களுக்கு பூர்வாசிரமத்தில் சந்தானம் சந்தானம் என்று
பெயர். இங்கிருந்து ஜம்பது மைல் அவர்கள் கிராமமஃ. கோரையாற்றுப் பாசனத்தில் ஏழுவேலி நிலம். ஏழுவேலியும் அப்படியே தங்கம். ஸாரபூமி..
விளைந்ததானால் ,ஒரு ஆளை அடிக்கலாம்.,அப்படி ஒவ்வொரு கதிரும். இரு
போகம் ஏழு வேலியும். நெல்லு கலம் இரண்டு ரூபாய் விற்ற நாளிலேயே
வருஷம் நாலாயிரம், ஜயாயிரம் கிடைக்கும்.. இப்ப கலம் பத்து ரூபாய்க்கு விற்கிறது. என்ன மோசமாக விளைந்தாலும் வருஷம் இருபதாயிரத்துக்குக்
குறையாது.. தானமும் தர்மமும் யதேஷ்டமாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
பிள்ளை, குட்டி கிடையாது. சந்தானம் என்று பெயர் வைத்தார்கள் பெற்றவர்கள். ஆனால் புத்திர பாக்கியம் இல்லாமல்போய்விட்டது. தாயாதிக்காரன்கள் எத்தனை காலமாககஃ கறுவிக் கொண்டிருந்தான்களோ,
பகவான்தான் சொல்ல வேண்டும். போன வருஷம் சித்திரை மாதம் இவர்களுக்கு ரொம்ப உடம்பு வந்து விட்டது. பிழைக்க மாட்டாமல் கிடந்தார்கள். தாயாதிக் காரன்கள் வந்து மொயத்துக் கொண்டான்கள்.அண்ணா
என்றார்கள். முத்தண்ணா என்றார்கள். பெரியண்ணா என்றார்கள்.’’எப்பவுமே
உனக்கு உலகப் பற்றே கிடையாது. பிழைக்க மாட்டாமல் கிடக்கிறாய் இப்ப.
ஆபத்து சன்யாசம் வாங்கிக் கொள்’’ என்று கரையாய்க் கரைத்தார்கள்.
சன்யாசிகளுக்கு மறு பிறவி கிடையாது. உயிருக்கு ஆபத்து வந்திருக்கிற
இந்த வேளையில் சன்யாசம் வாவ்கிக் கொண்டால் நாளைக்கே உயிர் போனாலும் ஆத்மாவுக்கு மோட்சம்—நம்ம குலத்துக்கும் பெருமை என்று இவரைக் கரைத்து சன்யாசம் எடுத்து வைத்து விட்டான்கள். படுத்த படுக்கை
யாக இருக்கிறவர் கையில் கமண்டலத்தையும், தண்டத்தையும் கொடுத்துவிட்டான்கள். ஆனால் விபரீததஃதைப் பாருங்கள். இவர்கள் நாலைந்து நாட்களில் பிழைத்துக் கொண்டு விட்டார்கள். உடம்பு தேறிவிட்டது.
நடமாட்டம் வந்து விட்டது. ஆனால் காஷாயம் கமண்டலமுடன் வீட்டில்
இருக்கலாமோ.! வீட்டைவிட்டு வெளியேறுகிற நிர்பந்தம் வந்துவிட்டது. சம்சாரமோ பரம சாது. ஒரு திரிசமன் அறியாதவள். அப்படியே கண்ணாலே ஜலம் விட்டுக் கதறிவிட்டாள். பாருங்கள்—இந்த அபர வயதில் ஊர் ஊராகப் போய்க் கொண்டு! யார் பிக்ஷக்குக் கூப்பிடுகிறார்கள் என்று காத்துக் கொண்டு!
வெய்யில், பனி, மழை என்று பாராமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு!
பரம அயோக்கியன்கள் அந்ததஃ தாயாதிகள்.?’’ என்று கதை சொல்கிறவர்
அறிமுகப் படுத்தி நிறுத்தினார்.

ஸ்வாமிகள் குனிந்த தலை நிமிரவில்லை.. குப்பென்று கண் கலங்கிற்று.. உதடு
நடுங்கிற்று. முகச்சதைகள் கோணின. விசித்து விசித்து அழத் தொடங்கினார்.

‘’மகா பாவம்—இப்பேர்ப் பட்ட பரம சாதுவை இப்படிச் செய்தவர்களுக்கு, என்ன
கிடைக்கப் போகிறதோ?’’ என்றார் கதை சொல்கிறவர்.

ஸ்வாமி மேலும் விசித்து அழுதார். அவரால் அடக்கமுடியவில்லை. எழுந்து
தண்டத்தை எடுத்து நின்றார்.

கர்ப்பூர ஆரத்தி ஆயிற்று எல்லோரும் சிறிது நின்று ஸ்வாமியைப் பார்த்து விட்டு நகர்ந்தார்கள்.
‘’என்ன அநியாயம்! இப்படிச் செய்யலாமா?’’என்றார்கள்.
ஸ்வாமி பலர் வணக்கங்களை ஏற்று விடை பெற்றுக் கொண்டு என்னுடன்
நடந்தார். கோணல் கிச்சானின்’’ பாட்டரி’’ வெளிச்சம் வழி காண்பித்தது.

ஸ்வாமிக்கு வாசல் திண்ணையில் தட்டி மறைவில் கோரைப்பாயைக் கொடுத்துப் படுக்கச் சொல்லி உள்ளே வந்தேன்.

செய்தியைச் சொன்னேன்.
‘’அழுதாரா! ஸ்வாமிகளா!’’ என்றுவியந்தாள். ‘’மறுபடி சொல்லுங்கள்—கதை
சொல்ரவர் என்ன சொன்னார்?’’
சொன்னேன்.
‘’கதை சொல்ல ஆரம்பிச்சாலே, குறும்பு,விஷமமஃ எல்லாம் வந்திடுமோ?’’ என்றாள்.
பிறகு விழுந்து விழுந்து குலுங்கிக் குலுங்கி, முந்தானையால் வாயைப் பொத்திச் சிரிக்க ஆரம்பித்தாள்.

என்ன சிரிப்பு வேண்டுக் கிடக்கிறது!
சற்று நின்றவள்’’ அழுதாரா?’’ என்று கேட்டுவிட்டு மீண்டும் ஓர் ஆவர்த்தம்
சிரித்தாள்.கண்ணைத்துடைத்துக் கொண்டாள் இருமினாள்.

‘’நீங்கள் போய் அந்ததஃ தாயாதிக்காரா கிட்ட சொல்லி ராஜி பண்ணுங்கள்.
ஊருக்குள் வராமல் களத்திலாவது உட்கார்ந்து சாகுபடியைக் கவனிக்கட்டும்.’’
என்றாள் அவள்.
அவர் தண்டமும் கமண்டலுவுமாககஃ களத்தில் உட்கார்நது, ஆட்களை அதிகாரம் பண்ணுவது போலிருந்த்து
எனக்குக் கூட இரவில் அப்படித் தோன்றிற்று சொப்பனம் என்று நினைக்கிறேன்.

காலையில் எழுந்து வாசலுக்குப் போன பொழுது,அவர் ஸ்நானத்துக்காக ஆற்றங்கரைக்குப் போகத் தயார் செய்து கொண்டிருந்தார். கோணல் கிச்சான்
பந்தல் தலையில் இடித்துவிடாமல் கூனியவாறே அவரைப் பிக்ஷக்குச்
சொல்லிக் கொண்டிருந்தான்.

**************000***********

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-3

..

.

‘’என்ன! நின்னுண்டேயிருந்தா? என்ன யோசனை இப்ப,,அவரைக் கூடத்திலே
உட்கார்த்தி வச்சுட்டு?’’
கூடத்துக்குப் போனேன். சன்யாசி தூணில் தலையைச் சாய்த்திருந்தார். பசி.
அயர்ந்துவிட்டார். என் அடியோசை கூட அவர் கண்ணைத் திறக்கவில்லை.

திரும்பி உள்ளே வந்தேன். நிலைமையைச் சொன்னேன்.
இதோ –அஞ்சு நிமிஷம். கூட்டும் பாயசமும்தான்.பாக்கி’’ என்று
அடுப்புத் தீயைக் களைக்க விட்டாள் அவள்.
‘’நாமகூட சன்சாசம் வாங்கிண்டா நல்லதில்லையா?’’ என்று கேட்டேன்.

நாம கூடன்னா? ரண்டுபேரும் சேர்ந்து சன்சாசம் வாங்கிண்டு ஆளுக்கொரு
கமண்டலமும் தண்டமும் ஏந்திண்டு, சேர்ந்து நடக்கலாம்னா??’’
‘’இல்லை, ஒருகவலை கிடையாது, பந்தம் கிடையாது. தினம் ஒரு ஊர்—ஏதோ
கிடைச்ச இடத்திலே சாப்பாடு—பகவானை நினைச்சிண்டே இருக்கிறது’’

‘’அதை அப்புறம் யோசிக்கலாம் . இலை இல்லை. கொல்லையிலே போய்
பெரிய நுனி இலையா ஒண்ணு நறுக்கிண்டு வரலாமா---?’’

இலையை நறுக்கிக் கொண்டு கூடத்திற்குத் திரும்பியபோது, ஸ்வாமி விழித்துக் கொண்டு கமண்டலுவைச் சாய்த்து, நீரால் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

பிட்சை ஆயிற்று. எங்களுக்கும் சாப்பாடு ஆயிற்று. ஸ்வாமி சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். பிறகு ஊர் உலக விஷயங்களெல்லாம் கேட்டார்.ஆத்மிக விஷயங்களைச் சொன்னார். கோணல் கிச்சான் வந்தான். அவன் மனைவியைப் பற்றி விசாரித்தார். உடையாரிடம் மருந்து வாங்கி,வாந்தி நின்று விட்டதாம்.
ஜுரமும் இல்லையாம்.மறுநாள் தன் வீட்டில் பிட்சை ஏற்குமாறு மீண்டும் ஒரு முறை வேண்டிக் கொண்டான் அவன். கர்ணிகர் வந்தார். அவர், அவர் குடும்பம், சொத்து முதலியவற்றை விசாரித்தார் ஸ்வாமி. சீதாராமன் வந்தான்.
அவனையும் விசாரித்தார். சேது வன்னியர் வந்தார். அவரையும் விசாரித்தார்.
மேலத்தருவிலிருந்து பாலுத் தென்கொண்டார் வந்தார். அவரையும் விசாரித்தார். எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டுப் போனார்கள்.

எனக்குப் பொறாமையாக இருந்த்து. அவர் யாரையும் தாழ்வாக, தவறாகப் பேசவில்லை. உபதேசத்தைத் தொழிலாக்கஃ கொண்டவர்கள் போல் யாரையும்
குறைகூறவில்லை.கிண்டல் செய்ய’வில்லை. பரம சாத்விகராக,எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னை ஏங்க ஏங்க அடித்துக்
கொண்டிருந்தார்.

சன்னியாசம் என்ற நிலையை எப்படிக் கற்பனை செய்து ஒரு மரபாகக கொண்டு வந்தாகள்? எந்த மகாமேதையின் கற்பனை அது? அவர் முன்பு
உட்கார்ந்து நினைவிழந்து கிடந்தேன் நான். தெருவில் வெய்யில் மஞ்சள் பூசிக்
குளித்துக் கொண்டிருந்த்து.

வாசலோடு போய்க் கொண்டிருந்த அக்கரை கோபாலன் ஸ்வாமிகளைக்
கண்டதும் வந்தான். வணங்கினான்..அவனையும் விசாரித்தார் அவர்.
‘’சாப்பாடு ஆயிடுத்தா? இன்னிக்குக் கதைக்கு வராப்போல்தானே?’’ என்றான்
என்னைப் பார்த்து.
‘’வரணும்’’ என்றேன்
கதையா?’’ என்றார் ஸ்வாமி.

ஆமாம். அக்கரையிலே இவர் ஊரிலே ராமாயணம் நடக்கிறது, ஒருமாசமா. நானும் தினமும் போய் வருகிறேன். சீக்கிரமாகச் சாப்பிட்டுவிட்டுத் தினமும்
புறப்பட்டு விடுகிற வழக்கம். அதைத்தான் கேட்கிறார்’’ என்றேன்.

நானும் வருகிறேனே. சாப்பிட்டுவிட்டு இதோ புறப்பட்டு விடுகிறது’’ என்று
துரிதப்டுத்தினார் ஸ்வாமி.

இருட்டுகிற சமயத்துக்குக் கிளம்பினோம். கோணல் கிச்சான் கீரைத் தண்டு
மாதிரி ஆடியவாறு முன்னால் பேட்டரி விளக்கை அடித்துக் கொண்டே நடக்க
இருவரும் பின்னால் நடந்தோம். மூங்கில் பாலத்தில் அடி வைத்து ஆற்றைக் கடந்தோம். தவளைகள் கொரகொரத்தன. சிள் வண்டுகள் இரைந்தன. தென்னை
மரங்கள் சலசலக்க,ஒரு சவுக்கைத் தோப்பு கிசுகிசுத்த்து. மூங்கில் தோப்பு உறு
மிற்று. ஸ்வாமியோடு நடக்கும் பொழுது இந்த ஓசைகள்தான் மனிதன் கேட்கவேண்டிய ஓசை, எய்த வேண்டிய பேறு என்று தோன்றியது.

ஊருக்குள் திரும்பினோம். தெருநடுவில் ஒரு பந்தலில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் தெரிந்தது. சுருதிப் பெட்டியின் ரீங்காரமும் குரலும் கேட்டன.

‘கதை ஆரம்பித்து விட்டாற்போல் இருக்கு. என்னாலே தாமதம் உங்களுக்கு’’ என்றார் ஸ்வாமி.

நெருங்கினோம். பந்தல் வந்துவிட்டது. திண்ணையில் கதை சொல்லிக் கொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தினார். கண்ணை இடுக்கி நாங்கள் வருவதைக் கவனித்தார். ஸ்வாமிகளைப் பார்த்தார்.

Tuesday, December 13, 2011

தி. ஜானகி ராமன்-யாதும் ஊரே

!

இன்னும் இரண்டு மாதங்கள் வரையில் எல்லாம் என் இஷ்டம்தான்.

நான்தான் ராஜா. இல்லை, இல்லை சாதாரண மனிதன். பாமரன்;;இஷ்

டப்படி அலைகிற சாதாரண மனிதன்.மூன்று மாத லீவில் ஒரு மாதம்தான்

போயிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் இப்படியேதான்.மார்க்கெட்டுக்குப்

போக மாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து குளிக்க மாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து சாப்பிட மாட்டேன். பஸ் ஸ்டாப்புக்கு ஓடமாட்டேன். யானா மாதிரியும், டபிள்யூ மாதிரியும் வியூகம் வகுத்து பஸ்ஸைத் தாக்க நிற்கும்

க்யூ வரிசையில் நிற்கமாட்டேன்.!

இங்கே பஸ்போன வருட வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது. பத்து நாளாயிற்றாம் கட்டி முடிய. அது வரையில் வெளியுலக வாடையில்லாமல்

கழிந்ததாம். இப்பேர்ப் பட்ட ஊரில் யார் நம்மை அதிகாரம் பண்ண? இஷ்டப்படி

தூங்குகிறேன். விழித்துக் கொள்கிறேன்.

இன்று காலையில் கூட விழித்துக் கொள்ளும் போது எட்டு மணி. பிறகு

வயலுக்குப் போய் நாற்றுப் பிடுங்கிவிட்டார்களா என்று பார்த்துவிட்டு வரும் பொழுது ஒன்பது மணி. அப்பொழுதுதான் குரல் கேட்டது.

‘’மாமோவ்!’’

கோணல் கிச்சான்தான். வ் வன்னா போட்டு வேறு யார் கூப்பிடுவார்கள் ?

‘’இருக்கேளா, பொழைச்சேன்’’ என்று ஆறரை அடி உயரமும் கூனி நிமிர்ந்தான்.

என்ன சேதி?’’

‘’

‘’சேதிதான்கை கொடுக்கணும்’’

என்ன வந்துடுத்து இப்போ?

‘’சொல்கிறேன் மாமா. காலமே எழுந்தவுடன் ஆற்றங்கரைக்குப் போனேனா?

பஜனை மடத்திலே ஒரு சன்யாசி தண்டமும் கமண்டலமுமாக உட்கார்ந்து

ஜபம் செய்து கொண்டிருந்தார். பல்லைத் தேய்த்து ஸ்நானம் பண்ணி அவருக்கு முன்னால் விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். உட்காருங்கோன்னார்.உட்கார்ந்தேன். பேரு, குடும்பம் எல்லாம் விசாரிச்சார்.

அப்புறம் பெரியவர்களுக்கு எந்த ஊரோ என்று கேட்டேன்.சன்யாஸும் கிடையாது.மார்க்கெட்டும் கிடையாது. இது பட்டணமில்லை.

பாலகரம். பட்டணத்திலிருந்து ஒரு இரவு ரயில் பயணம். ரயிலில் இறங்கி

ஒன்றரை மணி பஸஸில் பயணம். அப்புறம் மண் சாலையிலிருந்து வாய்க்கால் மதகைக் கடந்து ஊருக்குள் வர வேண்டும். அந்த மதகைக் கூட சிக்கு ஊர்

ஏது,உறவு ஏதய்யான்னார். அப்புறம்தான் அட,அசடேன்னு உதடைக் கடிச்சிண்டேன்.’’

சன்யாசிகளிடம் பூர்வாசிரமத்தைப் பற்றி விசாரிக்கப்படாதுன்னு தெரியாதா

உனக்கு? ஏண்டா சமத்து!’’

அதான் சொல்றேனேதவறிப் போயிடுத்துன்னு,

கொஞ்ச நாழி ஒண்ணும் பேசாமல் உட்கார்ந்திருந்தோம்.. அப்புறம் இன்னிக்கு

பிட்சை பண்ணி என்னை அநுக்ரகம் பண்ண்ணும்னு கேட்டுண்டேன். பேஷா

அதுக்கென்ன? செஞ்சுட்டுப் போறதுன்னார். அழைச்சிண்டு வந்தேன். உள்ளே

போனால் அப்பா அம்மான்னு முனகல் கேட்டுது. என்னடான்னு பார்த்தால்

மீனாட்சி அலங்கோலமாப் படுத்திண்டு கிடக்கா. காப்பி சாப்பிட்டவளுக்கு

என்னமோ தலையைக் கிறு கிறுன்னுதாம். கண்ணை இருட்டிண்டு வந்த்தாம்.

நாலைஞ்சு தடவை வாந்தி எடுத்த்தாம்.தொட்டுப் பார்த்தால் , உடம்பு அனலா வீசறது.. கண்ணைத் திறக்க முடியல்லே. படுத்திண்டு கிடக்கா . என்ன பண்றது? சன்யாசி வாசல் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருக்கிறார். கிடந்து

முழிக்கிறேன். என்ன பண்றதுன்னு புரியல்லே.பட்டணத்து மாமாதான் கதின்னு வந்துட்டேன். நீங்கதான் வழி காட்டணும்.’’

நல்ல கறுப்பும் கச்சலுமாக இருந்த கிச்சானின் கண் ஏற்கனவே சுண்ணாம்பு வெள்ளை.. இக்கட்டில் இன்னும் வெளுத்துக் கிடந்தது.

‘’வழி என்னடா வழி? பிக்ஷையை இங்கே பண்ணிவிட்டால் போகிறது. பட்டணத்திலே சங்கோஜப் படற மாதிரின்னா படறே.! பார்வதீ! என்று உள்ளே

பார்த்துக் கூப்பிட்டேன். வந்தாள். சொன்னேன். ‘’நானே வந்து அழைச்சிண்டு வரேன்’’ என்று கோணல் கிச்சான் முன்னே நெளிய, வெளியே வேகமாக நடந்தேன்.

கிச்சான் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த சன்யாசியைக் கண்டேன்.

எட்டு அங்கமும் பட விழுந்து வணங்கினேன்.’’ நாராயண, நாராயண’’’ என்று

என்றார் ஸ்வாமி. புன்முறவல் பூத்தார். ஜம்பது வயதிருக்கும். முண்டனம்

செய்த தலை. ஆனால் தலையிலும்முகத்திலும் ஒரு மாத ரோம்மஃ வெளுத்துக் கிடந்த்து.

‘’கிச்சானைப் பெரிய மனது பண்ணி மன்னிக்கணும்.. வீட்டில் அசந்தர்ப்பம்

அவனுக்கு. உள்ளே ரொம்ப உடம்பு சரியில்லை. பெரியவாளை பிக்ஷைக்கு

சொல்லிட்டமேன்னு கிடந்து தவிச்சுப் போயிட்டான். நான் இன்னிக்குக் கொடுத்து வச்சிருக்கேன். நாலுவீடு தள்ளி அஞ்சாவது வீடு. பெரியவா வந்து

பெரிய மனசு பண்ணி பிக்ஷை பண்ணி வைக்கிற பாக்கியத்தை எனக்குத் தரணும்.’’

அப்படியா? உடம்பு சரியாயில்லை என்று சொல்லவே இல்லை இவர்’’

பெரியவா கிட்ட காலமே சொல்ரபோது அவனுக்குத் தெரியாது. வந்து பார்த்தா, ஒரே வாந்தியா எடுத்து , தலை தூக்க முடியாமல் கிடக்கிறாளாம்.

பெரியவா கிட்ட சொல்ல எப்படி வாய் வரும் அவனுக்கு.? ஆசையா அழைச்சிண்டு வந்தான். லபிக்கலே.அவனும் நானும் வேறே இல்லே. அங்கே வந்துடணும். அவ்விடத்திலே.’’

‘’செஞ்சுட்டா போறது’’

நான் கொடுத்து வெக்கலே இன்னிக்கு. பெரியவா இருந்து நாளைக்கு இங்கே

பிக்ஷைபண்ணிட்டுத்தான் போகணும்.’’ என்றான் கிச்சான்.அவன் குரல் நடுங்குவதைக் கேட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தார் ஸ்வாமி.

குழந்தை, சுபாவம், கவலைப் படாதீர் நாளைக்கு இங்கேயே பிக்ஷையை

வச்சுக்கறேன். ஒரு ஊர்லே ஒரு நாளைக்கு மேலே தங்கும்படியா இதுவரை

நேரலே. நீர் சொல்கிறபோது என்ன பண்றது?---செஞ்சுடலாம்.’’

தயவு பண்ண்ணும். அப்ப, நான் உடையாரைப் பார்த்து மருந்து வாங்கிண்டு

வரேன்’’ என்று மறுபடியும் பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்

கிச்சான். பெரியவர் தண்ட கமண்டலங்களைக் கையில் எடுத்து, பாதக் குறட்டில் ஏறி நடந்து வந்தார். கை கால் கழுவி , தாழ்வாரத்தில் தூண்டியில் போட்டிருந்த மணைமீது முற்றத்தில் ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்தார். இருவரும் விழுந்து வணங்குனோம்.

சொந்த வீடுதானே?’’

ஆமாம்’’

பூஸ்திதி—‘’

ஏதோ சொல்பம் இருக்கு’’

சொல்பம்னாநாலுவேலி, ஜந்து வேலி—‘’

‘’அவ்வளவு இருந்தால் பட்டணத்திலே போய் ஏன் இருபத்தைந்து வருஷமாய்ப்

பிழைக்கணும்! அரைவேலிக்குக் கொஞ்சம் கூட, அவ்வளவுதான்’’

‘’அப்படியா? எங்கே ஜாகையோ?’’

அதையும் சொன்னேன்.

‘’பேஷ், பெரிய மனுஷா, மேதாவிகள்ளாம் இருக்கற இடம்னு சொல்வாளே அதை!’’

‘’ஆமா, ஆமா’’

நாலைந்து பெரிய பெயர்களைச்சொல்லி, அவர்கள் எல்லாம் அங்கேதான் இருக்

கிறார்களா என்று கேட்டார்.

‘’ஆமாம்’’

நல்ல சம்பத்து; நல்ல செல்வாக்கு. இல்லையா?’’

‘’தகப்பனார்கள் சம்பத்தைத் தேடி வைத்தார்கள் அதைச் செலவழித்தும் செலவழிக்கிறார் போல பாச்சை காட்டியும் செல்வாக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்’’

ஸ்வாமி சிரித்தார். ஏன் சிரித்தார் என்று புரியவில்லை. சற்றுக் கழித்துப்

பெருமூச்சு விட்டார். யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. என்னமோ பகவான் கொடுக்கிறான். இஷ்டமில்லேன்னா கொடுக்காமல் இருக்கான். தகப்பனார்

சம்பாதிச்சு வச்ச பணத்தையும் பகவான் இஷ்டப்பட்டாத்தானே இவா கையிலே

கொடுப்பான்?’’

தி. ஜானகி ராமன்

பட்டணத்தில் வேலை பார்த்துக்கொண்டு, வாழ்க்கையைப் பல நெருக்கடி

களுக்கிடையே நடத்திக் கொண்டிருக்கும் நடுத்தர மக்களுக்கு ஒரு

மாறுதலாக பூர்வீககஃ கிராம வாழ்க்கை கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக

இருக்கும். அப்படியே துள்ளிக் குதிப்பார்களோ? விடுதலை, விடுதலை என்று

இப்படித்தான் கூத்தாடுவார்களோ? தி. ஜானகிராமனின் விஸ்தாரமான

விவரிப்பால் நமக்கும் அந்த ஆசை தொற்றிக் கொள்கிறதே! !

‘’ ஒரு மாதமாக எல்லாமே என் இஷ்டப்படிதான் நடக்கின்றன!

இஷ்டப் பட்டபோது குளிக்கிறேன். இஷ்டப் பட்ட போது சாப்பிடுகிறேன்.

நினைத்தபோது தூங்குகிறேன்அதுவும் பகலில்!கால் மணி அரை மணி

இல்லை!நேற்று உச்சிவேளைக்குச் சாப்பிட்டுப் படுத்தவன் இந்நச் சூரியன்

மறைந்தால் ஒழியக் கண்டளைத் திறப்பதில்லை என்று சபதம் செய்து

கொண்டாற்போல, அந்தி மயங்கிக் கறுக்கிற வேளைவரை தூங்கியிருக்கிறேன்

அப்புறம் இரவு மூன்று மணிக்குத்தான் படுத்தேன். அது வரையில் கோணல்

கிச்சானோடு வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டையடித்தேன்!

என்னை யார் கேட்கிறது!’’