Pages

Tuesday, June 26, 2012

பெரியாரைப் பேணுதல்-3


லா சா ரா பெண்ணாகவே அவதரிக்கிறார் இந்தப் 'பாற்கடல்'இல்! ஒரு தலை தீபாவளி நாட்டுப் பெண் தன்கணவனிடம் முதல் கடுதாசியில் மனம்திறந்து பேசுகிறாள்! கூட்டுக் குடும்பத்தில், அனுசரணையான,அழகான குடும்பச் சூழல், அதில் புயலின் சலனமும் உண்டு! அந்தநாளைய நடுத்தரக் குடும்பத்தைக் கண்முன்னே அப்பிடியே கொண்டுவந்துட்டார்! காவியமாய்,கவிதையாய் மிளிர்கிறது! ரசித்தேன்! பெண்சுதந்திரம் அன்பில் கரைந்து விடுகிறது! லாசாராவை என்ன பாராட்டினாலும் தகும்! அன்பு, தங்கமணி அமரர் லா.சா. ராமாமிருத்தஃதிற்கு ஒரு ரசிகையின் அஞ்சலியைப் பார்க்கிறோம். அவர் தனது ‘’பாற்கடல் ‘’ கதையில் நமது பண்பாட்டின் பொக்கிஷமான கூட்டுக் குடும்பத்தின் பெருமைகளை, வசதிகளை, பெரியோரைப் பேணவேண்டிய முறைகளை என்றும் அழியா ஓவியமாகப் பதிவு செய்துள்ளார். அதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. வாழ்க லா.ச. ரா. புகழ்..

No comments:

Post a Comment