Pages

Tuesday, January 10, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-15

இரண்டு கழுகுகள் வந்து சாப்பிடுமாமே, அந்த க்ஷேத்திரமா?’’

‘’ஆமா ஜயா, ஆமா! அது இன்னொரு சமயம் என்று சொல்லிவிட்டால் அப்படியே விட்டு விடவேண்டும். திருப்பித திருப்பி பேசக் கூடாது! நாம்
போகிறது மஹாபலிபுரம்! அங்கே இருக்கிற ஆட்களைக் கேட்டீரானால்
(சிரித்து)மகாபலி சக்கரவர்த்தி ஆண்ட தேசம், அதனால் அந்தப் பேர் வந்துவிட்டது என்பார்கள்’’

‘’’மாமல்லபுரம் என்று நான் படித்திருக்கிறேன்! சார்’.

‘’ரைட்! நரசிம்மவர்மன் என்கிற பல்லவ ராஜா காலத்து வேலை இதெல்லாம்.
ஆயிரத்து முன்னூறு வருஷத்துக்கு முந்தி எப்படி இருந்திருக்கும் என்று
ஊகித்துக் கொண்டு பார்க்க வேண்டியது, மிஸ்டர்1 இந்தச் சிலைக்கு மூக்கு
உடைந்திருக்கே, அதற்குக் கை இல்லை.யே!’’’என்று குறையைக் கண்டு
பிடித்தால் அர்த்தம் இல்லை’’.

‘’இந்தநாளைக் கட்டடம் நூற்றிருபது வருஷத்துக்கு அப்புறம் இருக்குமா என்று
சொல்கிறதற்கில்லை! அந்தக் காலத்தில் இதெல்லாம் செயதார்கள் என்றால் எத்தனை ஆச்சரியம்! கல்லைக் குடைந்திருக்கிறார்கள் ஜயா, வெணெய் மாதிரி!’’

‘’ஆச்சரியம் சார்!’’

‘’நீர் மஹாபலிபுரத்தை ஒரு சிற்பக் கலாசாலை என்கிற மாதிரி பாவித்துப் பார்க்க வேண்டும் அங்கே எத்தனை எத்தனையோ இளைஞர்கள் சிற்பம் கற்றுக் கொண்டார்கள் என்று நான் சொல்கிறேன் ‘பகீரதன் தபஸ்’ என்று இரண்டு இடத்தில் இருக்கிறது. ஒன்றில் வேலை அரையே அரைக்கால் பாகம் செதுக்கினவுடன் நின்றுவிட்டது.. அதறகு என்ன அர்த்தம்? கல் சுகம் இல்லை என்று வேறு இடத்தில் தொடங்கியிருக்கிறார்கள் அல்லது இரண்டு ‘பாட்சு’கள்
ஏக காலத்தில் வேலை செய்திருக்கின்றன.--. எத்தனை எத்தனையோ இடங்களில் இந்த மாதிரி வேலை தொடங்கி நின்றிருக்கிறது நான் காணபிக்கிறேன்.’’

‘’அது உங்கள் ஹேஷ்யந்தானே?’’ என்று கேட்டார் மைத்துனர்.

சுவாமி உடனே சீறினார்.’’ எல்லாருமே ஹேஷ்யம்தானே செய்கிறார்கள்?

ஹிஸ்டரி பூராவும் ஹேஷ்யம்தானே? நீங்களே கண்ணால் பாருங்களேன்.
அர்ஜூனஃன் தபஸ் என்கிறார்களே, அதைநான் ‘பகீரதன் கங்கை கொண்டு வந்தது’ என்று சொல்கிறேன். நடுவில் கங்கை வருகிற மாதிரி ஒரு பள்ளம்.

கீழே கங்கை ஓடுவது போல் ஓர் அகழ்.. மழை பெய்யும் போது இதைக் கற்பனை செய்து பார்த்தால் நன்றாக விளங்கும்.. அர்ஜூனனஃ தபஸில் இதெல்லாம் எங்கேயிருந்து வந்தது? நான் சொல்கிறேன்—‘’

‘’உங்களுக்குப் பயந்துகொண்டு நான் ஒப்புக் கொள்கிறேன்’’! என்றார் மைத்துனர் தமாஷாக.

‘’அவசியம் இல்லை நீர் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஒன்றும் குடி முழுகி விடாது.!’’

‘’ஒரு வேளை ஒரு ஆடசி முடிந்து, மற்றோர் ஆடசி ஆரம்பித்து, பின்னால் வந்தவனுக்கு சிற்பத்தில் அக்கறை இல்லாமல் இருந்து__’’

‘’அப்போ ஏன் ஜயா ஒரேமாதிரி இரண்டு இருக்கிறது என்றால்?’’

இதற்குள் மஹாபலிபுரம் வந்துவிட்டது..’’ நான், நீ’’ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்த கைடுகளை விரட்டிக் கொண்டு, சுவாமி ஒவ்வொரு இடமாககஃ காண்பித்தார். பெரியதொரு கற்பாறையின் மேல் வரிசையில் சூரிய , சந்திர இந்திராதி தேவர்களையும், அடுத்த வரிசையில் வனங்கள், யானைகள், மான்கள், மிருகங்களையும், இடையே நீர்பரப்பில் நாகங்களையும் காட்டியிருந்தது வேதாந்தத்தை பிரமிக்கச் செய்தது.


ஒரு முனீந்திரர் பூஜை செயதல், ஒரு சாதகன் குடத்தில் ஜலம் கொண்டு செல்லுதல், ஒருவன் வஸ்திரத்தைப் பிழிதல், மான் பின் கால் குளம்பினால்
கண் இமையை சொறிந்து கொள்ளுதல் இவையெல்லாம் ததஃரூபமாக இருந்தன. ஹாஸ்ய ரசத்திற்கும் இடம் கொடுத்து, பூனை ஜபம் செய்வதைச் செதுக்கி இருந்தார்கள் உண்மைப் பக்தன் ஒருவன் இருந்தால், போலிப் பக்தனும் தானாகவே அங்கே முளைத்துவிடுகிறான் என்பதை விளக்குவதற்காகவே இது இருக்க வேண்டும்.


‘’நான் சொன்னதை ஒப்புக் கொள்கிறீரா, வேதாந்தம், இல்லையா? அவர்களைப் பார்க்க வேண்டாம். உம்முடைய பகுத்தறிவு என்ன சொல்கிறது.? பாறை இடையிலே பள்ளம், கீழே அகழ்—கங்கை என்று அர்த்தமா இல்லையா?’’


‘’ஆமாம் என்று நினைக்கிறேன்!’’ என்றான் வேதாந்தம்.

‘’சும்மா என்னைப்க் காக்காய்பிடிக்க வேண்டாம்! அதனால் ஒன்றும் பிரயோசனம் ஏற்படப் போவதில்லை.’’ என்றார் சுவாமி.

வேதாந்தத்திற்கு தலை சுற்றும் படி அங்கும் இங்கும் எங்கும் அழைத்துக் கொண்டு போனார் சுவாமி.. மகிஷாசுரமர்த்தனியின் சிலாரூபமும் சேஷசாயியின் சிற்பமும் எதிர் எதிராக இருந்த குகையில் வெகு நேரம் தாமதித்தார்கள். படங்களில் பலதடவை சிம்மவாகனத்தில் மகிஷாசுரமர்த்தனிய்யும் ,கதையைத் தடவியபடி மகிஷாசுரனையும் வேதாந்தம் பார்த்திருக்கிறான். ஆனால் நேரில் காணும் போது அதில் கண்ட காம்பீர்யமும் பராசக்தியின் முகத்தில் இருந்த புன் சிரிப்பும் அவனை ஆட்கொண்டன. ‘’என்னதான் புகைப் படங்களில் பார்த்தாலும் நேரில் காணகிற சுகம் இல்லை.’’ என்றான்.

‘’ஜயா! நேரில் கண்டால்கூடப் போதாது! ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன் மனசைத் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறேனே! கல்லைக் குடைந்திருக்கிறார்களே, ஒரு இடத்தில் உளி அதிகம் விழுந்துவிட்டால் அத்தனையும் பிரயோசனம் இல்லை. குப்பை ஆகிவிடும்.! சித்திரம் எழுதினால் அழித்து மறுபடி எழுதலாம்.. சிற்பத்தில் பிசகு பண்ணிவிட்டால், அதன் மேல் முட்டிக் கொண்டு மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதுதான்!’’

‘’அதெப்படி சார் முடிந்தது?’’

‘’அந்தப் பல்லவ ராஜா சிற்பியிடம் , நீர் உம்ம குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்.நான் அந்தக் கவலை பூராவையும் பட்டுக் கொள்கிறேன்.நீர் உமது இருதயம் பூராவும் இதில் வைத்து விடும்’ என்றான் அப்படியே நடந்தது. இப்போ மாதிரி ஒன்பதரை மணிக்கு வந்து ஜந்து அடிக்கப் பத்து நிமிஷம் இருக்கிற போது மேஜையை மூடிக் கொண்டு போகிறபடி வேலை செய்திருந்தால் நடந்திருக்குமா?’என்று கேட்டார்.


‘’இப்போது யாருக்குச் சிற்பம் வேண்டும்?! பிளாஸ்டிக்கில் திறமையை ஏற்றிக் கொண்டு போகிறார்களே! பழைய சிற்பங்களைப் பார்த்து ஜாக்கிரதை செய்து காப்பாற்றிக் கொண்டு வந்தாலே போதும்.!’’ என்றார் மைத்துனர்.


ஓர் இடத்தில் தனிமையில் ஜமக்காளத்தை விரிக்க, அதில் அவர்கள் உடகார்ந்து இட்லி பலகாரம் செய்தார்கள். நெய்யையும் எண்ணெயையும் தாராளமாக ஊற்றி, சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்’ வன்று வேதாந்தத்தை வற்புறுத்தினார் சுவாமி.


வேதாந்தம் சங்கோசப் பட்ட போது, இனிமேல் ஒன்பது மணிக்குத்தான் சாப்பாட்டைப் பார்க்கலாம். அதுவும் அவர்கள் போடுவார்களோ என்னவோ! இங்கே வேண்டிய அலைச்சல் பாக்கியிருக்கிறது. சீக்கிரம் ஆகட்டும்!’’ என்றார்.


மறுபடி சிற்பங்களைப் பார்த்தார்கள், ஏழு ரதங்கள் , நிறகும் பெரிய யானை, படுத்திருக்கும் மாடு இவைகளை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு, கடற் கோயிலுக்கு வந்தார்கள். அது ஒரு சொப்பன உலகம் மாதிரியே இருந்தது., வேதாந்தத்துக்கு. பெரிய பெரிய அலைகள் மோத, விற்விற்றென்று உப்பங்காற்றுவீச,கோயில் வாசற்படியின் மீது தன்னை மறந்து நின்றுவிட்டான்.


‘’ஒரு விஷயம் கவனித்தீரா? சோமாஸ்கந்தன்தான் இங்கே அதிகம். பரமசிவன், பார்வதி, குழந்தை ஸ்கந்தன்—அந்த ராஜாவின் குல தெய்வம்!’’


‘’ஏன் வராகர் கூட இருப்பாரே?’

‘’இருக்கத்தான் இருப்பார் சைவம், வைணவம் இரண்டும் இங்கே உண்டு!’’

‘’ஆமாம். கிருஷண்ன் கோவர்த்தனகிரியைத் தூக்குகிற அறபுத சிற்பம் பார்த்தீரே, கோகுலத்தில் ஒரு காடசி என்னமாககஃ காட்டியிருக்கிறார்கள்.! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பாவத்தில் இல்லை.? என்ன ‘ஆப்ஸர்வேஷன்’ ! என்ன திறமை! மனசால் நினைக்கலாம். வெளியில் அது வர வேண்டாமா?’’

‘வராகர் கோயில் இன்றைக்கு உண்டா?’’ என்று கேட்டாள் ஸ்ரீமதி சுவாமி.

‘’ஓ, மெழுகுவர்த்தி, தீக்குச்சி சகிதம் வந்துவிட்டேனே1 மிஸ்டர் வேதாந்தம் பார்க்க வேண்டாமா? அவர் பெரிய எழுத்தாளர். நாளைக்கு எல்லாம் எழுதுவாஃர்என்னைப் பற்றிக்கூட ஏதானும் இரண்டு வார்த்தை எழுதுவார்—மிஸ்டர், என்னை அதில் கண்டபடி திட்டிவிடப் போகிறீர்!’


இருள் கவிந்து கிடந்த வராகர் கோயிலில் மெழுகுவர்த்தி உதவியுடன் பிரவேசித்தார்கள். வெளியே உள்ள சிற்பங்களில் உப்பங்காற்று தாக்கி, ஓரளவு பாதித்திருந்தது. இங்குள்ளவை புத்தம் புதியனவாககஃ காணப் பட்டன. கஜலட்சுமி,கங்காதரர், மகாவிஷ்ணு, மகிஷாசுரமர்த்தனி இவர்களுடன் பல்லவ அரசன் இரு மனைவியருடன் வரும் காடசி ஒன்றும் இருந்தது.


‘’ஒரு காலத்தில் வேதாந்தம்—இந்தக் கடற்கரையில் லைட்ஹவுஸ் இருந்தது.
அதோ பழைய ‘லைட் ஐவுஸ்’. பார்த்துக் கொள்ளுங்கள்.!’’

‘’ஓ’’! என்றான் வேதாந்தம்

‘’ இதெல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதவே போதாது, இருபது தடவை பார்க்க வேண்டும். நான் நினைத்தால் இங்கே வந்து விடுவேன். எனக்குப்
பார்க்க ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அடிக்கடி பார்த்தால்தான்,
அந்த நாளில் என்ன ஜடியாவுடன் செய்தார்கள் என்கிறது விளங்கும். அமெரிக்காவில் மூன்று நாள் இருந்துவிட்டு, அந்த ஊர் கலாச்சாரம் பூராவும் எனக்குத் தெரியும் ‘’ என்று இப்போ சிலபேர் சொல்கிற மாதிரி, மகாபலிபுரத்தை ஒருதரம் பார்த்துவிட்டு, ‘பேஷாயிருக்கிறது!’’ என்றால் போதாது’’


‘உங்கள் மாதிரி அவரையும் அடிக்கடி வரச் சொல்லுகிறீர்களா?’ என்று கேட்டார் மைத்துனர்.

‘’அட,, உமக்குத் தெரியாது, யோசனை பண்ணும் என்கிறேன். வெறுமனே பார்த்துவிட்டு, ‘ஆஹா , அற்புதம் என்று சொல்லிவிட்டு, மறந்து போனால்
பிரயோசனம் இல்லை. நல்ல பௌர்ணமி சந்திரிகையில், பால் மாதிரி நிலாவிலே, சமுத்திரக் கரை. அலை அடிக்கிறது. சுற்றிலும் சிற்பங்கள் இருக்கின்றன. இங்கே வந்து உலாவினால் எப்படி இருக்கும்1 பல்லவ ராஜா.- சிற்பம் என்றால் ஒரே பயித்தியம் அவன் இந்தக் காடசியை எப்படி அநுபவித்
திருப்பான்.—அட1 யோசித்துப் பாரும் ஜயா, சும்மா நிற்கிறீரே?’’ என்று அதட்டினார் சுவாமி..


இப்படியே மேலும் ஒரு மணி நேரம் அங்கே சுற்றிவந்தார்கள். ஒவ்வொன்றிற்கும் சுவாமி தமது பிரத்யேகமான அபிப்ராயத்தைத் தெளிவுடன் கூறினார். ‘’நான் சொல்கிறேன் என்று ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. யோசித்துப் பாருங்கள்.!-வந்துவிட்டதா பெருமூச்சு1(சிரித்து) இத்தனை நாழி இல்லையே என்று பார்த்தேன்1 அப்படியே இங்கேயே விட்டுவிட்டுப் போய் விடுவேன்—ஆமாம்1’’ என்றார்


திரும்பும் போது சந்திரன் உதயமாகிவிட்டான். வழியில் ‘வெண்ணெய்க் கல்’லைக் காட்டினார். ‘’எத்தனை சிறிய இடத்தின் மீது எத்தனை பெரிய கல்
ஆயிரம் வருஷத்துக்கு மேலாக நிற்கிறது. அப்படித்தான் நம்ம உலகமும் அந்தரத்தில் நிற்கிறது. வாரும்! அடியில் உடகார்ந்து பார்க்கிறீரா?’’

இன்னொரு சமயம் ஆகட்டும் ‘’ கன்றான் வேதாந்தம்

திருப் போரூர் மார்க்கமாக வண்டியை விட்டார் சுவாமி.சரியாக ஏழேமுக்கால்
மணிக்குத் திருப்போரூர் முருகன் முன்னிலையில் நின்றார்கள். ‘’சந்நிதியைப் பார்க்கலாம் அல்லவா?’’என்று கேட்டார்.

‘’எனக்கு முருகன் என்றால் ரொம்பப்பிடிக்கும், சார்!’ என்றான் வேதாந்தம்.

‘’அப்படியானால் முருகன் என்னைக் காப்பாற்றிவிட்டார்.சீக்கிரம் ஆகட்டும்
சார். இன்னும் இருபத்தெட்டு மைல் இருக்கிறது. உமக்குப் பையன்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். பாடப் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு—போகாவிட்டால் உத்தியோகம் போய்விடும். நான் திட்டு வாங்க வேண்டும்.1’’


இப்போதுதான் வேதாந்தம் இந்த உலகத்துக்கே வந்தான் என்று சொல்ல வேண்டும்.!.ஏதோ ஒரு பல்லவ ராஜாவாகவோ அல்லது வாழ்க்கையில் தேவைஎதுவும்இல்லாத பிரபுவாகவோ இதுவரை எண்ணி, கற்பனாலோகத்தில் சஞ்சரித்துத் தன்னை மறந்திருந்தான். சந்தானம் அய்யங்கார்வீடு, சீனி, ராகவன் பேச்சு, வைதேகியின் கொடும் பார்வை, அடிமைப் பிழைப்பு-எல்லாம் ஞாபகம் வந்து , முகம் வாட்டம் கண்டது.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்).

6 comments:

  1. ஆஹா மஹாபலி புர சிற்பங்களை நல்லா வே ரசிக்கவைத்த எழுத்து.

    ReplyDelete
  2. இப்படி நம்மை மஹாபலிபுரம் அழைத்துச் சென்று
    விரிவாக சுற்றிக்காட்டி விளக்கிக் கூற யார் இருக்கிறார்கள்?நீங்களும் ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி அம்மா

    ReplyDelete
  3. சென்ற மாதம்தான் மகாபலிபுரம் போய்வந்தேன்
    இதைப் படித்தபின் போயிருந்தால் இன்னும் ரசனையுடன்
    அனுபவித்து பார்த்திருக்கமுடியும் என நினைக்கிறேன்
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ரமணி,
    நீங்கள் சொல்வது சரிதான். நான் அங்கு போய் நீண்ட நாட்களாகின்றன.அடுத்தமுறை செல்லும்போது இவரது பார்வையோடு பார்க்க வேண்டும்.நன்றிசார்

    ReplyDelete
  5. @காளிதாஸ்,
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete